Showing posts with label . . வரலாறு. Show all posts
Showing posts with label . . வரலாறு. Show all posts

Monday, September 12, 2016
































































ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.

ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.

வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க வில்லையே! ஏன்?

மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.

பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.

""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில் பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.

இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.

கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.

பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.

அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.

சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.

சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.

இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.

ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.

""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.

- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.

இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.

அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.

"பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.

""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.

அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.

இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.

கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.

பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.

அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.

காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.

எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.

அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.

""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.

1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.

பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''

சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''

பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?''

சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.

""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.

இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.

பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.

இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.

""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

"கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.

""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.

""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.

பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும்.

ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.

வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.

திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.

""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.

நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.

""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''

பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.

அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:

""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)

மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.

"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன? பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.

சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை. அது "யுகாக்கினி'.

நன்றி :- வைரமுத்து, தினமணி















யுகத்துக்கு ஒருவன் !
































































ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.

ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.

வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க வில்லையே! ஏன்?

மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.

பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.

""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில் பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.

இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.

கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.

பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.

அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.

சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.

சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.

இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.

ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.

""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.

- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.

இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.

அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.

"பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.

""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.

அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.

இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.

கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.

பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.

அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.

காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.

எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.

அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.

""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.

1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.

பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''

சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''

பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?''

சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.

""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.

இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.

பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.

இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.

""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

"கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.

""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.

""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.

பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும்.

ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.

வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.

திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.

""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.

நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.

""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''

பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.

அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:

""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)

மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.

"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன? பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.

சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை. அது "யுகாக்கினி'.

நன்றி :- வைரமுத்து, தினமணி















Tuesday, August 30, 2016



ஜின்னாவோடு மவுண்ட் பேட்டனும் நேருவும்...


முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தானே செய்கிறோம். அப்படியானால், இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு நாள் குறித்ததிலும் ஏதாவது காரணம் இருக்கத்தானே செய்யும்?

சுதந்திரம் வழங்குகிற முக்கியமான வேலைக்காகவே இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக (இன்றைய குடியரசுத் தலைவருக்கு இணையான பதவி அது) நியமிக்கப்பட்டார் மவுண்ட் பேட்டன். ஆளும் உரிமையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்திடமிருந்து இந்தியர்களுக்கு மாற்றுவதற்கான சட்ட முன்வடிவில், இந்திய விடுதலைக்கு அவர் குறித்திருந்த தேதி 1948-ம் ஆண்டு ஜூன் 30. இது ரொம்பத் தாமதம் என்று எதிர்ப்புக் கிளம்பியது. வேறு வழியில்லாமல், 1947 ஆகஸ்ட் மாதமே சுதந்திரம் வழங்குவது என்று முடிவெடுத்தார் மவுண்ட் பேட்டன். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நாள் ஆகஸ்ட் 15.

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்த ஜப்பான் சரணடைந்த தேதி அது (15.8.1945). நேசப் படைகளின் தெற்காசிய கமாண்டராக இருந்தவர் மவுண்ட் பேட்டன். அதனால், அவருக்கு ஆகஸ்ட் 15 அதிர்ஷ்ட நாளாகிவிட்டது.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ஆங்கிலத் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கும். ஆனால், இந்துக்கள் கடைப்பிடிக்கிற சக ஆண்டுக் கணக்குப்படி, அதிகாலையில்தான் அடுத்த நாள் தொடங்கும். முன்னிரவிலேயே அவசரமாகச் சுதந்திரம் வழங்கப்பட்டதால், இந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14.

இருந்தாலும், சட்டபூர்வமான ஆவணங்களின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15-ஐத்தான் சுதந்திர தினமாகக் கருதின. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் சுதந்திர தின அஞ்சல் தலையில்கூட ஆகஸ்ட் 15 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஆண்டிலிருந்தே (1948) ஆகஸ்ட் 14 ஆக மாற்றிவிட்டது பாகிஸ்தான். காரணம், இஸ்லாமிய மார்க்கப்படி ரமலான் மாதத்தின் 27-ம் நாள் மிகவும் விசேஷமானது. அந்த நாள், ஆங்கிலத் தேதியான ஆகஸ்ட் 14-ல் வந்தது. அதனால், அதையே தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துக்கொண்டார்கள், கொண்டாடுகிறார்கள். ஆக, அவர்கள் ஒருநாள் முன்பே சுதந்திரம் பெற்றதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

நன்றி :-  .கே.மகேஷ், இந்து

இந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14.



ஜின்னாவோடு மவுண்ட் பேட்டனும் நேருவும்...


முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தானே செய்கிறோம். அப்படியானால், இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு நாள் குறித்ததிலும் ஏதாவது காரணம் இருக்கத்தானே செய்யும்?

சுதந்திரம் வழங்குகிற முக்கியமான வேலைக்காகவே இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக (இன்றைய குடியரசுத் தலைவருக்கு இணையான பதவி அது) நியமிக்கப்பட்டார் மவுண்ட் பேட்டன். ஆளும் உரிமையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்திடமிருந்து இந்தியர்களுக்கு மாற்றுவதற்கான சட்ட முன்வடிவில், இந்திய விடுதலைக்கு அவர் குறித்திருந்த தேதி 1948-ம் ஆண்டு ஜூன் 30. இது ரொம்பத் தாமதம் என்று எதிர்ப்புக் கிளம்பியது. வேறு வழியில்லாமல், 1947 ஆகஸ்ட் மாதமே சுதந்திரம் வழங்குவது என்று முடிவெடுத்தார் மவுண்ட் பேட்டன். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நாள் ஆகஸ்ட் 15.

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்த ஜப்பான் சரணடைந்த தேதி அது (15.8.1945). நேசப் படைகளின் தெற்காசிய கமாண்டராக இருந்தவர் மவுண்ட் பேட்டன். அதனால், அவருக்கு ஆகஸ்ட் 15 அதிர்ஷ்ட நாளாகிவிட்டது.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ஆங்கிலத் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கும். ஆனால், இந்துக்கள் கடைப்பிடிக்கிற சக ஆண்டுக் கணக்குப்படி, அதிகாலையில்தான் அடுத்த நாள் தொடங்கும். முன்னிரவிலேயே அவசரமாகச் சுதந்திரம் வழங்கப்பட்டதால், இந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14.

இருந்தாலும், சட்டபூர்வமான ஆவணங்களின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15-ஐத்தான் சுதந்திர தினமாகக் கருதின. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் சுதந்திர தின அஞ்சல் தலையில்கூட ஆகஸ்ட் 15 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஆண்டிலிருந்தே (1948) ஆகஸ்ட் 14 ஆக மாற்றிவிட்டது பாகிஸ்தான். காரணம், இஸ்லாமிய மார்க்கப்படி ரமலான் மாதத்தின் 27-ம் நாள் மிகவும் விசேஷமானது. அந்த நாள், ஆங்கிலத் தேதியான ஆகஸ்ட் 14-ல் வந்தது. அதனால், அதையே தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துக்கொண்டார்கள், கொண்டாடுகிறார்கள். ஆக, அவர்கள் ஒருநாள் முன்பே சுதந்திரம் பெற்றதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

நன்றி :-  .கே.மகேஷ், இந்து





கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பெங்கால் என மாற்றும் தீர்மானத்துக்கு அம்மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று விதி எண் 169ன் கீழ் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் இப்போதைய பெயரை பெங்கால் என்று மாற்றும் அத்தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘பங்களா என்ற பெயர் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்கது. ஆங்கிலத்தில் பெங்கால் என்று மாநிலம் அழைக்கப்படும்’ என்றார்.

இந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர்த்தன. இதைத்தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஆங்கில எழுத்து வரிசைப்படி, கடைசியாக வந்ததால், எல்லா கூட்டங்களிலும் கடைசியில்தான் பேச வேண்டிய நிலை அம்மாநிலத்துக்கு இருந்தது. இப்போது ‘பெங்கால்’ என்று மாற்றப்பட்டுள்ளதால், ‘பி’ என்ற எழுத்துடன் பெருமளவில் முன்னே வந்துவிடும். எனினும், வங்கமொழியில் மேற்குவங்கம், ‘பங்களா’ என்று அழைக்கப்படும்.

நன்றி :- தினகரன்

பெங்கால் பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவை ஒப்புதல் !






கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பெங்கால் என மாற்றும் தீர்மானத்துக்கு அம்மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று விதி எண் 169ன் கீழ் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் இப்போதைய பெயரை பெங்கால் என்று மாற்றும் அத்தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘பங்களா என்ற பெயர் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்கது. ஆங்கிலத்தில் பெங்கால் என்று மாநிலம் அழைக்கப்படும்’ என்றார்.

இந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர்த்தன. இதைத்தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஆங்கில எழுத்து வரிசைப்படி, கடைசியாக வந்ததால், எல்லா கூட்டங்களிலும் கடைசியில்தான் பேச வேண்டிய நிலை அம்மாநிலத்துக்கு இருந்தது. இப்போது ‘பெங்கால்’ என்று மாற்றப்பட்டுள்ளதால், ‘பி’ என்ற எழுத்துடன் பெருமளவில் முன்னே வந்துவிடும். எனினும், வங்கமொழியில் மேற்குவங்கம், ‘பங்களா’ என்று அழைக்கப்படும்.

நன்றி :- தினகரன்

Monday, August 29, 2016

முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் காலமானார்



சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் நேற்று இரவு 9.48 மணிக்குக் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் ஆறாவது அதிபரும் நீண்டகாலம் அந்தப் பதவியில் இருந்த வருமான திரு நாதனின் உயிர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பிரிந்தது. 1999 முதல் 2011 வரை இரண்டு முறை சிங்கப்பூர் அதிபராக திரு நாதன் பதவி வகித்தார். திரு நாதனின் மரணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலக அறிக்கை பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரது மரணம் அறிந்து மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் மறைந்த அவரது குடும்பத்தாருக்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் கூறியது. கடந்த ஜூலை மாதம் 92 வயதை எட்டிய திரு நாதன், சென்ற மாதம் 31ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

சிங்கப்பூர் அதிபராகப் பதவி ஏற்கும் முன் திரு நாதன் பொதுச் சேவையில் 40 ஆண்டுகாலமாக தனிச்சிறப்புமிக்க வகையில் பணியாற்றினார். தொழிற் சங்கங்கள், பாதுகாப்பு, அரச தந்திரம் என பல்வேறு துறைகளில் அவர் பங்காற்றினார். 1962ஆம் ஆண்டில் திரு நாதன் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொழிலாளர் ஆய்வுப் பிரிவில் பணியில் சேர்ந்தார். வேலைநிறுத்தங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைக் கையாண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தொழிற் சங்கங்களில் கம்யூனிச சார்பு சக்திகள் ஊடுருவி இருந்தன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிலும் திரு நாதன் 1961லிருந்து 1971 வரை, பின்னர் மீண்டும் 1979லிருந்து 1982 வரை என இரண்டு முறை முதன்மை நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றி னார். சிங்கப்பூரின் பாதுகாப்பு, உளவுத் துறைப் பிரிவின் தலைவராக 1971ல் இருந்து 1979 வரை இவர் பணியாற்றினார். அப்போது லாஜு என்ற பயணிகள் படகு கடத்தல்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், பிணை பிடித்து வைக்கப்பட்ட பயணிகளை விடுவிக்க தான் பிணையாளியாக விமானத்தில் குவைத் வரை கடத்தல் காரர்களுடன் சென்றார்.

பொதுச் சேவையில் இருந்து 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் திரு நாதன் ஊடக நிறுவனமான ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்பட்டார்.



தமிழ் ஒலிக்க உணர்வுபூர்வ பிரியாவிடை

தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு’ எனும் தமிழ்த் திரைப்பாடலுடன் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிபர், பிரதமர், அமைச்சர்கள், பிரமுகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் திரு நாதனுக்குப் பிடித்தமான ‘பொற்காலம்’ திரைப்படப் பாடல் முழுமையாக ஒலித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண், தண்ணீர் ஆகியவற்றைச் சேகரித்துப் பொம்மை செய்வதாக இயற்றப்பட்டிருக்கும் அந்தப் பாடலைப் போல பல்வேறு இனங்களும் பாரம்பரியங்களும் ஒன்றிணைந்து இன்று நாம் காணும் சிங்கப்பூர் இருப்பதாக திரு நாதன் உருவகப்படுத்திப் பார்த்தார் என்று கூறி, அப்பாடலை அறிமுகம் செய்தார் அரசாங்கச் சேவைத் தலைவரும் இறுதிச்சடங்கை வழிநடத்தியவருமான பீட்டர் ஓங். அதைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியன் லூங் உட்பட எழுவர் திரு நாதனுக்குப் புகழுரை வாசித்தனர். தமது புகழுரையில், திரு நாதன் ஒவ்வொரு முறையும் தன்னைவிட நாட் டிற்கே முன்னுரிமை அளித்ததாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு



சிங்கப்பூரின் நீண்டகால அதிபராக சேவையாற்றிக் கடந்த திங்கட்கிழமை இன்னுயிர் நீத்த திரு எஸ் ஆர் நாதனின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற இல்லத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம், திரு நாதனுக்கு நெருங்கிய தொடர்புடைய சிட்டி ஹால், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், என்டியுசி மையம் ஆகிய இடங்கள் வழியாகச் சென்று பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் நிறைவடையும் என்று இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கை தெரிவித்தது.

பிறகு பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திரு நாதனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். இறுதி ஊர்வலத்தின்போது சாலை யின் இருபுறமும் உள்ள நடைபாதை களில் பொதுமக்கள் பாதுகாப்பாக அணி வகுத்து நிற்கும்படியும் ஊர்வலத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படும் படியாக எந்த ஒரு பொருளையும் வீசவோ அல்லது ஆளில்லா விமானங்களை இயக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இறுதிச் சடங்கில் திரு நாதனின் குடும்பத்தார், அதிபர், பிரதமர், அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கின்போது பிரதமர் லீ சியன் லூங், பேராசிரியர் டாமி கோ, திரு ஸைனல் அபிதின் ர‌ஷீத், திருவாட்டி ஜென்னி சுவா, திரு ராமசுவாமி அத்தப்பன், திரு சான் சுன் சிங், திரு கோபிநாத் பிள்ளை ஆகியோர் புகழுரை ஆற்றவிருக்கின் றனர்.

நாடாளுமன்ற இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே. உடன் அவரது துணைவியார் அகி (இடமிருந்து 2வது) பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 3வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்றி :- தமிழ் முரசு, சிங்கப்பூர்


சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் இயற்கை எய்தினார்

முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் காலமானார்



சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் நேற்று இரவு 9.48 மணிக்குக் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் ஆறாவது அதிபரும் நீண்டகாலம் அந்தப் பதவியில் இருந்த வருமான திரு நாதனின் உயிர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பிரிந்தது. 1999 முதல் 2011 வரை இரண்டு முறை சிங்கப்பூர் அதிபராக திரு நாதன் பதவி வகித்தார். திரு நாதனின் மரணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலக அறிக்கை பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரது மரணம் அறிந்து மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் மறைந்த அவரது குடும்பத்தாருக்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் கூறியது. கடந்த ஜூலை மாதம் 92 வயதை எட்டிய திரு நாதன், சென்ற மாதம் 31ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

சிங்கப்பூர் அதிபராகப் பதவி ஏற்கும் முன் திரு நாதன் பொதுச் சேவையில் 40 ஆண்டுகாலமாக தனிச்சிறப்புமிக்க வகையில் பணியாற்றினார். தொழிற் சங்கங்கள், பாதுகாப்பு, அரச தந்திரம் என பல்வேறு துறைகளில் அவர் பங்காற்றினார். 1962ஆம் ஆண்டில் திரு நாதன் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொழிலாளர் ஆய்வுப் பிரிவில் பணியில் சேர்ந்தார். வேலைநிறுத்தங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைக் கையாண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தொழிற் சங்கங்களில் கம்யூனிச சார்பு சக்திகள் ஊடுருவி இருந்தன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிலும் திரு நாதன் 1961லிருந்து 1971 வரை, பின்னர் மீண்டும் 1979லிருந்து 1982 வரை என இரண்டு முறை முதன்மை நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றி னார். சிங்கப்பூரின் பாதுகாப்பு, உளவுத் துறைப் பிரிவின் தலைவராக 1971ல் இருந்து 1979 வரை இவர் பணியாற்றினார். அப்போது லாஜு என்ற பயணிகள் படகு கடத்தல்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், பிணை பிடித்து வைக்கப்பட்ட பயணிகளை விடுவிக்க தான் பிணையாளியாக விமானத்தில் குவைத் வரை கடத்தல் காரர்களுடன் சென்றார்.

பொதுச் சேவையில் இருந்து 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் திரு நாதன் ஊடக நிறுவனமான ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்பட்டார்.



தமிழ் ஒலிக்க உணர்வுபூர்வ பிரியாவிடை

தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு’ எனும் தமிழ்த் திரைப்பாடலுடன் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிபர், பிரதமர், அமைச்சர்கள், பிரமுகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் திரு நாதனுக்குப் பிடித்தமான ‘பொற்காலம்’ திரைப்படப் பாடல் முழுமையாக ஒலித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண், தண்ணீர் ஆகியவற்றைச் சேகரித்துப் பொம்மை செய்வதாக இயற்றப்பட்டிருக்கும் அந்தப் பாடலைப் போல பல்வேறு இனங்களும் பாரம்பரியங்களும் ஒன்றிணைந்து இன்று நாம் காணும் சிங்கப்பூர் இருப்பதாக திரு நாதன் உருவகப்படுத்திப் பார்த்தார் என்று கூறி, அப்பாடலை அறிமுகம் செய்தார் அரசாங்கச் சேவைத் தலைவரும் இறுதிச்சடங்கை வழிநடத்தியவருமான பீட்டர் ஓங். அதைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியன் லூங் உட்பட எழுவர் திரு நாதனுக்குப் புகழுரை வாசித்தனர். தமது புகழுரையில், திரு நாதன் ஒவ்வொரு முறையும் தன்னைவிட நாட் டிற்கே முன்னுரிமை அளித்ததாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு



சிங்கப்பூரின் நீண்டகால அதிபராக சேவையாற்றிக் கடந்த திங்கட்கிழமை இன்னுயிர் நீத்த திரு எஸ் ஆர் நாதனின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற இல்லத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம், திரு நாதனுக்கு நெருங்கிய தொடர்புடைய சிட்டி ஹால், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், என்டியுசி மையம் ஆகிய இடங்கள் வழியாகச் சென்று பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் நிறைவடையும் என்று இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கை தெரிவித்தது.

பிறகு பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திரு நாதனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். இறுதி ஊர்வலத்தின்போது சாலை யின் இருபுறமும் உள்ள நடைபாதை களில் பொதுமக்கள் பாதுகாப்பாக அணி வகுத்து நிற்கும்படியும் ஊர்வலத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படும் படியாக எந்த ஒரு பொருளையும் வீசவோ அல்லது ஆளில்லா விமானங்களை இயக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இறுதிச் சடங்கில் திரு நாதனின் குடும்பத்தார், அதிபர், பிரதமர், அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கின்போது பிரதமர் லீ சியன் லூங், பேராசிரியர் டாமி கோ, திரு ஸைனல் அபிதின் ர‌ஷீத், திருவாட்டி ஜென்னி சுவா, திரு ராமசுவாமி அத்தப்பன், திரு சான் சுன் சிங், திரு கோபிநாத் பிள்ளை ஆகியோர் புகழுரை ஆற்றவிருக்கின் றனர்.

நாடாளுமன்ற இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே. உடன் அவரது துணைவியார் அகி (இடமிருந்து 2வது) பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 3வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்றி :- தமிழ் முரசு, சிங்கப்பூர்


Friday, December 11, 2015

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : வரலாறு அரசியலின் முக்கியமான கருவிகளில் ஒன்று. ஒரு தேசத்தை/கலாச்சாரத்தை/மக்கள் குழுவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதும் அதன் கடந்த காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதும் ஒன்று தான். மேற்குலகம் இதை நன்கு அறிந்திருக்கிறது. இவ்விஷயத்தில் அதன் ஆண்டாண்டு கால அனுபவத்தை பிறரால் எவ்வகையிலும் ஈடு செய்யமுடியாது.
தன்னுடைய உண்மையான கடந்த காலத்தை அறியாத எந்த ஒரு மக்கள் குழுவும், தற்கால மாற்றங்களையும் பதட்டங்களையும் எதிர்கொள்ள போலியான ”பொன்னான கடந்தகாலத்தை” கட்டமைக்கும். தமிழ் சூழலில் லெமூரியா போன்ற கதைகளும், இந்திய அளவில் வேத காலம் குறித்த சில கதைகளும் இத்தகைய போலியான கட்டமைப்பே. இந்த போலியான கட்டமைப்பை கெக்கலித்து காட்டி அந்த மக்கள் குழுவை வளர்ச்சி படிநிலைகளில் கீழோராய் மேற்குலகம் காட்டும். இந்த கெக்கலிப்பிற்கான எதிர்வினை இன்னும் போலியான ஒரு கடந்த காலத்தை கட்டமைப்பதில் முடியும். இது தொடர்ச்சியாக நிகழும் ஆட்டம். இந்த ஆட்டத்தின் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை மேற்குலகம் தொடர்ந்து நியாயப் படுத்தும்.
இந்த ஆட்டத்தில் மேற்குலகத்திற்கு பேருதவி புரிவது வரலாற்றாய்வாளர்கள். உண்மையான கடந்த காலத்தை மறைப்பது வரலாற்றாய்வாளர்கள் மட்டுமே செய்யக் கூடியது. இந்த ஆய்வாளர்களின் குருட்டுத்தனமான அரசியல் சார்பும், ஆய்வு முறைகளும் அவர்களின் ஆராய்ச்சியின் முடிவை வலிந்தே மாற்றுகின்றன. ஆனால் இத்தகைய ஆய்வு முடிவுகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் உடனே கிடைக்கும். ஒரு வகையில் இத்தகைய ஆய்வாளர்களும், அவர்களை எதிர்த்து போலி கட்டமைப்பை உருவாக்கும் எதிர் தரப்பும் ஒன்று தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மேற்குலகம் இந்த நாணயத்தை சுழற்றி வீசி விளையாடும்.
அரவிந்தன் நீலகண்டனின் இந்தக் கட்டுரை சில வரலாற்றாய்வாளர்களின் அரசியல் நிலைப்பாட்டையும், அவர்களின் ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அவர்கள் மூடி மறைக்க முயன்றதையும் காட்டுகிறது. இந்த பொய்யான ஆய்வு முடிவுகளை மறுத்து உண்மையான வரலாற்றை முன்வைக்கிறது.
வேத காலத்து விமானங்கள் குறித்த அபத்த கற்பனைகள் எப்போதும் இருந்து வந்திருந்தாலும் இந்திய பழமை குறித்த எந்த பேச்சையும் அந்த அபத்தத்துடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்திய பண்பாட்டையே மறுதலிக்கும் குரல்கள் உச்சமாக ஊடகங்கள் எங்கும் ஒலிக்கும் காலம் இது. இச்சூழலில் அரவிந்தனின் இக்கட்டுரை நம்மை சமநிலையில் வைத்திருக்க உதவும். இது நாள் வரை நம் போற்றதலுக்குரிய வரலாற்றாய்வாளர்களையும் அவர்களின் ஆய்வு முறைமைகளையும் கேள்விக்குட்படுத்துவதும் நமக்கு உதவும்.
இக்கட்டுரை ’ஸ்வராஜ்யா’ இணைய இதழில் வெளியானது. ராஜாஜியால் துவங்கப்பட்டு பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. இக்கட்டுரையை மொழிபெயர்க்க அனுமதியளித்த கட்டுரை ஆசிரியருக்கும், ‘ஸ்வராஜ்யா’ இதழுக்கும் எனது நன்றி.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதியில் உள்ள குகைகளின் உட்சுவர்களில் மனிதனின் படைப்பாற்றல் வெளிப்பட்டது. தொல் மதத்தின் கூறுகளும், தொல் வானியல் புரிதலும் கொண்ட குகை ஓவியங்கள் அவை. கலை – குறிப்பாக குறியீட்டுக்கலை – இக்குகை கருவறையிலும், ஐரோப்பாவின் தொல் மனித இன மூளையின் சாம்பல் நிற செல்களிலும்(grey cell) ஜனித்தது. உலகின் மற்ற பகுதிகள் மெல்ல மெல்ல இதை பின் தொடர்ந்தன.
இப்படித்தான் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பிரிட்டிஷ் அறிவியல் இதழான ”நேச்சர்”, ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர்களின் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி(Sulawesi) குகை ஓவியங்கள் குறித்த இந்த ஆராய்ச்சி முற்றிலும் வேறு ஒரு உண்மையை சொல்கிறது. அந்த கட்டுரையின் ஒரு சிறு பகுதி :
ஆய்வாளர்கள் இரண்டு பெரிய மிருகங்களின் ஓவியங்களையும் அங்கிருந்த மனித கைகளின் வரையச்சைகள் பன்னிரெண்டையும் அவதானித்தனர். அவற்றை இந்த ஓவியங்களின் காலத்தை கணிக்க பயன்படுத்தலாமென கருதினர். எலும்புகளின் மேற்பகுதியை மட்டுமே தங்கள் ஆராய்ச்சியில் உபயோகித்ததால், யூரேனியம் அடிப்படையிலான கால அளவீட்டீன் மூலம் அப்பொருட்களின் குறைந்தபட்ச வயதை மட்டுமே கணிக்க முடிந்தது. 12 வரையச்சுகளில் மிகப் பழமையானதின் வயது 39,900 ஆண்டுகள். இது ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கை வரையச்சைவிட 2,000 ஆண்டு பழமையானது. குச்சி போன்ற கால்களை கொண்ட aubergine-ஐ ஒத்த pig-deer-இன் ஓவியம் ஒன்று 35,400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஐரோப்பிய குகைளில் காணக்கிடைக்கும் பெரிய மிருகங்களின் ஆரம்ப கால ஓவியங்களும் இதே காலத்தை சேர்ந்தவை.”[1]
sula
சுலவேசி குகை ஓவியங்கள் 1950-களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தும், மனித பரிணாம வளர்ச்சியின் கருத்துருவாக்கத்தில் Lascaux குகை ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவம் சுலவேசி குகை ஓவியங்களுக்கு கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் நாட்டின் ஒரு பிரபல அறிவியல் பத்திரிக்கை இந்த ஓரவஞ்சனைக்கான காரணத்தை வெளிப்படையாகவே சொன்னது :
ஆதி ஐரோப்பியர்கள் பிற நாட்டு மக்களை விட மதிநுட்பம் கொண்டவர்கள் என்ற குறுகியவாத எண்ணமே ஐரோப்ப மைய பார்வை இந்த ஆராய்ச்சியில் தென்படக் காரணம்.”[2]
ஜிம்பாபேவின் பெரும் சிதைவுகள்
(இன மேன்மை மட்டுமல்ல)இதில் அரசியலும் இருந்தது. ஜிம்பாபேயின் பெரும் சிதைவுகள் – அந்நாட்டு பழங்கதைகள் அதை அரசி ஷீபாவின் தலைநகரம் என்று சொல்கின்றன – கண்டுபிடிக்கப்பட்ட போது, கறுப்பினத்தவர்களை அப்பண்பாட்டின் உரிமையாளர்களாக அறிவிக்க காலனிய வரலாற்றாய்வாளர்கள் மறுத்தனர். ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து துறைகளும் ஒரே குரலில் பேசும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இருப்பு திரை 1960களிலும், பின் 70களிலும் தொடர்ந்தது. ஜிம்பாபேயில் வசிக்கும் அத்தொல்லியல் ஆய்வு குழுவின் பொறுப்பாளர் பால் சின்கேள்ர் சொல்கிறார் :
சரியான தகவல்களை வெளியில் கசிவதை தவிர்க்குமாறு அரசு அழுத்தம் தருவதால், அருங்காட்சியகத்தின் சேவைகள் கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டேன். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் தகவல் தட்டிகள், விநியோகிக்கப்படும் பார்வையாளர் கையேடுகள், பாட புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், செய்தி பத்திரிக்கைகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை தணிக்கைக்கு உட்படுத்துப்படுவது தினசரி நிகழ்வானது. ஒரு முறை, ஜிம்பாபவே நாடு கறுப்பர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்ற தகவலை நான் வெளியே சொன்னால் என் வேலையில் இருந்து நீக்க படுவேன் என்று அருங்காட்சியகத்தின் அருங்காவலர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் என்னை மிரட்டினார். மஞ்சள் நிறத்தவரால் கட்டப்பட்டது என்று சொல்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்றும், ஆனால் கார்பன் அடிப்படையிலான கால அளவீட்டு தகவல்களை சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டேன்.“[3]
ஜிம்பாபே பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒரு தொல்லியல் ஆய்வாளரான முனைவர். இன்னசெண்ட் பிக்கிராய்(Dr Innocent Pikirayi),பிபிசி-யுடனான ஒரு உரையாடலில், இந்த ஆய்வில் ஊடுபாவியிருந்த காலனிய அரசியலை குறித்து சொல்கிறார் :
1960-களில் ஆப்பிரிக்க தேசியவாதிகள் சுதந்திரம் கேட்டு போராடியபோது, இயன் ஸ்மித் அரசு வரலாற்றாய்வாளர்களை ஜிம்பாபேவின் வரலாற்றை – அதன் ஆப்பிரிக்க வேர்களை தவிர்த்துவிட்டு – பொய்யான ஒரு வரலாறாக உருவாக்கும்படி பணித்தது. இந்த பொய்யான வரலாற்றை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவாக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடலாம். அந்த அருங்காட்சியகங்கள் ஜிம்பாபேயின் வரலாற்றை Pheoenicia-வுடன், சபன் அரபியர்களுடனும், எகிப்தியர்களுடனும் மற்றும் பிற கிழக்கு பிரதேச நாடுகளுடனும் இணைத்தது.”[4]
இந்தியாவின் கதை
வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன.
காம்பே வளைகுடாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் வெறும் இயற்கைச்சிதைவாக இருக்கலாம். காகர்-ஹாக்ரா நதிக்கும் சரஸ்வதி நதிக்குமான தொடர்பு குறித்த தரவுகள் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது. சில முடிவுகள் சரியா தவறா என்பது குறித்து இங்கு பேசப்படவில்லை. மாறாக, ஒரு சில ஆய்வு முடிவுகளை – அவை அந்த மண்ணின் மைந்தர்களின் முயற்சியால் மட்டுமே நிகழ்ந்த கலாச்சார மற்றும் சமூக சாதனைகளை அழுத்தமாக நிறுவ முற்படும் போது – உறுதியாக மறுத்து விட்டு, அதற்கு பதிலாக காலனிய பார்வையை மட்டும் மிக நுட்பமாக முன்னிருத்துவதை இங்கு கவனப்படுத்த வேண்டும்.
(ஒரு தேசத்தின்)வரலாற்று சித்திரத்தை கைப்பற்றி அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் அத்தேசத்தின் வருங்கால அரசியல் போக்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மேற்குலகம் மிக எளிதாக அடைகிறது. இந்த அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள நடுநிலை வேஷமிடும் மேற்கத்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இதன் விளைவுகள் பாதிக்கப்பட்ட நாட்டின் சமூக-அரசியல் இயக்க தளத்தில் பேரழிவை நிகழ்த்தும். துரதிருஷ்டவசமாக, அவை இன அழித்தொழிப்பில் சென்று முடியும். இந்த நிகழ்வு சங்கிலியை நாம் இன்றும் பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காண முடியும்.
இப்போது இந்திய தொல்லியல்துறை வரலாற்றில் நடந்த இரு நிகழ்வுகளை பார்க்கலாம். இங்கு பேசப்படும் ஆராய்ச்சியும் அதன் விவாதங்களும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது, ஆனால் அதன் அடிநாதமாக இருக்கும் அரசியல் எத்தகையது என்பதில் சந்தேகமே தேவையில்லை.
சூர்கோட்டடா குதிரைப் பல் ‘சர்ச்சை’[5]
பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ(Richard Meadow) 1987-ல் இப்படி எழுதுகிறார் : “தெற்காசியாவில் பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டு(2000 BCE) இறுதிவரை குதிரைகள் வாழ்ந்தற்கான தடயங்கள் எதுவும் இல்லை. குதிரைகள் இருந்ததாக பல்வேறு ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன(உ.தா., சீவெல் 1931; நாத் 1962, 1968; சர்மா 1974). ஆனால் இதில் சில மட்டுமே பிற ஆராய்ச்சியாளர்கள் சுயமாக சோதித்து அறிந்துகொள்ளக் கூடிய வகையில் போதுமான அளவீடுகளுடன், வரைபடங்களுடன் மற்றும் புகைப்படங்களுடனும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது சீவெல்(Sewell) என்பவரை தவிர்த்து – இவர் காலனிய காலத்து ஐரோப்பிய ஆய்வாளர் – மற்ற இருவரும் காலனியத்திற்கு பிந்தைய இந்திய ஆய்வாளர்கள். சுருக்கமாக சொல்வதானால், மெடோ இந்திய ஆய்வாளர்களின் தொழில்திறனை கேள்விக்குட்படுத்துகிறார். குறிப்பாக, சர்மாவின் பெயர் உபயோகிக்கப்படுவதை இங்கு நாம் கவனப்படுத்த வேண்டும். சர்மா குதிரைகளின்(Equus caballus) வெட்டுப்பல் மற்றும் கடைவாய்பல்லையும், பல விரல் எலும்புகளையும் மேலும் பிற எலும்புகளையும் தன் கண்டுபிடிப்பில் வெளிக்கொண்டுவந்தார். ஆனால் இதை மெடோ முற்றிலும் மறுத்துவிட்டு, இப்படி எழுதுகிறார் :
…கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்புகளின் புகைப்படங்களை ஆராயும்போது, கச்(Kutch) வளைகுடாவில் உள்ள ஹரப்பன் நாகரிக பகுதியான சூர்கட்டோடாவில் கண்டுபிடிக்கப்பட்ட ’குதிரை’, உருவத்தில் பெரிதாக இருந்தாலும், உண்மையில் அது ஒரு கோவேறு கழுதை என்று தான் கருதப்பட வேண்டும்.
ஆனால் இருபது வருடங்களுக்கு பிறகு ஹங்கேரி நாட்டை சேர்ந்த Sándor Bökönyi அந்த எலும்புகளை ஆராய்ந்து விட்டு, அவை மனிதர்களால் வளர்க்கப்பட்ட உண்மையான குதிரையின் எலும்புகள் என்று அறிவித்தார். தன் கண்டுபிடிப்பின் உண்மை உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து ஏ.கே.சர்மா சொன்னவை முக்கியத்துவம் வாய்ந்தது. தன் கண்டுபிடிப்பு இருபது வருடங்களுக்கு பிறகு பெற்ற நியாயமான அங்கீகாரத்தை பற்றி அவர் சொன்னது :
இதுவே எனக்கு சோகமான நாள் ஏனெனில்…என் கண்டுபிடிப்பு இருபது வருடங்களாக அதன் அங்கீகாரத்திற்காக காத்திருந்து, இறுதியாக வேற்று கண்டத்து மனிதர் ஒருவரின் வருகையினாலும், அவரது ஆராய்ச்சியினாலும் ‘சர்மாவின் முடிவு சரியானது’ என்று அறிவிக்கப்படுகிறது. நம் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தை நாட்டு எல்லைக்கு அப்பாலிருந்து எதிர்பார்க்கும் எண்ணத்தை விட்டுவிடும் அறிவுசார் துணிச்சலை நாம் எப்போது கைக்கொள்ளப் போகிறோம்?
இந்நிகழ்வு சூர்கோட்டடா குதிரை ஆராய்ச்சியோடு முடியவில்லை. உதாரணமாக, லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை பாசன ஏரி என்று அறிவித்த கதையை பார்க்கலாம்.
லொத்தால் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’
குஜ்ராத்தின் செளராஷ்ட்ர பகுதியில் இருக்கும் தொழிற்சாலை மையமான லொத்தால் ஹரப்ப நாகரீகத்தின் சிறிய நகரமுமாக இருந்தது. எஸ்.ஆர்.ராவ் 1950-களில் இதை கண்டுபிடித்து, தன் அகழ்வாய்வை இப்பகுதியில் நிகழ்த்தினார். அவர் லொத்தாலில் 22×37 மீட்டர் அளவுடைய(4 முதல் 4.5 மீட்டர் ஆழமுடைய) சரிவகவடிவான(Trapezoidal) ஒரு செங்கல் படுகையை கண்டுபிடித்தார். அப்படுகையை 20×6 மீட்டர் அளவுடைய கப்பல்களை நுழையக்கூடிய துறைமுகம் என்று அறிவித்தார். இந்த கண்டுபிடிப்பு மனித குல கடற்சார் வரலாற்றில் லொத்தாலை ஒரு முக்கிய இடத்தில் – சொல்லப்போனால், முதன்மையான இடத்தில் – வைக்கிறது.
1968-ல் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரின் தெற்காசிய நிறுவனத்தில் பணிபுரியும் லாரன்ஸ் லெஸ்னிக்(Lawrence Leshnik) எஸ்.ஆர்.ராவின் இந்த கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்கினார். ராவ் கண்டுபிடித்த அந்த இடம் ‘கப்பல் துறைமுகம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்களை கொண்டிருக்கவில்லை’ என்று எழுதினார். மாறாக ”மிதமான ஜனத்தொகை உடைய ஒரு கிராமத்தின் விவசாயத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பாசனக் கண்மாயாக” மட்டுமே அது கருதப்பட வேண்டும் என்று சொன்னார். தன்னுடைய வாதங்கள் “ஐயமற்ற ஆதாரங்களை” கொண்டிருக்கவில்லை என்பதை லெஸ்னிக் ஒத்துக் கொண்ட போதும், லொத்தாலின் புவியமைப்பின் காரணமாக கடல் நீர் அந்த இடத்தை அடைந்திருக்க முடியாது என்பதே அவருடைய மைய கருத்து. ”தற்போது நாம் அறியும் கேம்பே வளைகுடா லொத்தாலில் இருந்து 23 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த கப்பல் பட்டறை தற்போதைய கடல் மட்டத்திலிருந்து 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போதைய கடல் மட்டம் இப்போதைய அளவை விட 3 மீட்டர் உயரமானதாக இருந்தாலும், கடல் நீர் அந்த கப்பல் பட்டறையை சென்றடைந்திருக்கமுடியாது”, என்று சொன்னார்.
loth
உடனே ஹரப்பன் பகுதியில் அகழ்வாய்வு செய்த மேற்குலக ஆய்வாளர்களும், சில முக்கிய இந்திய ஆய்வாளர்களும் களத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பு ‘சர்ச்சைக்குரியது’ என்றும், ராவ் எந்த ஒரு இந்திய கிராமத்திலும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பாசனக் கண்மாயை ‘உலகின் பழைய கப்பல் துறைமுகமாக’ காட்ட முயற்சிக்கிறார் என்று பேசத் துவங்கினர்.
உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் மானுடவியலாளரான Gregory Possehl, தன்னுடைய ஹரப்பன் ஆராய்ச்சியை தொடர்ந்து எழுதியதை கீழே படிக்கவும் :
(லொத்தால்) பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்ட எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பான பெரிய, செங்கல்-வரிசையால் சூழப்பட்ட துறைமுகம் என்றழைக்கப்படும் இடம் சர்ச்சைக்குரிய ஒன்று… கே.டி.எம்.ஹெக்டே சுட்டிக்காட்டியதைப் போல்(1991-ல் நிகழ்ந்த தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில்), லொத்தலில் ஒரு சேமிப்புகிடங்கு மற்றும் பிற கட்டிடங்களை கட்டுவதற்கு தேவையான மேடான ஒரு பகுதியை உருவாக்குவதற்காக மணல் தோண்டியெடுக்கப்பட்டதால் தான் இந்தப் பகுதி உருவானதென்று சொல்கிறார். ஆக எல்.லெஸ்னிக்(L.Leshnik) கூறியதைப் போல இந்த இடத்தை எந்த ஒரு தெற்காசிய கிணறாக மட்டுமே பார்க்க முடியும் என்பதில் எனக்கு முழு சம்மதம்.”[7]
1969-ல் நேருவிய மற்றும் மேற்கத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தன்னுடைய ‘இந்தியாவின் வரலாறு’ நூலை ரொமிலா தாப்பர் வெளியிட்டார். 2003-ல் பெங்குவின் நிறுவனத்தினரால் அப்புத்தகம் புதுப்பிக்கப்பட்டு ”பெங்குவின் (வெளியிடும்) பண்டைய இந்தியாவின் வரலாறு” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் ரொமிலா தன்னுடைய வாசகர்களிடம் இப்படி சொல்கிறார் : “லொத்தாலில் கப்பல் துறைமுகம் என்று கருதப்படக் கூடிய இடம் ஒன்று இருக்கிறது, ஆனால் அதை துறைமுகம் என்று சொல்லக்கூடியதா என்ற சர்ச்சை தொடர்கிறது”.
ஆக வழக்கமான ஒரு முடிவு மீண்டும் நிறுவப்படுகிறது : ”தன் ஆராய்ச்சியின் மீதான மிகுகிளர்ச்சியால் உந்தப்படும் ஒரு இந்திய தொல்லியலாளர் தவறான முடிவை அறிவிக்கிறார். ஒரு மேற்கத்திய அறிஞர் இதை சுட்டிக் காட்டுகிறார். இதனால் விழித்துக் கொண்ட உலக ஆய்வாளர்கள் அந்த தவறை திருத்துகிறார்கள்.” லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொன்ன லெஸ்னிக், Posshel அல்லது பிற எண்ணற்ற ஆய்வாளர்களை நாம் நம் கற்பனையின் உச்சத்தில் கூட ‘இனவாதி’ என்றோ ’வல்லாதிக்கவாதி’ என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும், அவர்கள் முன்வைத்த வரலாற்று சித்திரத்தில், இந்திய-வெறுப்பச்சத்தை ஒட்டிய ஐரோப்பிய-மைய நோக்கு இருந்ததை மறுக்க முடியாது.
ரொமிலா தாப்பர் – இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக முன்வைப்பதில் உறுதிகொண்டு செயல்படும் ”போற்றுதலுக்குரிய” மார்க்சிய வரலாற்றாசிரியர் – தொடர்ந்து லொத்தாலின் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொல்லிவருவதை பற்றி சில விளக்கங்கள் இப்போது.
மேலே சொன்னபடி தாப்பரின் இந்திய வரலாற்றை பற்றிய புத்தகத்தின் ‘திருத்தப்பட்ட பதிப்பு’ 2003-ல் வெளியிடப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பாகவே முனைவர். ராஜீவ் நிகம், இந்திய கடலியல் நிறுவனத்தின்(National Institute of Oceanography) புவிசரிதவியல்(Geology) துறையின் தலைவர், லொத்தாலின் ”சர்ச்சைக்குரிய” துறைமுகத்தில் கிடைத்த நுண்ணுயிரிகளின் வண்டல் மாதிரிகளை(sedimentary samples) பரிசோதித்து, இம்மாதிரிகள் ‘foraminifera என்றறியப்படும் கடல்வாழ் உயிரிகள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள்” என்றும், “இதனால் லொத்தால் ஒரு கடல்சார் சூழலை கொண்டிருந்தது” என்றும் அறிவித்தார்.
லொத்தால் துறைமுகத்தை மறுத்து சொல்லப்பட்ட வாதத்தில், கடல் நீர் அந்த இடத்தை வந்தடையமுடியாது என்று சொல்லப்பட்டதை, நிகாமின் ஆய்வு துளியும் சந்தேகம் இல்லாமல் மறுக்கிறது. அந்த இடத்தில் கடல் நீர் வந்தடைவதை நிகாமின் ஆராய்ச்சி நிறுவுகிறது. தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் நிகாம் இது குறித்து சொல்வது :
Planktonic foraminifera மிதமான ஆழம் கொண்டு திறந்த கடற்பகுதியில் உயிர்வாழக் கூடியது. கடலின் பேரலைகளால் பிற பொருட்களுடன் சேர்ந்து இந்த உயிர்களையும் கடத்துவதால் கடற்கரையில் அபூர்வமாக இந்த உயிர்கள் காணக்கிடைக்கின்றன. அதனால் தற்போதைய அகழ்வாய்வில் காணக்கிடைக்கும் பொருட்களில் இந்த உயிர்கள் காணப்படுவதால் ஹரப்பன் காலகட்டத்தில் இக்கடலில் பேரலைகள் உருவானதை நாம் அறியலாம்.”[8]
ஹரப்பன் நாகரீக ஆராய்ச்சியில்(சில விதிவிலக்குகளை தவிர்த்து) மேற்கத்திய அறிவுலகத்திற்கு இயல்பாகவே படிந்திருக்கும் இந்திய-அச்சவுணர்வால் எழும் பாரபட்சமான ஆய்வுமுடிவுகளும், ஆனால் பல்துறை அறிவியல் ஆய்வுகள் முந்தைய ஆய்வுகளை மறுத்து உண்மையை நிறுவுவதையும் சொல்லும் மற்றுமொரு சிறந்த உதாரணம் இது.
தன்னை மார்க்ஸியராகவும் காலனியத்திற்கு பிந்தைய ஆய்வாளராகவும் சொல்லிக்கொள்ளும் தாப்பர் இந்த ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ள மேற்குலக சார்பான பாரபட்சத்தை ஏற்றுக்கொண்டோ அல்லது அந்த பாரபட்சத்தை தோலுரித்துக் காட்டும் சொந்த நாட்டு ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை கண்டும் காணாமலோ இருக்க முடிகிறது. அவர் பின்பற்றும் மார்க்ஸியம் என்பதே ஐரோப்பிய-மைய வாத கருத்தியல் என்பது கூட இதன் பின்னணி காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது அரசியல் மற்றும் பிற பாரபட்சங்களை மீறி எழுந்து வரும் புதிய அறிவுச்சுடர்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. சிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான உப்பீந்தர் சிங், பண்டைய இந்தியா குறித்து 2008-ல் வெளிட்ட தன்னுடைய நூலில் இப்படி சொல்கிறார் :

லொத்தாலின் தனித்துவமான சிறப்புகளில் முக்கியமானது கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அதன் துறைமுகம். சுடப்பட்ட செங்கல்களின் சுவரால் சூழப்பட்ட சரிவகவடிவான துறைமுகம். இதன் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் முறையே 212 மற்றும் 215 மீட்டர். வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள் முறையே 37 மற்றும் 35 மீட்டர். குறிப்பிட்ட நீர்மட்ட அளவை பேணுவதற்கென்று மதகும்(sluice gate) மற்றும் வெள்ளக் கால்வாயும்(spill channel) இருக்கின்றன. மேற்குப் பகுதியில் மண்-செங்கலால் எழுப்பப்பட்ட மேடை சரக்கு ஏற்று துறையாக(wharf) செயல்பட்டிருக்கலாம். இதை துறைமுகமாக கருதாமல், வெறும் தண்ணீர் சேகரிப்பு தொட்டியாக காண்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.”[9]
உப்பீந்தர் சிங்கின் லொத்தால் துறைமுக வர்ணனையை தாப்பர் ‘சர்ச்சைக்குரிய’ கட்டிடம் எனக் சொல்லிச் செல்லும் ஒரு வரி குறிப்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!
தொல்லியல் மாயைக்கு அப்பால்
இந்திய தொல்லியலாளர்கள் தவறு செய்யமுடியாதவர்கள் என்று இங்கு யாரும் சொல்லப்போவதில்லை. பெரிதும் பேசப்பட்ட துவாரகை கடல் அகழ்வாய்வில் கூட, சில பிரச்சனைகள் இருக்கின்றன. சமீபத்திய அகழ்வாய்வின் அடிப்படையில் கவுர் முதலிய ஆய்வாளர்களின் கருத்து :
துவாரகையை சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்களின் காலத்தை, முன்பு சொல்லப்பட்டதை விட, குறைவாகவே காட்டுகின்றன. ஆயினும், துவாரகையின் காலம் குறித்து விவாதம் தொடரக் கூடும். குஜரத்தி எழுத்துரு கொண்ட ஒரு கல் துண்டு இந்த கல் கட்டுமானங்களின் காலத்தை குறைத்தே சொல்கின்றன. சமீபத்தில் இந்திய பெருங்கடலின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல் நங்கூரங்கள் 8 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த இந்திய-அரபு வணிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆயினும் இந்த கடல் நங்கூரங்களின் காலம் அந்நங்கூரங்களுடன் தொடர்புடைய அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்களின் காலத்துடன் தொடர்புபடுத்தியே ஆராயப்படவேண்டும்.”[10]
துவாரகாவில் காணப்படுவது, இணையத்தில் சில இந்துத்துவவாதிகள் சொல்வதைப் போல், 23,000 வருடத்து மூழ்கிய நகரமல்ல. அதே சமயம், கிராகம் ஹான்காக் போன்றவர்கள் சொல்வதைப் போல் ”வேற்றுலக வாசிகளால் கட்டியெழுப்பட்ட பெருநகரம்” அல்ல. ஆனால் கிருஷ்ணரின் துவாரகையை ஏதோ ஒரு வகையில் ஏதேனும் ஒரு கடல்சார்ந்த தொல் நிலப்பகுதியுடன் இணைக்க விரும்புவோர் முற்றிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.
துவாரகை தீவில் கடல்சார் அகழ்வாய்வில் ஈடுபட்ட சுந்தரேஷ் மற்றும் கவுர் தங்கள் ஆராய்ச்சி கட்டுரையில், பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டின் துவக்கத்தில் ஹரப்பர்கள் துவாரகை தீவில் குடியேறினர் என்று சொல்கின்றனர் :
(துவாரகை)தீவின் தென்கிழக்கு பகுதியில் குடியேறியிருந்த மக்கள் கடல் அலையின் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளானதை கடலை நோக்கியிருக்கும் செங்குத்துப்பாறை நமக்கு உணர்த்துகிறது. ஆழ்கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காணக் கிடைக்கும் பானைகள் இதை உறுதிசெய்கிறது. இந்த ஆதாரம் துவாரகாவின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் கடல் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தை அறிவது கடினம். பின்னர் இந்த பகுதியில் பல காலத்திற்கு மக்கள் எவரும் வாழாமல், மீண்டும் பொதுயுகத்திற்கு முந்தைய 3-4-ஆம் நூற்றாண்டில் மீண்டும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.”[11]
‘கடல் கொண்ட துவாரகை நகரம்’ எனும் தொன்மம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் இருந்து முகிழ்த்திருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு பல பத்தாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு யுகத்தில் நிகழவில்லை. மாறாக ஹரப்பன் நாகரிகத்தின் கடைசி காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம்.
நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் கடந்தகாலம் குறித்த சித்திரத்தை யார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது என்றும் முக்கியமான விஷயம். இந்நிலையில், நம் கடந்தகாலத்தை கட்டமைக்கும் பொறுப்பை நம் முன்னாள் காலனிய ‘முதலாளி’களின் கையில் தாரை வார்த்துவிட்டு, அவர்கள் காட்டும் திசையில் மேய்ந்து, நம் கலச்சார மற்றும் தேசிய வலைப்பின்னலை சிதைத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் கடந்தகாலத்தை நாமே ஆராய்ந்து அறியக்கூடிய, சுய-விமர்சனத்தில் வேரூன்றிய, வலுவான அறிவுசார் கட்டமைப்பை உருவாக்கப்போகிறோமா?
இது கடும் உழைப்பை கோரக் கூடிய, ஒற்றை கயிற்றின் மீது நடக்கும் செயலுக்கு ஒப்பானது. இந்த பணியில் நிகழப்போகும் ஒவ்வொரு சிறிய தவறைக் கூட ஊதி பெரிதாக்குவதற்காக மைக்கெல் விட்செல் போன்ற மேற்கத்திய ஆய்வுலகினர் கழுகுகாக காத்திருக்கின்றனர். மீரா நந்தா மற்றும் தாப்பார் போன்ற இந்திய காலட்படையினரின் உதவி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு தவறையும், தவறான கற்பனையின் சிறு துளியின் கலப்பையும் ஒட்டுமொத்த இந்திய அறிவுசூழலையும் ‘போலி-அறிவியல்’ மற்றும் ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டதென்றும் சொல்வார்கள்.
அதனால், லொத்தாலின் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’யை எதிர்கொண்ட நிகமின் ஆராய்ச்சியை போல, நம் கடந்தகாலம் குறித்த ஆய்வுமுறையை பல்துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக நாம் உருவாக்க வேண்டும். பின் வெகுஜன வீச்சுடைய அறிவியல் எழுத்தாளர்களைக் கொண்டு அனைத்து இந்தியர்களின் மனதிலும் பதியும் விதமாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொண்டு செல்லப் பட வேண்டும். இது ஒரு பகீரதப் பணி. பிம்பெட்கா(Bhimbetka) குகை ஓவியங்கள் இத்தகைய ஒரு பணிக்காக காத்திருக்கின்றன.
தற்போது இந்தோனேஷியாவின் சுலவேசி குகை ஓவியங்களுக்கு திரும்புவோம். சுலவேசி குகை ஓவியங்களின் கால கணக்கீடு ஆய்வு குறித்த ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழின் கட்டுரை தன்னுடைய சிறு முன்னுரையை இப்படி முடிக்கிறது :
இந்தோனேஷியா கூட தன்னை கலையின் பிறப்பிடமாக சொல்லிக் கொள்ள முடியாது. இந்த ஓவியங்கள் ஒரு உலகம் தழுவிய மானுடத்தன்மையை உரைக்கிறது. கை வரையச்சுகளும், மிருகங்களின் ஓவியங்களும் (அதே காலத்திய)ஐரோப்பிய குகைகளிலும் காணக் கிடைக்கின்றன. கலையின் முதல் சிசு கண்டிப்பாக நம் முதாதைகளின் தேசத்தில், ஆப்பிரிக்காவில், தான் நிகழ்ந்தது. அறிவியல் துறையைப் போல், கலையிலும், நாம் அனைவரும் ஒன்றே.
மேற்குலகின் மிகப் பெரும் விஞ்ஞானிகள் கூட இனம் என்பதை உயிரியல்(ஆராய்ச்சியில்) உண்மையான பகுப்பாகவும், இனமேம்பாட்டுயல்(eugenics) மனித குல முன்னேற்றத்திற்கான அறிவியல் முறையாகவும் முன்வைத்த அதே 1923-ஆம் ஆண்டில், இந்தியர் ஒருவரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் கீழே. ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இவ்வார்த்தைகளின் எதிரொலியே :
உண்மையை சொல்லவேண்டுமெனில், ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டாலும், வரலாற்றுடன் தன்னை எப்படி பிணைத்துக் கொண்டாலும், அவருடைய ரத்த நாளங்களில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ரத்தமும் சுற்றி வருகிறது. துருவம் முதல் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒற்றுமை ஒன்றே உண்மையானது. மற்றவை அனைத்தும் ஒப்பியல் தன்மை கொண்டவையே.”[12]
இந்த வரிகளை தன் ‘இந்துத்துவம்’ புத்தகத்தில் எழுதியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.
(முற்றும்)
நன்றி ‘ஸ்வராஜ்யா’ இதழ்
ஆங்கில மூலம் : Cave Art Caveat
குறிப்புகள்
[1] David Cyranoski, ‘World’s oldest art found in Indonesian cave‘, Nature, 08-Oct-2014
[2] ‘Art, a human universal’, New Scientist, 11-Oct-2014
[3] Paul Sinclair quoted in Julie Frederikse, ‘None but ourselves: masses vs. media in the making of Zimbabwe’, Raven Press, 1982, p.11
[4] Dr. Innocent Pikirayi interview, Story of Africa: Central African Kingdoms: BBC: URL: http://www.bbc.co.uk/worldservice/africa/features/storyofafrica/10chapter1.shtml (accessed on 14-Oct-2014)
[5] The entire episode in context can be read in: Edwin Bryant, The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Oxford University Press, 2001, pp.171-2
[6] Lawrence Leshnik and K.H.Junghans, The Harappan “Port” at Lothal: Another View, ‘American Anthropologist’ (Vol 70 Iss.5), Oct-1968, pp.911-922
[7] Gregory L. Possehl, Harappans and hunters, in Forager-Traders in South and Southeast Asia: Long-Term Histories, Ed. by Kathleen D. Morrison, Laura L. Junker, Cambridge University Press, 2002, p.66
[8] Rajiv Nigam, ‘Was the large rectangular structure at Lothal (Harappan settlement) a ‘dockyard’ or an ‘irrigation tank’?’, Marine Archaeology of Indian Ocean Countries, 1988, pp. 20-21
[9] Upinder Singh, A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education India, 2008, p.154
[10] A.S.Gaur, Sundaresh and Sila Tripati, Ancient Dwaraka: Study based on recent underwater archaeological investigations, Migration & Diffusion, Vol.6, Issue Number 21, 2005
[11] Sundaresh and A.S.Gaur, Archaeology of Bet Dwaraka Island, Man and Environment, XXIII(2)-1998
[12] Vinayak Damodar Savarkar, Hindutva: Who is a Hindu?, Veer Savarkar Prakashan (1923: 1989), p.90
 
- See more at: http://solvanam.com/?p=37871#sthash.kMuuHsvq.dpuf

தொல்லியல் மாயைக்கு அப்பால் -- குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : வரலாறு அரசியலின் முக்கியமான கருவிகளில் ஒன்று. ஒரு தேசத்தை/கலாச்சாரத்தை/மக்கள் குழுவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதும் அதன் கடந்த காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதும் ஒன்று தான். மேற்குலகம் இதை நன்கு அறிந்திருக்கிறது. இவ்விஷயத்தில் அதன் ஆண்டாண்டு கால அனுபவத்தை பிறரால் எவ்வகையிலும் ஈடு செய்யமுடியாது.
தன்னுடைய உண்மையான கடந்த காலத்தை அறியாத எந்த ஒரு மக்கள் குழுவும், தற்கால மாற்றங்களையும் பதட்டங்களையும் எதிர்கொள்ள போலியான ”பொன்னான கடந்தகாலத்தை” கட்டமைக்கும். தமிழ் சூழலில் லெமூரியா போன்ற கதைகளும், இந்திய அளவில் வேத காலம் குறித்த சில கதைகளும் இத்தகைய போலியான கட்டமைப்பே. இந்த போலியான கட்டமைப்பை கெக்கலித்து காட்டி அந்த மக்கள் குழுவை வளர்ச்சி படிநிலைகளில் கீழோராய் மேற்குலகம் காட்டும். இந்த கெக்கலிப்பிற்கான எதிர்வினை இன்னும் போலியான ஒரு கடந்த காலத்தை கட்டமைப்பதில் முடியும். இது தொடர்ச்சியாக நிகழும் ஆட்டம். இந்த ஆட்டத்தின் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை மேற்குலகம் தொடர்ந்து நியாயப் படுத்தும்.
இந்த ஆட்டத்தில் மேற்குலகத்திற்கு பேருதவி புரிவது வரலாற்றாய்வாளர்கள். உண்மையான கடந்த காலத்தை மறைப்பது வரலாற்றாய்வாளர்கள் மட்டுமே செய்யக் கூடியது. இந்த ஆய்வாளர்களின் குருட்டுத்தனமான அரசியல் சார்பும், ஆய்வு முறைகளும் அவர்களின் ஆராய்ச்சியின் முடிவை வலிந்தே மாற்றுகின்றன. ஆனால் இத்தகைய ஆய்வு முடிவுகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் உடனே கிடைக்கும். ஒரு வகையில் இத்தகைய ஆய்வாளர்களும், அவர்களை எதிர்த்து போலி கட்டமைப்பை உருவாக்கும் எதிர் தரப்பும் ஒன்று தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மேற்குலகம் இந்த நாணயத்தை சுழற்றி வீசி விளையாடும்.
அரவிந்தன் நீலகண்டனின் இந்தக் கட்டுரை சில வரலாற்றாய்வாளர்களின் அரசியல் நிலைப்பாட்டையும், அவர்களின் ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அவர்கள் மூடி மறைக்க முயன்றதையும் காட்டுகிறது. இந்த பொய்யான ஆய்வு முடிவுகளை மறுத்து உண்மையான வரலாற்றை முன்வைக்கிறது.
வேத காலத்து விமானங்கள் குறித்த அபத்த கற்பனைகள் எப்போதும் இருந்து வந்திருந்தாலும் இந்திய பழமை குறித்த எந்த பேச்சையும் அந்த அபத்தத்துடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்திய பண்பாட்டையே மறுதலிக்கும் குரல்கள் உச்சமாக ஊடகங்கள் எங்கும் ஒலிக்கும் காலம் இது. இச்சூழலில் அரவிந்தனின் இக்கட்டுரை நம்மை சமநிலையில் வைத்திருக்க உதவும். இது நாள் வரை நம் போற்றதலுக்குரிய வரலாற்றாய்வாளர்களையும் அவர்களின் ஆய்வு முறைமைகளையும் கேள்விக்குட்படுத்துவதும் நமக்கு உதவும்.
இக்கட்டுரை ’ஸ்வராஜ்யா’ இணைய இதழில் வெளியானது. ராஜாஜியால் துவங்கப்பட்டு பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. இக்கட்டுரையை மொழிபெயர்க்க அனுமதியளித்த கட்டுரை ஆசிரியருக்கும், ‘ஸ்வராஜ்யா’ இதழுக்கும் எனது நன்றி.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதியில் உள்ள குகைகளின் உட்சுவர்களில் மனிதனின் படைப்பாற்றல் வெளிப்பட்டது. தொல் மதத்தின் கூறுகளும், தொல் வானியல் புரிதலும் கொண்ட குகை ஓவியங்கள் அவை. கலை – குறிப்பாக குறியீட்டுக்கலை – இக்குகை கருவறையிலும், ஐரோப்பாவின் தொல் மனித இன மூளையின் சாம்பல் நிற செல்களிலும்(grey cell) ஜனித்தது. உலகின் மற்ற பகுதிகள் மெல்ல மெல்ல இதை பின் தொடர்ந்தன.
இப்படித்தான் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பிரிட்டிஷ் அறிவியல் இதழான ”நேச்சர்”, ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர்களின் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி(Sulawesi) குகை ஓவியங்கள் குறித்த இந்த ஆராய்ச்சி முற்றிலும் வேறு ஒரு உண்மையை சொல்கிறது. அந்த கட்டுரையின் ஒரு சிறு பகுதி :
ஆய்வாளர்கள் இரண்டு பெரிய மிருகங்களின் ஓவியங்களையும் அங்கிருந்த மனித கைகளின் வரையச்சைகள் பன்னிரெண்டையும் அவதானித்தனர். அவற்றை இந்த ஓவியங்களின் காலத்தை கணிக்க பயன்படுத்தலாமென கருதினர். எலும்புகளின் மேற்பகுதியை மட்டுமே தங்கள் ஆராய்ச்சியில் உபயோகித்ததால், யூரேனியம் அடிப்படையிலான கால அளவீட்டீன் மூலம் அப்பொருட்களின் குறைந்தபட்ச வயதை மட்டுமே கணிக்க முடிந்தது. 12 வரையச்சுகளில் மிகப் பழமையானதின் வயது 39,900 ஆண்டுகள். இது ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கை வரையச்சைவிட 2,000 ஆண்டு பழமையானது. குச்சி போன்ற கால்களை கொண்ட aubergine-ஐ ஒத்த pig-deer-இன் ஓவியம் ஒன்று 35,400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஐரோப்பிய குகைளில் காணக்கிடைக்கும் பெரிய மிருகங்களின் ஆரம்ப கால ஓவியங்களும் இதே காலத்தை சேர்ந்தவை.”[1]
sula
சுலவேசி குகை ஓவியங்கள் 1950-களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தும், மனித பரிணாம வளர்ச்சியின் கருத்துருவாக்கத்தில் Lascaux குகை ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவம் சுலவேசி குகை ஓவியங்களுக்கு கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் நாட்டின் ஒரு பிரபல அறிவியல் பத்திரிக்கை இந்த ஓரவஞ்சனைக்கான காரணத்தை வெளிப்படையாகவே சொன்னது :
ஆதி ஐரோப்பியர்கள் பிற நாட்டு மக்களை விட மதிநுட்பம் கொண்டவர்கள் என்ற குறுகியவாத எண்ணமே ஐரோப்ப மைய பார்வை இந்த ஆராய்ச்சியில் தென்படக் காரணம்.”[2]
ஜிம்பாபேவின் பெரும் சிதைவுகள்
(இன மேன்மை மட்டுமல்ல)இதில் அரசியலும் இருந்தது. ஜிம்பாபேயின் பெரும் சிதைவுகள் – அந்நாட்டு பழங்கதைகள் அதை அரசி ஷீபாவின் தலைநகரம் என்று சொல்கின்றன – கண்டுபிடிக்கப்பட்ட போது, கறுப்பினத்தவர்களை அப்பண்பாட்டின் உரிமையாளர்களாக அறிவிக்க காலனிய வரலாற்றாய்வாளர்கள் மறுத்தனர். ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து துறைகளும் ஒரே குரலில் பேசும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இருப்பு திரை 1960களிலும், பின் 70களிலும் தொடர்ந்தது. ஜிம்பாபேயில் வசிக்கும் அத்தொல்லியல் ஆய்வு குழுவின் பொறுப்பாளர் பால் சின்கேள்ர் சொல்கிறார் :
சரியான தகவல்களை வெளியில் கசிவதை தவிர்க்குமாறு அரசு அழுத்தம் தருவதால், அருங்காட்சியகத்தின் சேவைகள் கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டேன். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் தகவல் தட்டிகள், விநியோகிக்கப்படும் பார்வையாளர் கையேடுகள், பாட புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், செய்தி பத்திரிக்கைகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை தணிக்கைக்கு உட்படுத்துப்படுவது தினசரி நிகழ்வானது. ஒரு முறை, ஜிம்பாபவே நாடு கறுப்பர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்ற தகவலை நான் வெளியே சொன்னால் என் வேலையில் இருந்து நீக்க படுவேன் என்று அருங்காட்சியகத்தின் அருங்காவலர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் என்னை மிரட்டினார். மஞ்சள் நிறத்தவரால் கட்டப்பட்டது என்று சொல்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்றும், ஆனால் கார்பன் அடிப்படையிலான கால அளவீட்டு தகவல்களை சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டேன்.“[3]
ஜிம்பாபே பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒரு தொல்லியல் ஆய்வாளரான முனைவர். இன்னசெண்ட் பிக்கிராய்(Dr Innocent Pikirayi),பிபிசி-யுடனான ஒரு உரையாடலில், இந்த ஆய்வில் ஊடுபாவியிருந்த காலனிய அரசியலை குறித்து சொல்கிறார் :
1960-களில் ஆப்பிரிக்க தேசியவாதிகள் சுதந்திரம் கேட்டு போராடியபோது, இயன் ஸ்மித் அரசு வரலாற்றாய்வாளர்களை ஜிம்பாபேவின் வரலாற்றை – அதன் ஆப்பிரிக்க வேர்களை தவிர்த்துவிட்டு – பொய்யான ஒரு வரலாறாக உருவாக்கும்படி பணித்தது. இந்த பொய்யான வரலாற்றை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவாக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடலாம். அந்த அருங்காட்சியகங்கள் ஜிம்பாபேயின் வரலாற்றை Pheoenicia-வுடன், சபன் அரபியர்களுடனும், எகிப்தியர்களுடனும் மற்றும் பிற கிழக்கு பிரதேச நாடுகளுடனும் இணைத்தது.”[4]
இந்தியாவின் கதை
வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன.
காம்பே வளைகுடாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் வெறும் இயற்கைச்சிதைவாக இருக்கலாம். காகர்-ஹாக்ரா நதிக்கும் சரஸ்வதி நதிக்குமான தொடர்பு குறித்த தரவுகள் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது. சில முடிவுகள் சரியா தவறா என்பது குறித்து இங்கு பேசப்படவில்லை. மாறாக, ஒரு சில ஆய்வு முடிவுகளை – அவை அந்த மண்ணின் மைந்தர்களின் முயற்சியால் மட்டுமே நிகழ்ந்த கலாச்சார மற்றும் சமூக சாதனைகளை அழுத்தமாக நிறுவ முற்படும் போது – உறுதியாக மறுத்து விட்டு, அதற்கு பதிலாக காலனிய பார்வையை மட்டும் மிக நுட்பமாக முன்னிருத்துவதை இங்கு கவனப்படுத்த வேண்டும்.
(ஒரு தேசத்தின்)வரலாற்று சித்திரத்தை கைப்பற்றி அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் அத்தேசத்தின் வருங்கால அரசியல் போக்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மேற்குலகம் மிக எளிதாக அடைகிறது. இந்த அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள நடுநிலை வேஷமிடும் மேற்கத்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இதன் விளைவுகள் பாதிக்கப்பட்ட நாட்டின் சமூக-அரசியல் இயக்க தளத்தில் பேரழிவை நிகழ்த்தும். துரதிருஷ்டவசமாக, அவை இன அழித்தொழிப்பில் சென்று முடியும். இந்த நிகழ்வு சங்கிலியை நாம் இன்றும் பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காண முடியும்.
இப்போது இந்திய தொல்லியல்துறை வரலாற்றில் நடந்த இரு நிகழ்வுகளை பார்க்கலாம். இங்கு பேசப்படும் ஆராய்ச்சியும் அதன் விவாதங்களும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது, ஆனால் அதன் அடிநாதமாக இருக்கும் அரசியல் எத்தகையது என்பதில் சந்தேகமே தேவையில்லை.
சூர்கோட்டடா குதிரைப் பல் ‘சர்ச்சை’[5]
பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ(Richard Meadow) 1987-ல் இப்படி எழுதுகிறார் : “தெற்காசியாவில் பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டு(2000 BCE) இறுதிவரை குதிரைகள் வாழ்ந்தற்கான தடயங்கள் எதுவும் இல்லை. குதிரைகள் இருந்ததாக பல்வேறு ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன(உ.தா., சீவெல் 1931; நாத் 1962, 1968; சர்மா 1974). ஆனால் இதில் சில மட்டுமே பிற ஆராய்ச்சியாளர்கள் சுயமாக சோதித்து அறிந்துகொள்ளக் கூடிய வகையில் போதுமான அளவீடுகளுடன், வரைபடங்களுடன் மற்றும் புகைப்படங்களுடனும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது சீவெல்(Sewell) என்பவரை தவிர்த்து – இவர் காலனிய காலத்து ஐரோப்பிய ஆய்வாளர் – மற்ற இருவரும் காலனியத்திற்கு பிந்தைய இந்திய ஆய்வாளர்கள். சுருக்கமாக சொல்வதானால், மெடோ இந்திய ஆய்வாளர்களின் தொழில்திறனை கேள்விக்குட்படுத்துகிறார். குறிப்பாக, சர்மாவின் பெயர் உபயோகிக்கப்படுவதை இங்கு நாம் கவனப்படுத்த வேண்டும். சர்மா குதிரைகளின்(Equus caballus) வெட்டுப்பல் மற்றும் கடைவாய்பல்லையும், பல விரல் எலும்புகளையும் மேலும் பிற எலும்புகளையும் தன் கண்டுபிடிப்பில் வெளிக்கொண்டுவந்தார். ஆனால் இதை மெடோ முற்றிலும் மறுத்துவிட்டு, இப்படி எழுதுகிறார் :
…கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்புகளின் புகைப்படங்களை ஆராயும்போது, கச்(Kutch) வளைகுடாவில் உள்ள ஹரப்பன் நாகரிக பகுதியான சூர்கட்டோடாவில் கண்டுபிடிக்கப்பட்ட ’குதிரை’, உருவத்தில் பெரிதாக இருந்தாலும், உண்மையில் அது ஒரு கோவேறு கழுதை என்று தான் கருதப்பட வேண்டும்.
ஆனால் இருபது வருடங்களுக்கு பிறகு ஹங்கேரி நாட்டை சேர்ந்த Sándor Bökönyi அந்த எலும்புகளை ஆராய்ந்து விட்டு, அவை மனிதர்களால் வளர்க்கப்பட்ட உண்மையான குதிரையின் எலும்புகள் என்று அறிவித்தார். தன் கண்டுபிடிப்பின் உண்மை உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து ஏ.கே.சர்மா சொன்னவை முக்கியத்துவம் வாய்ந்தது. தன் கண்டுபிடிப்பு இருபது வருடங்களுக்கு பிறகு பெற்ற நியாயமான அங்கீகாரத்தை பற்றி அவர் சொன்னது :
இதுவே எனக்கு சோகமான நாள் ஏனெனில்…என் கண்டுபிடிப்பு இருபது வருடங்களாக அதன் அங்கீகாரத்திற்காக காத்திருந்து, இறுதியாக வேற்று கண்டத்து மனிதர் ஒருவரின் வருகையினாலும், அவரது ஆராய்ச்சியினாலும் ‘சர்மாவின் முடிவு சரியானது’ என்று அறிவிக்கப்படுகிறது. நம் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தை நாட்டு எல்லைக்கு அப்பாலிருந்து எதிர்பார்க்கும் எண்ணத்தை விட்டுவிடும் அறிவுசார் துணிச்சலை நாம் எப்போது கைக்கொள்ளப் போகிறோம்?
இந்நிகழ்வு சூர்கோட்டடா குதிரை ஆராய்ச்சியோடு முடியவில்லை. உதாரணமாக, லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை பாசன ஏரி என்று அறிவித்த கதையை பார்க்கலாம்.
லொத்தால் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’
குஜ்ராத்தின் செளராஷ்ட்ர பகுதியில் இருக்கும் தொழிற்சாலை மையமான லொத்தால் ஹரப்ப நாகரீகத்தின் சிறிய நகரமுமாக இருந்தது. எஸ்.ஆர்.ராவ் 1950-களில் இதை கண்டுபிடித்து, தன் அகழ்வாய்வை இப்பகுதியில் நிகழ்த்தினார். அவர் லொத்தாலில் 22×37 மீட்டர் அளவுடைய(4 முதல் 4.5 மீட்டர் ஆழமுடைய) சரிவகவடிவான(Trapezoidal) ஒரு செங்கல் படுகையை கண்டுபிடித்தார். அப்படுகையை 20×6 மீட்டர் அளவுடைய கப்பல்களை நுழையக்கூடிய துறைமுகம் என்று அறிவித்தார். இந்த கண்டுபிடிப்பு மனித குல கடற்சார் வரலாற்றில் லொத்தாலை ஒரு முக்கிய இடத்தில் – சொல்லப்போனால், முதன்மையான இடத்தில் – வைக்கிறது.
1968-ல் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரின் தெற்காசிய நிறுவனத்தில் பணிபுரியும் லாரன்ஸ் லெஸ்னிக்(Lawrence Leshnik) எஸ்.ஆர்.ராவின் இந்த கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்கினார். ராவ் கண்டுபிடித்த அந்த இடம் ‘கப்பல் துறைமுகம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்களை கொண்டிருக்கவில்லை’ என்று எழுதினார். மாறாக ”மிதமான ஜனத்தொகை உடைய ஒரு கிராமத்தின் விவசாயத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பாசனக் கண்மாயாக” மட்டுமே அது கருதப்பட வேண்டும் என்று சொன்னார். தன்னுடைய வாதங்கள் “ஐயமற்ற ஆதாரங்களை” கொண்டிருக்கவில்லை என்பதை லெஸ்னிக் ஒத்துக் கொண்ட போதும், லொத்தாலின் புவியமைப்பின் காரணமாக கடல் நீர் அந்த இடத்தை அடைந்திருக்க முடியாது என்பதே அவருடைய மைய கருத்து. ”தற்போது நாம் அறியும் கேம்பே வளைகுடா லொத்தாலில் இருந்து 23 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த கப்பல் பட்டறை தற்போதைய கடல் மட்டத்திலிருந்து 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போதைய கடல் மட்டம் இப்போதைய அளவை விட 3 மீட்டர் உயரமானதாக இருந்தாலும், கடல் நீர் அந்த கப்பல் பட்டறையை சென்றடைந்திருக்கமுடியாது”, என்று சொன்னார்.
loth
உடனே ஹரப்பன் பகுதியில் அகழ்வாய்வு செய்த மேற்குலக ஆய்வாளர்களும், சில முக்கிய இந்திய ஆய்வாளர்களும் களத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பு ‘சர்ச்சைக்குரியது’ என்றும், ராவ் எந்த ஒரு இந்திய கிராமத்திலும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பாசனக் கண்மாயை ‘உலகின் பழைய கப்பல் துறைமுகமாக’ காட்ட முயற்சிக்கிறார் என்று பேசத் துவங்கினர்.
உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் மானுடவியலாளரான Gregory Possehl, தன்னுடைய ஹரப்பன் ஆராய்ச்சியை தொடர்ந்து எழுதியதை கீழே படிக்கவும் :
(லொத்தால்) பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்ட எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பான பெரிய, செங்கல்-வரிசையால் சூழப்பட்ட துறைமுகம் என்றழைக்கப்படும் இடம் சர்ச்சைக்குரிய ஒன்று… கே.டி.எம்.ஹெக்டே சுட்டிக்காட்டியதைப் போல்(1991-ல் நிகழ்ந்த தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில்), லொத்தலில் ஒரு சேமிப்புகிடங்கு மற்றும் பிற கட்டிடங்களை கட்டுவதற்கு தேவையான மேடான ஒரு பகுதியை உருவாக்குவதற்காக மணல் தோண்டியெடுக்கப்பட்டதால் தான் இந்தப் பகுதி உருவானதென்று சொல்கிறார். ஆக எல்.லெஸ்னிக்(L.Leshnik) கூறியதைப் போல இந்த இடத்தை எந்த ஒரு தெற்காசிய கிணறாக மட்டுமே பார்க்க முடியும் என்பதில் எனக்கு முழு சம்மதம்.”[7]
1969-ல் நேருவிய மற்றும் மேற்கத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தன்னுடைய ‘இந்தியாவின் வரலாறு’ நூலை ரொமிலா தாப்பர் வெளியிட்டார். 2003-ல் பெங்குவின் நிறுவனத்தினரால் அப்புத்தகம் புதுப்பிக்கப்பட்டு ”பெங்குவின் (வெளியிடும்) பண்டைய இந்தியாவின் வரலாறு” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் ரொமிலா தன்னுடைய வாசகர்களிடம் இப்படி சொல்கிறார் : “லொத்தாலில் கப்பல் துறைமுகம் என்று கருதப்படக் கூடிய இடம் ஒன்று இருக்கிறது, ஆனால் அதை துறைமுகம் என்று சொல்லக்கூடியதா என்ற சர்ச்சை தொடர்கிறது”.
ஆக வழக்கமான ஒரு முடிவு மீண்டும் நிறுவப்படுகிறது : ”தன் ஆராய்ச்சியின் மீதான மிகுகிளர்ச்சியால் உந்தப்படும் ஒரு இந்திய தொல்லியலாளர் தவறான முடிவை அறிவிக்கிறார். ஒரு மேற்கத்திய அறிஞர் இதை சுட்டிக் காட்டுகிறார். இதனால் விழித்துக் கொண்ட உலக ஆய்வாளர்கள் அந்த தவறை திருத்துகிறார்கள்.” லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொன்ன லெஸ்னிக், Posshel அல்லது பிற எண்ணற்ற ஆய்வாளர்களை நாம் நம் கற்பனையின் உச்சத்தில் கூட ‘இனவாதி’ என்றோ ’வல்லாதிக்கவாதி’ என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும், அவர்கள் முன்வைத்த வரலாற்று சித்திரத்தில், இந்திய-வெறுப்பச்சத்தை ஒட்டிய ஐரோப்பிய-மைய நோக்கு இருந்ததை மறுக்க முடியாது.
ரொமிலா தாப்பர் – இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக முன்வைப்பதில் உறுதிகொண்டு செயல்படும் ”போற்றுதலுக்குரிய” மார்க்சிய வரலாற்றாசிரியர் – தொடர்ந்து லொத்தாலின் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொல்லிவருவதை பற்றி சில விளக்கங்கள் இப்போது.
மேலே சொன்னபடி தாப்பரின் இந்திய வரலாற்றை பற்றிய புத்தகத்தின் ‘திருத்தப்பட்ட பதிப்பு’ 2003-ல் வெளியிடப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பாகவே முனைவர். ராஜீவ் நிகம், இந்திய கடலியல் நிறுவனத்தின்(National Institute of Oceanography) புவிசரிதவியல்(Geology) துறையின் தலைவர், லொத்தாலின் ”சர்ச்சைக்குரிய” துறைமுகத்தில் கிடைத்த நுண்ணுயிரிகளின் வண்டல் மாதிரிகளை(sedimentary samples) பரிசோதித்து, இம்மாதிரிகள் ‘foraminifera என்றறியப்படும் கடல்வாழ் உயிரிகள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள்” என்றும், “இதனால் லொத்தால் ஒரு கடல்சார் சூழலை கொண்டிருந்தது” என்றும் அறிவித்தார்.
லொத்தால் துறைமுகத்தை மறுத்து சொல்லப்பட்ட வாதத்தில், கடல் நீர் அந்த இடத்தை வந்தடையமுடியாது என்று சொல்லப்பட்டதை, நிகாமின் ஆய்வு துளியும் சந்தேகம் இல்லாமல் மறுக்கிறது. அந்த இடத்தில் கடல் நீர் வந்தடைவதை நிகாமின் ஆராய்ச்சி நிறுவுகிறது. தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் நிகாம் இது குறித்து சொல்வது :
Planktonic foraminifera மிதமான ஆழம் கொண்டு திறந்த கடற்பகுதியில் உயிர்வாழக் கூடியது. கடலின் பேரலைகளால் பிற பொருட்களுடன் சேர்ந்து இந்த உயிர்களையும் கடத்துவதால் கடற்கரையில் அபூர்வமாக இந்த உயிர்கள் காணக்கிடைக்கின்றன. அதனால் தற்போதைய அகழ்வாய்வில் காணக்கிடைக்கும் பொருட்களில் இந்த உயிர்கள் காணப்படுவதால் ஹரப்பன் காலகட்டத்தில் இக்கடலில் பேரலைகள் உருவானதை நாம் அறியலாம்.”[8]
ஹரப்பன் நாகரீக ஆராய்ச்சியில்(சில விதிவிலக்குகளை தவிர்த்து) மேற்கத்திய அறிவுலகத்திற்கு இயல்பாகவே படிந்திருக்கும் இந்திய-அச்சவுணர்வால் எழும் பாரபட்சமான ஆய்வுமுடிவுகளும், ஆனால் பல்துறை அறிவியல் ஆய்வுகள் முந்தைய ஆய்வுகளை மறுத்து உண்மையை நிறுவுவதையும் சொல்லும் மற்றுமொரு சிறந்த உதாரணம் இது.
தன்னை மார்க்ஸியராகவும் காலனியத்திற்கு பிந்தைய ஆய்வாளராகவும் சொல்லிக்கொள்ளும் தாப்பர் இந்த ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ள மேற்குலக சார்பான பாரபட்சத்தை ஏற்றுக்கொண்டோ அல்லது அந்த பாரபட்சத்தை தோலுரித்துக் காட்டும் சொந்த நாட்டு ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை கண்டும் காணாமலோ இருக்க முடிகிறது. அவர் பின்பற்றும் மார்க்ஸியம் என்பதே ஐரோப்பிய-மைய வாத கருத்தியல் என்பது கூட இதன் பின்னணி காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது அரசியல் மற்றும் பிற பாரபட்சங்களை மீறி எழுந்து வரும் புதிய அறிவுச்சுடர்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. சிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான உப்பீந்தர் சிங், பண்டைய இந்தியா குறித்து 2008-ல் வெளிட்ட தன்னுடைய நூலில் இப்படி சொல்கிறார் :

லொத்தாலின் தனித்துவமான சிறப்புகளில் முக்கியமானது கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அதன் துறைமுகம். சுடப்பட்ட செங்கல்களின் சுவரால் சூழப்பட்ட சரிவகவடிவான துறைமுகம். இதன் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் முறையே 212 மற்றும் 215 மீட்டர். வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள் முறையே 37 மற்றும் 35 மீட்டர். குறிப்பிட்ட நீர்மட்ட அளவை பேணுவதற்கென்று மதகும்(sluice gate) மற்றும் வெள்ளக் கால்வாயும்(spill channel) இருக்கின்றன. மேற்குப் பகுதியில் மண்-செங்கலால் எழுப்பப்பட்ட மேடை சரக்கு ஏற்று துறையாக(wharf) செயல்பட்டிருக்கலாம். இதை துறைமுகமாக கருதாமல், வெறும் தண்ணீர் சேகரிப்பு தொட்டியாக காண்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.”[9]
உப்பீந்தர் சிங்கின் லொத்தால் துறைமுக வர்ணனையை தாப்பர் ‘சர்ச்சைக்குரிய’ கட்டிடம் எனக் சொல்லிச் செல்லும் ஒரு வரி குறிப்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!
தொல்லியல் மாயைக்கு அப்பால்
இந்திய தொல்லியலாளர்கள் தவறு செய்யமுடியாதவர்கள் என்று இங்கு யாரும் சொல்லப்போவதில்லை. பெரிதும் பேசப்பட்ட துவாரகை கடல் அகழ்வாய்வில் கூட, சில பிரச்சனைகள் இருக்கின்றன. சமீபத்திய அகழ்வாய்வின் அடிப்படையில் கவுர் முதலிய ஆய்வாளர்களின் கருத்து :
துவாரகையை சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்களின் காலத்தை, முன்பு சொல்லப்பட்டதை விட, குறைவாகவே காட்டுகின்றன. ஆயினும், துவாரகையின் காலம் குறித்து விவாதம் தொடரக் கூடும். குஜரத்தி எழுத்துரு கொண்ட ஒரு கல் துண்டு இந்த கல் கட்டுமானங்களின் காலத்தை குறைத்தே சொல்கின்றன. சமீபத்தில் இந்திய பெருங்கடலின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல் நங்கூரங்கள் 8 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த இந்திய-அரபு வணிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆயினும் இந்த கடல் நங்கூரங்களின் காலம் அந்நங்கூரங்களுடன் தொடர்புடைய அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்களின் காலத்துடன் தொடர்புபடுத்தியே ஆராயப்படவேண்டும்.”[10]
துவாரகாவில் காணப்படுவது, இணையத்தில் சில இந்துத்துவவாதிகள் சொல்வதைப் போல், 23,000 வருடத்து மூழ்கிய நகரமல்ல. அதே சமயம், கிராகம் ஹான்காக் போன்றவர்கள் சொல்வதைப் போல் ”வேற்றுலக வாசிகளால் கட்டியெழுப்பட்ட பெருநகரம்” அல்ல. ஆனால் கிருஷ்ணரின் துவாரகையை ஏதோ ஒரு வகையில் ஏதேனும் ஒரு கடல்சார்ந்த தொல் நிலப்பகுதியுடன் இணைக்க விரும்புவோர் முற்றிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.
துவாரகை தீவில் கடல்சார் அகழ்வாய்வில் ஈடுபட்ட சுந்தரேஷ் மற்றும் கவுர் தங்கள் ஆராய்ச்சி கட்டுரையில், பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டின் துவக்கத்தில் ஹரப்பர்கள் துவாரகை தீவில் குடியேறினர் என்று சொல்கின்றனர் :
(துவாரகை)தீவின் தென்கிழக்கு பகுதியில் குடியேறியிருந்த மக்கள் கடல் அலையின் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளானதை கடலை நோக்கியிருக்கும் செங்குத்துப்பாறை நமக்கு உணர்த்துகிறது. ஆழ்கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காணக் கிடைக்கும் பானைகள் இதை உறுதிசெய்கிறது. இந்த ஆதாரம் துவாரகாவின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் கடல் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தை அறிவது கடினம். பின்னர் இந்த பகுதியில் பல காலத்திற்கு மக்கள் எவரும் வாழாமல், மீண்டும் பொதுயுகத்திற்கு முந்தைய 3-4-ஆம் நூற்றாண்டில் மீண்டும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.”[11]
‘கடல் கொண்ட துவாரகை நகரம்’ எனும் தொன்மம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் இருந்து முகிழ்த்திருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு பல பத்தாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு யுகத்தில் நிகழவில்லை. மாறாக ஹரப்பன் நாகரிகத்தின் கடைசி காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம்.
நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் கடந்தகாலம் குறித்த சித்திரத்தை யார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது என்றும் முக்கியமான விஷயம். இந்நிலையில், நம் கடந்தகாலத்தை கட்டமைக்கும் பொறுப்பை நம் முன்னாள் காலனிய ‘முதலாளி’களின் கையில் தாரை வார்த்துவிட்டு, அவர்கள் காட்டும் திசையில் மேய்ந்து, நம் கலச்சார மற்றும் தேசிய வலைப்பின்னலை சிதைத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் கடந்தகாலத்தை நாமே ஆராய்ந்து அறியக்கூடிய, சுய-விமர்சனத்தில் வேரூன்றிய, வலுவான அறிவுசார் கட்டமைப்பை உருவாக்கப்போகிறோமா?
இது கடும் உழைப்பை கோரக் கூடிய, ஒற்றை கயிற்றின் மீது நடக்கும் செயலுக்கு ஒப்பானது. இந்த பணியில் நிகழப்போகும் ஒவ்வொரு சிறிய தவறைக் கூட ஊதி பெரிதாக்குவதற்காக மைக்கெல் விட்செல் போன்ற மேற்கத்திய ஆய்வுலகினர் கழுகுகாக காத்திருக்கின்றனர். மீரா நந்தா மற்றும் தாப்பார் போன்ற இந்திய காலட்படையினரின் உதவி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு தவறையும், தவறான கற்பனையின் சிறு துளியின் கலப்பையும் ஒட்டுமொத்த இந்திய அறிவுசூழலையும் ‘போலி-அறிவியல்’ மற்றும் ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டதென்றும் சொல்வார்கள்.
அதனால், லொத்தாலின் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’யை எதிர்கொண்ட நிகமின் ஆராய்ச்சியை போல, நம் கடந்தகாலம் குறித்த ஆய்வுமுறையை பல்துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக நாம் உருவாக்க வேண்டும். பின் வெகுஜன வீச்சுடைய அறிவியல் எழுத்தாளர்களைக் கொண்டு அனைத்து இந்தியர்களின் மனதிலும் பதியும் விதமாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொண்டு செல்லப் பட வேண்டும். இது ஒரு பகீரதப் பணி. பிம்பெட்கா(Bhimbetka) குகை ஓவியங்கள் இத்தகைய ஒரு பணிக்காக காத்திருக்கின்றன.
தற்போது இந்தோனேஷியாவின் சுலவேசி குகை ஓவியங்களுக்கு திரும்புவோம். சுலவேசி குகை ஓவியங்களின் கால கணக்கீடு ஆய்வு குறித்த ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழின் கட்டுரை தன்னுடைய சிறு முன்னுரையை இப்படி முடிக்கிறது :
இந்தோனேஷியா கூட தன்னை கலையின் பிறப்பிடமாக சொல்லிக் கொள்ள முடியாது. இந்த ஓவியங்கள் ஒரு உலகம் தழுவிய மானுடத்தன்மையை உரைக்கிறது. கை வரையச்சுகளும், மிருகங்களின் ஓவியங்களும் (அதே காலத்திய)ஐரோப்பிய குகைகளிலும் காணக் கிடைக்கின்றன. கலையின் முதல் சிசு கண்டிப்பாக நம் முதாதைகளின் தேசத்தில், ஆப்பிரிக்காவில், தான் நிகழ்ந்தது. அறிவியல் துறையைப் போல், கலையிலும், நாம் அனைவரும் ஒன்றே.
மேற்குலகின் மிகப் பெரும் விஞ்ஞானிகள் கூட இனம் என்பதை உயிரியல்(ஆராய்ச்சியில்) உண்மையான பகுப்பாகவும், இனமேம்பாட்டுயல்(eugenics) மனித குல முன்னேற்றத்திற்கான அறிவியல் முறையாகவும் முன்வைத்த அதே 1923-ஆம் ஆண்டில், இந்தியர் ஒருவரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் கீழே. ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இவ்வார்த்தைகளின் எதிரொலியே :
உண்மையை சொல்லவேண்டுமெனில், ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டாலும், வரலாற்றுடன் தன்னை எப்படி பிணைத்துக் கொண்டாலும், அவருடைய ரத்த நாளங்களில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ரத்தமும் சுற்றி வருகிறது. துருவம் முதல் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒற்றுமை ஒன்றே உண்மையானது. மற்றவை அனைத்தும் ஒப்பியல் தன்மை கொண்டவையே.”[12]
இந்த வரிகளை தன் ‘இந்துத்துவம்’ புத்தகத்தில் எழுதியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.
(முற்றும்)
நன்றி ‘ஸ்வராஜ்யா’ இதழ்
ஆங்கில மூலம் : Cave Art Caveat
குறிப்புகள்
[1] David Cyranoski, ‘World’s oldest art found in Indonesian cave‘, Nature, 08-Oct-2014
[2] ‘Art, a human universal’, New Scientist, 11-Oct-2014
[3] Paul Sinclair quoted in Julie Frederikse, ‘None but ourselves: masses vs. media in the making of Zimbabwe’, Raven Press, 1982, p.11
[4] Dr. Innocent Pikirayi interview, Story of Africa: Central African Kingdoms: BBC: URL: http://www.bbc.co.uk/worldservice/africa/features/storyofafrica/10chapter1.shtml (accessed on 14-Oct-2014)
[5] The entire episode in context can be read in: Edwin Bryant, The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Oxford University Press, 2001, pp.171-2
[6] Lawrence Leshnik and K.H.Junghans, The Harappan “Port” at Lothal: Another View, ‘American Anthropologist’ (Vol 70 Iss.5), Oct-1968, pp.911-922
[7] Gregory L. Possehl, Harappans and hunters, in Forager-Traders in South and Southeast Asia: Long-Term Histories, Ed. by Kathleen D. Morrison, Laura L. Junker, Cambridge University Press, 2002, p.66
[8] Rajiv Nigam, ‘Was the large rectangular structure at Lothal (Harappan settlement) a ‘dockyard’ or an ‘irrigation tank’?’, Marine Archaeology of Indian Ocean Countries, 1988, pp. 20-21
[9] Upinder Singh, A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education India, 2008, p.154
[10] A.S.Gaur, Sundaresh and Sila Tripati, Ancient Dwaraka: Study based on recent underwater archaeological investigations, Migration & Diffusion, Vol.6, Issue Number 21, 2005
[11] Sundaresh and A.S.Gaur, Archaeology of Bet Dwaraka Island, Man and Environment, XXIII(2)-1998
[12] Vinayak Damodar Savarkar, Hindutva: Who is a Hindu?, Veer Savarkar Prakashan (1923: 1989), p.90
 
- See more at: http://solvanam.com/?p=37871#sthash.kMuuHsvq.dpuf

Saturday, November 7, 2015

http://www.thinaboomi.com/2015/11/06/51006.html

November 6, 2015 உலகம்
abraham-letter


வாஷிங்டன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தன் கைப்பட 10 வயது சிறுவனுக்கு எழுதிய கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.5 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டது.
1865-ம் ஆண்டு, லிங்கன் தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகன் லின்டன் யூசருக்கு இக்கடிதத்தை கைப்பட எழுதி, கையொப்பமிட்டுள்ளார். தனது 2-வது தொடக்க உரையின் கடைசி பகுதியை அதில் லிங்கன் எழுதியுள்ளார். ஹெரிடேஜ் ஏல மையத்தில் புதன் கிழமை விடப்பட்ட ஏலத்தில் இக்கடிதம் சுமார் ரூ.14.5 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஏலத்தில் எடுத்தவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது.
16-வது அமெரிக்க அதிபரான லிங்கன், 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற போது பேசிய உரையின் கடைசி பகுதியிலிருந்து சுமார் 13 வரிகளை எழுதி அதில் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போதும் இக்கடிதத்தை யூசர் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளனர்.

லிங்கன் கைப்பட எழுதிய கடிதம் ரூ.14.5 கோடிக்கு ஏலம்

http://www.thinaboomi.com/2015/11/06/51006.html

November 6, 2015 உலகம்
abraham-letter


வாஷிங்டன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தன் கைப்பட 10 வயது சிறுவனுக்கு எழுதிய கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.5 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டது.
1865-ம் ஆண்டு, லிங்கன் தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகன் லின்டன் யூசருக்கு இக்கடிதத்தை கைப்பட எழுதி, கையொப்பமிட்டுள்ளார். தனது 2-வது தொடக்க உரையின் கடைசி பகுதியை அதில் லிங்கன் எழுதியுள்ளார். ஹெரிடேஜ் ஏல மையத்தில் புதன் கிழமை விடப்பட்ட ஏலத்தில் இக்கடிதம் சுமார் ரூ.14.5 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஏலத்தில் எடுத்தவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது.
16-வது அமெரிக்க அதிபரான லிங்கன், 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற போது பேசிய உரையின் கடைசி பகுதியிலிருந்து சுமார் 13 வரிகளை எழுதி அதில் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போதும் இக்கடிதத்தை யூசர் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளனர்.

Sunday, November 1, 2015

சிந்தனையாளன்
உலகில் தோன்றிய முதன்மையான மதங்களில் கிறித்துவ மதமும் ஒன்றாகும். உலகில் அய்ரோப்பிய வடஅமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையோர் கிறித்துவர்களாகவே இருக்கின்றனர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறித்துவர்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். உலக அளவில் கல்வி மருத்துவம் போன்ற பணிகளை ஏழை மக்களுக்காகக் கிறித்துவ அமைப்புகள் செய்து வருகின்றன. கிறித்துவ மதம் 16ஆம் நூற்றாண்டில் இரண்டாகப் பிளவுபட்டது.
அய்ரோப்பாவில் தோன்றிய சீர்த்திருத்த இயக்கத்தின் தாக்கம் கிறித்துவ மதத்திலும் பல புதிய பிரச்சனைகளைக் கிளப்பியது. கத்தோலிக்க மத குருமார்களான பீட்டர் வால்டோ ஜான், ஒய்கிலிப் ஜான் ஹேஸ் போன்றோர், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதத் தலைமைப் பீடத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மதத்தலைமையின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் வாதிட்டனர்.
1517இல் பேராசிரியர் மார்டின் லூதர் கிங் 99 ஆய்வு வினாக்களை மதத் தலைமைக்கு எதிராக வெளியிட்டார். குறிப்பாக 14, 15ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய நாடுகளில் அரசர்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் ஏற்பட்ட போர்களையும் பேரழிவுகளையும் கிறித்துவத் தலைமைப்பீடம் கண்டும் காணாதது போல இருந்தது. ஏழைகள், வேளாண் தொழிலில் ஈடுபட்டோரின் மீது எவ்வித அக்கறையு மின்றிச் செயல்பட்டது. இங்கிலாந்து அரசரின், ஆதரவு கத்தோலிக்கத் தலைமைப்பீடத்திற்கு இருந்ததனால் நாட்டில் நடந்த ஊழல்களையும் கொடுமைகளையும் எதிர்க்க மக்கள் பயந்தனர்.
இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி, மார்டின் லூதர் கிங் கிறித்துவத் தலைமைக்கு எதிராகக்களம் அமைத்தபோது, கிறித்துவத் தலைமைக்கு முதலில் ஆதரவாகதான் செயல்பட்டார். ஆனால் எட்டாம் ஹென்றி தனது ஆண் வாரிசிற்காக மற்றொரு மணம் முடிக்கும் போது, போப் ஆண்டவர் அதைக் கண்டித்து எதிராகச் செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் மார்டின் லூதர் கிங்கை இங்கிலாந்து அரசு ஆதரித்து அங்கீகாரம் செய்தது. இறுதியாகக் கிறித்துவ மதம், கத்தோலிக்க மதம் என்றும் பிராட்ட°டன்டு மதம் என்றும் இரண்டாகப் பிளவுபட்டு இங்கிலாந்து அரசின் செல்வாக்கோடு மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது.
உலகம் உருண்டை என்று வாதிட்ட கோப்பர் நிக்கஸ், கலிலியோ ஆகியோர்க்கு எதிராகக் கத்தோலிக்க மதம் செயல்பட்டது. தொலைநோக்கிக் கருவியைக் கண்டு பிடித்து வானியல் அறிவியலில் பெரும்புரட்சியை உருவாக்கிய கலிலியோவை மதத்தலைமையின் தூண்டுதலால் சிறைபிடித்துத் தண்டித்தது. இந்நிகழ்வு களை நினைவூட்டுவதற்காகத்தான் டெனிஸ் டிரைட்ரோட் என்கிற ஒரு பேரறிஞர் ‘மெய்யியல் அறிஞர்கள் ஒருபோதும் எந்தக் கிறித்துவக் குருமார்களையும் கொன்றதில்லை. ஆனால் கிறித்துவக் குருமார்கள் தலைசிறந்த மெய்யியல் அறிஞர்களைக் கொன்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக எந்த மதமாயினும் ஆளும் சக்தி களோடுதான் கைகோத்து ஏழை மக்களை ஏமாற்றின. ‘நான் ஏன் கிறித்தவன் இல்லை’ என்ற புகழ்மிக்க நூலை எழுதிய பெட்ரன்ட் ர°ஸல் உலகில் அறிவும் அறிவியலும் தான் மானுடத்தை உயர்த்திப் பிடித்தன என்றார். உலகில் புத்தமதம் ஒன்றுதான் இதற்கு விதிவிலக்கு என்று குறிப்பிட்டார். அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் தொடக்கக்காலத்தில் ஒரு கிறித்துவராகத்தான் இருந்தார். உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்யும் போது கடவுள் மதம் ஆகியன பொய் என்று உணர்ந்தார். கிறித்துவ மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டார். இது போன்ற எண்ணற்ற அறிஞர்களை அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளில் நாம் காணலாம்.
காரல் மார்க்சின் தந்தையான ஹென்ரிச் 1817இல் யூத மதத்திலிருந்து பிராட்டஸ்டன்ட் கிறித்துவராக மாறி, 1824இல் மார்க்சு உட்பட தனது எட்டுக் குழந்தைகளையும் கிறித்துவர்களாக மாற்றினார். அறிஞர் காரல் மார்க்சு பல நூல்களைக் கற்று அறிந்து தெளிந்து, மதம் ஒரு போதைப் பொருள் என்று கூறினார். அமெரிக்கப் பேரறிஞர் இங்கர்சால் கிறித்துவ மதத்தை மிகக் கடுமையான முறையில் கண்டனம் செய்தார்.
நாத்திகராகவே வாழ்ந்து உலகிற்குப் பகுத்தறிவு நெறிகளைத் தொகுத்துத் தந்தவர். அவர் 20ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியும் 21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் மதம்சார்ந்த பல கருத்துகளைப் புரட்டிப் போட்டன. குறிப்பாக கத்தோலிக்க மதத்தில் 1990க்குப் பிறகு பல மாறுதல்களைக் காண முடிந்தது. 1992இல் கலிலியோவிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்காக வாட்டிகன் திருச்சபை மன்னிப்புக் கோரியது. 1995இல் இக்கட்டுரையாளர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 50வது ஆண்டு விழா எடுக்கப்பட்டது.
உலகின் அனைத்து நாட்டுத் தலைவர் களும் நியுயார்க் நகரில் கூடினர். ஈழத்தமிழர்களும் மாபெரும் போராட்டத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முன் நடத்தினர். அப்போது போக்குவரத்து நெரிசலைத் 


தவிர்ப்பதற்காக கட்டுரையாளர் அமெரிக்க நண்பரின் வீட்டிலேயே இருந்தார். அந்நாளில் தொலைக்காட்சி வழியாக அரசியல் நிகழ்வுகளைக் காண நேரிட்டது. நியூயார்க் மாநகர மேயர், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் ஆகியோர் அளித்த விருந்துகளில் கியூபா நாட்டின் புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோவிற்கு அழைப்பு இல்லை.
அப்போது நியூயார்க் நகரின் அபிசீனியன் கத்தோலிக்க திருச்சபை பிடல் காஸ்ட்ரோவிற்கு மாபெரும் வரவேற்பை அளித்தது. பெரும்பாலும் கருப்பர் இனத்தவர்கள்தான் இதில் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு 1960இல் முதன் முதலில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பிடல் கே°ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக முழங்கினார். இதனால் வெறுப்படைந்த அமெரிக்க அரசியல் தலைமை ஒரு நாட்டின் தலைவர் என்ற மரியாதையைக்கூட அவருக்கு அளிக்க மறுத்தது. அப்போதும் ஆர்லம் நகரில் உள்ள கிருத்துவ தேவால யத்தில் தெரசா விடுதியில்தான் தங்கினார் பிடல்.
1995ஆம் ஆண்டு பீடல் காஸ்ட்ரோவின் முன் திரண்டி ருந்த மதகுருமார்கள் மத்தியில் ஒரு மாபெரும் புரட்சி உரையை ஒரு மணிநேரம் நிகழ்த்தினார். ‘உலகில், 1000 குழந்தைகளுக்கு 10 குழந்தைகள்தான் கியூபாவில் இறக்கின்றன. 60000 நல்ல தேர்ச்சி பெற்ற மருத்து வர்கள் நோய்களைத் தடுப்பதற்குப் பணிகள் ஆற்றி வருகின்றனர், என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்தும் பலர் கியூபாவிற்கு வந்து சிகிச்சை பெறுகின்ற னர் என்றும் குறிப்பிட்டார்.
“மானுட நேயத்தைக் கிருத்துவம் போற்றுகிறது என்றால் கியூபா அதனைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துகிறது ஏழைகளைப் பணக்காரர்கள் சுரண்டுகிறார்கள். இரண்டு கோடிப் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பசியாலும் கடும் நோயாலும் இறக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவுற்றாலும் ஆயுத உற்பத்தியும் போட்டியும் தொடர்கின்றன. அணு ஆயுதமும் இராணுவ மேலாதிக் கமும் நீடிக்கின்றன. எவ்வளவு நாள் இவ்வித போட்டியை நாம் வேடிக்கை பார்க்கப் போகிறோம்” என்று பிடல் கா°ட்ரோ முழங்கினார். அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் தலைசிறந்த பேச்சாளர். இருப்பினும் பிடல் காஸ்ட்ரோவிற்குக் கிடைத்த வரவேற் பும் தொலைக்காட்சிகளில் அவரது உரை திரும்பத் திரும்ப காட்டப்பட்டதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
திருச்சபையின் அருட்தந்தை கால்வின், ‘மக்கள் விடுதலைக்காகப் பாடுபடுகின்ற புரட்சியாளர்களையும் தொலைநோக்குத் தலைவர்களையும் வரவேற்பதுதான் எங்களது மரபு’ என்று கூறி பிடல் காஸ்ட்ரோவின் சாதனைகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகுதான் கத்தோலிக்க திருச்சபையில் பல மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. போப் இரண்டாம் ஜான்பால், 1998 ஜனவரி 21 முதல் 25 வரை ஐந்து நாட்கள் 1960ம் ஆண்டிற்குபின், கியூபாவில் முதன்முதலாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போப் ஜான்பால் கியூபா மீது விதித் திருக்கின்ற பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மானுட உரிமைகளும் மத உரிமைகளும் எந்தெந்த நாட்டில் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் கிறித்துவ மதக்கோட்பாடுகள் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் தொடர்சியாகத்தான் தற்போதுள்ள போப் பிரான்சிஸ் பல முற்போக்கான கருத்துகளை முன்மொழிகிறார். பொருளாதாரம் கொல்கிறது (îe Economy Kills) என்ற ஒரு ஆய்வினை வாட்டிகன் வெளியிட்டுள்ளது. ஏசுநாதர்தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று போப் குறிப்பிடுகிறார். உலகமயமாதல் கொள்கை சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிப் புதுவகையான வறுமையை நிலைப்படுத்தி வருகிறது.
தேவைக்கு அதிகமான உற்பத்தியையும் அதற்காகவே நுகரும் பண்பாட்டையும் விரிவாக்கி வருகிறது. தற்போது உள்ள அமைப்பு, பொருளாதாரக் கொடுங்கோன்மை அமைப்பாக மாறி வருகிறது. மக்கள் வறுமையால் வாடுகிற போது செல்வந்தர்கள் நுகர்ச்சியில் மீதமான உணவுப் பொருட்களைக் குப்பையில் வீசுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமா? செல்வாக்கு மிக்கவர்கள்தான் சந்தைப் பொருளாதாரப் போட்டியில் முன்னிலையில் நிற்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களின் ஏற்றத்தாழ்வை நிரந்தரப்படுத்துகின்றனர்.
கிறித்துவர்கள் பணத்தை மையப்படுத்தக் கூடாது. தேவையான பொருட்களை சமுதாயத்திற்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். இதைத்தான் ஏசுநாதர் ‘நீ கடவுள், செல்வம் என்ற இரு முதலாளிகளுக்குச் சேவை செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டார். வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, நிலம் வீடு ஏழைகளுக்கு மறுக்கப்படும் நிலை, தொழி லாளர் உரிமைகள் பறிப்பு இந்தப் பணப்பேரரசில் இடம் பெற்றுள்ளன. இறுதியாக நீங்கள் கெட்ட கிறித்துவர்களாக இருக்காதீர்கள். மக்கள் நாத்திகமே மேலானது என்று நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஏழைகளுடைய கூக்குர லைக் கவனியுங்கள். செல்வக்குவிப்பையும் பணக்காரர் களையும் புறக்கணிக்க வேண்டும். எந்த நாடும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடாது”. மேற்கூறிய கருத்துகள் வாட்டிகன் வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மேலும் தற்போதைய போப், வாட்டிகன் நகரில் உள்ள ஆடம்பர மாளிகையில் தங்காமல் ஓர் அறையில்தான் தங்கி வருகிறார். கிறித்துவத் திருச்சபையின் பழமை மரபுகளைப் புறக்கணித்து இதற்கு முன்பு போப்பாகப் பணியாற்றியவரின் தங்கும் இடத்திற்குச் சென்று நோயுற்றவருக்கு ஆறுதலையும் அன்பையும் வழங்கி னார். பிடல் காஸ்ட்ரோவால் 1995இல் தொடங்கிய முதலாளித்துவத்திற்கு எதிரான பெருகிவரும் கருத்துகள், இன்று போப் ஆண்டவரால் முன்னிறுத்தப்படுகின்றன. உலக அளவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் கிறித்துவ அமைப்பினர் போப்பின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படுகிற இந்தியாவில், கிறித்துவ, இசுலாமிய மத வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. காந்தியைக் கொன்ற கோட்சேவிற்கு ஊர்தோறும் சிலை அமைப்போம், கோயில் கட்டுவோம் எனும் குரல்கள் ஒலிக்கின்றன. ‘தாய்வீட்டிற்குத் திரும்புதல்’ என்று கூறி, ஏழை மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் ஒரு பக்கம் தொடர்கின்றன. மறு பக்கம் பன்னாட்டு, உள் நாட்டுப் பெருமுதலாளிகள் வளம் பெறச் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை அவர்களின் ஒப்புதல் இன்றிப் பறிக்கும் அவசரச் சட்டம் அறிவிக்கப்படுகிறது. அச்சட்டத்தை எப்படியாவது நாடாளுமன்றத்தில் ஏற்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
2005ஆம் ஆண்டு ஏழைகளுக்காகவும் பெரு நோயால் தாக்குண்ட பழங்குடி இன நோயாளிகளுக்காகவும் ஒரிசாவின் ஆதிவாசிகள் வசிக்கின்ற பகுதிகளில் பெரும் பணியையும் தொண்டையும் ஆற்றி வந்த கிரகாம் ஸ்டின்சு என்ற ஆஸ்திரேலிய கிறித்துவப் பணியாளரை அவரது மகன் மகளுடன் உயிரோடு எரித்த நிகழ்வு இந்தப் பாரத புனித பூமியில்தான் நடந்தது. மிகப் பெரிய இந்தச் சோக நிகழ்வால் தாக்குண்ட பிறகும் திருமதி.°டின்சு குற்றவாளிகளை மன்னித்துவிடுங்கள் என்று பெருந்தன்மையோடு கூறினார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு-சங்பரிவாரங்களின் வன்முறைத் தாக்குதல்கள் பகுத்தறிவாளர்கள் மீதும் மற்ற மதத்தினர் மீதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மார்ச்சு திங்களில் மேற்குவங்கத்தில் பல ஆயிரக்கணக் கான பெண்களுக்குத் தரமான கல்வியை வழங்கிவரும் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று 71 வயதான கிறித்துவ பெண் பணியாளரைப் பல பேர் சேர்ந்து பாலியல் சீரழிவைச் செய்து இந்திய மக்களாட்சி முறைக்கும் பன்முகத் தன்மைக்கும் பெருங்கேட்டினைச் செய்துள்ளனர்.
இவ்வாறாக இன-மொழி-மத-பண்பாட்டுக் கருத்துரி மைகள் இந்துத்துவா சக்திகளால் பறிக்கப்படும் சூழல்கள் தொடர்கின்றன. பிரதமர் மோடி கண்டும் காணாதது போல், பன்னாட்டு முதலாளிகளையும் குஜராத் முதலாளிகளையும் ஊக்கப்படுத்துவதிலேயே தனது முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி வருகிறார். முதலாளித்துவமும் இந்துமதவாதமும் தற்போது பாஜக ஆட்சியில் கைகோர்த்து நிற்கின்றன.
உலகின் ஒரே (Vatican), கிறித்துவ நாடான ரோமில் உள்ள வாட்டிகனிலோ முதலாளித்துவத்திற்கும் பணக் காரர்களுக்கும் எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் மனித உரிமையைப் பாதுகாக்கவும் கிறித்துவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று போப் பிரான்சிஸ் முழக்கமிடுகிறார்.
வாட்டிகனில் நடைபெறுவது வரவேற்கத்தக்க மாற்றம்தானே !

வாட்டிகனில் நடக்கும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்

சிந்தனையாளன்
உலகில் தோன்றிய முதன்மையான மதங்களில் கிறித்துவ மதமும் ஒன்றாகும். உலகில் அய்ரோப்பிய வடஅமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையோர் கிறித்துவர்களாகவே இருக்கின்றனர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறித்துவர்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். உலக அளவில் கல்வி மருத்துவம் போன்ற பணிகளை ஏழை மக்களுக்காகக் கிறித்துவ அமைப்புகள் செய்து வருகின்றன. கிறித்துவ மதம் 16ஆம் நூற்றாண்டில் இரண்டாகப் பிளவுபட்டது.
அய்ரோப்பாவில் தோன்றிய சீர்த்திருத்த இயக்கத்தின் தாக்கம் கிறித்துவ மதத்திலும் பல புதிய பிரச்சனைகளைக் கிளப்பியது. கத்தோலிக்க மத குருமார்களான பீட்டர் வால்டோ ஜான், ஒய்கிலிப் ஜான் ஹேஸ் போன்றோர், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதத் தலைமைப் பீடத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மதத்தலைமையின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் வாதிட்டனர்.
1517இல் பேராசிரியர் மார்டின் லூதர் கிங் 99 ஆய்வு வினாக்களை மதத் தலைமைக்கு எதிராக வெளியிட்டார். குறிப்பாக 14, 15ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய நாடுகளில் அரசர்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் ஏற்பட்ட போர்களையும் பேரழிவுகளையும் கிறித்துவத் தலைமைப்பீடம் கண்டும் காணாதது போல இருந்தது. ஏழைகள், வேளாண் தொழிலில் ஈடுபட்டோரின் மீது எவ்வித அக்கறையு மின்றிச் செயல்பட்டது. இங்கிலாந்து அரசரின், ஆதரவு கத்தோலிக்கத் தலைமைப்பீடத்திற்கு இருந்ததனால் நாட்டில் நடந்த ஊழல்களையும் கொடுமைகளையும் எதிர்க்க மக்கள் பயந்தனர்.
இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி, மார்டின் லூதர் கிங் கிறித்துவத் தலைமைக்கு எதிராகக்களம் அமைத்தபோது, கிறித்துவத் தலைமைக்கு முதலில் ஆதரவாகதான் செயல்பட்டார். ஆனால் எட்டாம் ஹென்றி தனது ஆண் வாரிசிற்காக மற்றொரு மணம் முடிக்கும் போது, போப் ஆண்டவர் அதைக் கண்டித்து எதிராகச் செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் மார்டின் லூதர் கிங்கை இங்கிலாந்து அரசு ஆதரித்து அங்கீகாரம் செய்தது. இறுதியாகக் கிறித்துவ மதம், கத்தோலிக்க மதம் என்றும் பிராட்ட°டன்டு மதம் என்றும் இரண்டாகப் பிளவுபட்டு இங்கிலாந்து அரசின் செல்வாக்கோடு மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது.
உலகம் உருண்டை என்று வாதிட்ட கோப்பர் நிக்கஸ், கலிலியோ ஆகியோர்க்கு எதிராகக் கத்தோலிக்க மதம் செயல்பட்டது. தொலைநோக்கிக் கருவியைக் கண்டு பிடித்து வானியல் அறிவியலில் பெரும்புரட்சியை உருவாக்கிய கலிலியோவை மதத்தலைமையின் தூண்டுதலால் சிறைபிடித்துத் தண்டித்தது. இந்நிகழ்வு களை நினைவூட்டுவதற்காகத்தான் டெனிஸ் டிரைட்ரோட் என்கிற ஒரு பேரறிஞர் ‘மெய்யியல் அறிஞர்கள் ஒருபோதும் எந்தக் கிறித்துவக் குருமார்களையும் கொன்றதில்லை. ஆனால் கிறித்துவக் குருமார்கள் தலைசிறந்த மெய்யியல் அறிஞர்களைக் கொன்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக எந்த மதமாயினும் ஆளும் சக்தி களோடுதான் கைகோத்து ஏழை மக்களை ஏமாற்றின. ‘நான் ஏன் கிறித்தவன் இல்லை’ என்ற புகழ்மிக்க நூலை எழுதிய பெட்ரன்ட் ர°ஸல் உலகில் அறிவும் அறிவியலும் தான் மானுடத்தை உயர்த்திப் பிடித்தன என்றார். உலகில் புத்தமதம் ஒன்றுதான் இதற்கு விதிவிலக்கு என்று குறிப்பிட்டார். அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் தொடக்கக்காலத்தில் ஒரு கிறித்துவராகத்தான் இருந்தார். உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்யும் போது கடவுள் மதம் ஆகியன பொய் என்று உணர்ந்தார். கிறித்துவ மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டார். இது போன்ற எண்ணற்ற அறிஞர்களை அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளில் நாம் காணலாம்.
காரல் மார்க்சின் தந்தையான ஹென்ரிச் 1817இல் யூத மதத்திலிருந்து பிராட்டஸ்டன்ட் கிறித்துவராக மாறி, 1824இல் மார்க்சு உட்பட தனது எட்டுக் குழந்தைகளையும் கிறித்துவர்களாக மாற்றினார். அறிஞர் காரல் மார்க்சு பல நூல்களைக் கற்று அறிந்து தெளிந்து, மதம் ஒரு போதைப் பொருள் என்று கூறினார். அமெரிக்கப் பேரறிஞர் இங்கர்சால் கிறித்துவ மதத்தை மிகக் கடுமையான முறையில் கண்டனம் செய்தார்.
நாத்திகராகவே வாழ்ந்து உலகிற்குப் பகுத்தறிவு நெறிகளைத் தொகுத்துத் தந்தவர். அவர் 20ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியும் 21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் மதம்சார்ந்த பல கருத்துகளைப் புரட்டிப் போட்டன. குறிப்பாக கத்தோலிக்க மதத்தில் 1990க்குப் பிறகு பல மாறுதல்களைக் காண முடிந்தது. 1992இல் கலிலியோவிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்காக வாட்டிகன் திருச்சபை மன்னிப்புக் கோரியது. 1995இல் இக்கட்டுரையாளர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 50வது ஆண்டு விழா எடுக்கப்பட்டது.
உலகின் அனைத்து நாட்டுத் தலைவர் களும் நியுயார்க் நகரில் கூடினர். ஈழத்தமிழர்களும் மாபெரும் போராட்டத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முன் நடத்தினர். அப்போது போக்குவரத்து நெரிசலைத் 


தவிர்ப்பதற்காக கட்டுரையாளர் அமெரிக்க நண்பரின் வீட்டிலேயே இருந்தார். அந்நாளில் தொலைக்காட்சி வழியாக அரசியல் நிகழ்வுகளைக் காண நேரிட்டது. நியூயார்க் மாநகர மேயர், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் ஆகியோர் அளித்த விருந்துகளில் கியூபா நாட்டின் புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோவிற்கு அழைப்பு இல்லை.
அப்போது நியூயார்க் நகரின் அபிசீனியன் கத்தோலிக்க திருச்சபை பிடல் காஸ்ட்ரோவிற்கு மாபெரும் வரவேற்பை அளித்தது. பெரும்பாலும் கருப்பர் இனத்தவர்கள்தான் இதில் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு 1960இல் முதன் முதலில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பிடல் கே°ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக முழங்கினார். இதனால் வெறுப்படைந்த அமெரிக்க அரசியல் தலைமை ஒரு நாட்டின் தலைவர் என்ற மரியாதையைக்கூட அவருக்கு அளிக்க மறுத்தது. அப்போதும் ஆர்லம் நகரில் உள்ள கிருத்துவ தேவால யத்தில் தெரசா விடுதியில்தான் தங்கினார் பிடல்.
1995ஆம் ஆண்டு பீடல் காஸ்ட்ரோவின் முன் திரண்டி ருந்த மதகுருமார்கள் மத்தியில் ஒரு மாபெரும் புரட்சி உரையை ஒரு மணிநேரம் நிகழ்த்தினார். ‘உலகில், 1000 குழந்தைகளுக்கு 10 குழந்தைகள்தான் கியூபாவில் இறக்கின்றன. 60000 நல்ல தேர்ச்சி பெற்ற மருத்து வர்கள் நோய்களைத் தடுப்பதற்குப் பணிகள் ஆற்றி வருகின்றனர், என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்தும் பலர் கியூபாவிற்கு வந்து சிகிச்சை பெறுகின்ற னர் என்றும் குறிப்பிட்டார்.
“மானுட நேயத்தைக் கிருத்துவம் போற்றுகிறது என்றால் கியூபா அதனைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துகிறது ஏழைகளைப் பணக்காரர்கள் சுரண்டுகிறார்கள். இரண்டு கோடிப் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பசியாலும் கடும் நோயாலும் இறக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவுற்றாலும் ஆயுத உற்பத்தியும் போட்டியும் தொடர்கின்றன. அணு ஆயுதமும் இராணுவ மேலாதிக் கமும் நீடிக்கின்றன. எவ்வளவு நாள் இவ்வித போட்டியை நாம் வேடிக்கை பார்க்கப் போகிறோம்” என்று பிடல் கா°ட்ரோ முழங்கினார். அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் தலைசிறந்த பேச்சாளர். இருப்பினும் பிடல் காஸ்ட்ரோவிற்குக் கிடைத்த வரவேற் பும் தொலைக்காட்சிகளில் அவரது உரை திரும்பத் திரும்ப காட்டப்பட்டதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
திருச்சபையின் அருட்தந்தை கால்வின், ‘மக்கள் விடுதலைக்காகப் பாடுபடுகின்ற புரட்சியாளர்களையும் தொலைநோக்குத் தலைவர்களையும் வரவேற்பதுதான் எங்களது மரபு’ என்று கூறி பிடல் காஸ்ட்ரோவின் சாதனைகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகுதான் கத்தோலிக்க திருச்சபையில் பல மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. போப் இரண்டாம் ஜான்பால், 1998 ஜனவரி 21 முதல் 25 வரை ஐந்து நாட்கள் 1960ம் ஆண்டிற்குபின், கியூபாவில் முதன்முதலாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போப் ஜான்பால் கியூபா மீது விதித் திருக்கின்ற பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மானுட உரிமைகளும் மத உரிமைகளும் எந்தெந்த நாட்டில் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் கிறித்துவ மதக்கோட்பாடுகள் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் தொடர்சியாகத்தான் தற்போதுள்ள போப் பிரான்சிஸ் பல முற்போக்கான கருத்துகளை முன்மொழிகிறார். பொருளாதாரம் கொல்கிறது (îe Economy Kills) என்ற ஒரு ஆய்வினை வாட்டிகன் வெளியிட்டுள்ளது. ஏசுநாதர்தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று போப் குறிப்பிடுகிறார். உலகமயமாதல் கொள்கை சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிப் புதுவகையான வறுமையை நிலைப்படுத்தி வருகிறது.
தேவைக்கு அதிகமான உற்பத்தியையும் அதற்காகவே நுகரும் பண்பாட்டையும் விரிவாக்கி வருகிறது. தற்போது உள்ள அமைப்பு, பொருளாதாரக் கொடுங்கோன்மை அமைப்பாக மாறி வருகிறது. மக்கள் வறுமையால் வாடுகிற போது செல்வந்தர்கள் நுகர்ச்சியில் மீதமான உணவுப் பொருட்களைக் குப்பையில் வீசுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமா? செல்வாக்கு மிக்கவர்கள்தான் சந்தைப் பொருளாதாரப் போட்டியில் முன்னிலையில் நிற்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களின் ஏற்றத்தாழ்வை நிரந்தரப்படுத்துகின்றனர்.
கிறித்துவர்கள் பணத்தை மையப்படுத்தக் கூடாது. தேவையான பொருட்களை சமுதாயத்திற்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். இதைத்தான் ஏசுநாதர் ‘நீ கடவுள், செல்வம் என்ற இரு முதலாளிகளுக்குச் சேவை செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டார். வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, நிலம் வீடு ஏழைகளுக்கு மறுக்கப்படும் நிலை, தொழி லாளர் உரிமைகள் பறிப்பு இந்தப் பணப்பேரரசில் இடம் பெற்றுள்ளன. இறுதியாக நீங்கள் கெட்ட கிறித்துவர்களாக இருக்காதீர்கள். மக்கள் நாத்திகமே மேலானது என்று நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஏழைகளுடைய கூக்குர லைக் கவனியுங்கள். செல்வக்குவிப்பையும் பணக்காரர் களையும் புறக்கணிக்க வேண்டும். எந்த நாடும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடாது”. மேற்கூறிய கருத்துகள் வாட்டிகன் வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மேலும் தற்போதைய போப், வாட்டிகன் நகரில் உள்ள ஆடம்பர மாளிகையில் தங்காமல் ஓர் அறையில்தான் தங்கி வருகிறார். கிறித்துவத் திருச்சபையின் பழமை மரபுகளைப் புறக்கணித்து இதற்கு முன்பு போப்பாகப் பணியாற்றியவரின் தங்கும் இடத்திற்குச் சென்று நோயுற்றவருக்கு ஆறுதலையும் அன்பையும் வழங்கி னார். பிடல் காஸ்ட்ரோவால் 1995இல் தொடங்கிய முதலாளித்துவத்திற்கு எதிரான பெருகிவரும் கருத்துகள், இன்று போப் ஆண்டவரால் முன்னிறுத்தப்படுகின்றன. உலக அளவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் கிறித்துவ அமைப்பினர் போப்பின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படுகிற இந்தியாவில், கிறித்துவ, இசுலாமிய மத வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. காந்தியைக் கொன்ற கோட்சேவிற்கு ஊர்தோறும் சிலை அமைப்போம், கோயில் கட்டுவோம் எனும் குரல்கள் ஒலிக்கின்றன. ‘தாய்வீட்டிற்குத் திரும்புதல்’ என்று கூறி, ஏழை மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் ஒரு பக்கம் தொடர்கின்றன. மறு பக்கம் பன்னாட்டு, உள் நாட்டுப் பெருமுதலாளிகள் வளம் பெறச் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை அவர்களின் ஒப்புதல் இன்றிப் பறிக்கும் அவசரச் சட்டம் அறிவிக்கப்படுகிறது. அச்சட்டத்தை எப்படியாவது நாடாளுமன்றத்தில் ஏற்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
2005ஆம் ஆண்டு ஏழைகளுக்காகவும் பெரு நோயால் தாக்குண்ட பழங்குடி இன நோயாளிகளுக்காகவும் ஒரிசாவின் ஆதிவாசிகள் வசிக்கின்ற பகுதிகளில் பெரும் பணியையும் தொண்டையும் ஆற்றி வந்த கிரகாம் ஸ்டின்சு என்ற ஆஸ்திரேலிய கிறித்துவப் பணியாளரை அவரது மகன் மகளுடன் உயிரோடு எரித்த நிகழ்வு இந்தப் பாரத புனித பூமியில்தான் நடந்தது. மிகப் பெரிய இந்தச் சோக நிகழ்வால் தாக்குண்ட பிறகும் திருமதி.°டின்சு குற்றவாளிகளை மன்னித்துவிடுங்கள் என்று பெருந்தன்மையோடு கூறினார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு-சங்பரிவாரங்களின் வன்முறைத் தாக்குதல்கள் பகுத்தறிவாளர்கள் மீதும் மற்ற மதத்தினர் மீதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மார்ச்சு திங்களில் மேற்குவங்கத்தில் பல ஆயிரக்கணக் கான பெண்களுக்குத் தரமான கல்வியை வழங்கிவரும் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று 71 வயதான கிறித்துவ பெண் பணியாளரைப் பல பேர் சேர்ந்து பாலியல் சீரழிவைச் செய்து இந்திய மக்களாட்சி முறைக்கும் பன்முகத் தன்மைக்கும் பெருங்கேட்டினைச் செய்துள்ளனர்.
இவ்வாறாக இன-மொழி-மத-பண்பாட்டுக் கருத்துரி மைகள் இந்துத்துவா சக்திகளால் பறிக்கப்படும் சூழல்கள் தொடர்கின்றன. பிரதமர் மோடி கண்டும் காணாதது போல், பன்னாட்டு முதலாளிகளையும் குஜராத் முதலாளிகளையும் ஊக்கப்படுத்துவதிலேயே தனது முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி வருகிறார். முதலாளித்துவமும் இந்துமதவாதமும் தற்போது பாஜக ஆட்சியில் கைகோர்த்து நிற்கின்றன.
உலகின் ஒரே (Vatican), கிறித்துவ நாடான ரோமில் உள்ள வாட்டிகனிலோ முதலாளித்துவத்திற்கும் பணக் காரர்களுக்கும் எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் மனித உரிமையைப் பாதுகாக்கவும் கிறித்துவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று போப் பிரான்சிஸ் முழக்கமிடுகிறார்.
வாட்டிகனில் நடைபெறுவது வரவேற்கத்தக்க மாற்றம்தானே !