Showing posts with label . .. Show all posts
Showing posts with label . .. Show all posts

Monday, September 12, 2016
































































ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.

ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.

வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க வில்லையே! ஏன்?

மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.

பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.

""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில் பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.

இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.

கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.

பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.

அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.

சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.

சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.

இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.

ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.

""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.

- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.

இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.

அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.

"பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.

""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.

அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.

இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.

கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.

பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.

அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.

காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.

எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.

அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.

""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.

1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.

பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''

சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''

பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?''

சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.

""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.

இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.

பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.

இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.

""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

"கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.

""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.

""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.

பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும்.

ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.

வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.

திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.

""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.

நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.

""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''

பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.

அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:

""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)

மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.

"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன? பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.

சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை. அது "யுகாக்கினி'.

நன்றி :- வைரமுத்து, தினமணி















யுகத்துக்கு ஒருவன் !
































































ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.

ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.

வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க வில்லையே! ஏன்?

மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.

பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.

""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில் பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.

இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.

கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.

பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.

அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.

சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.

சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.

இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.

ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.

""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.

- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.

இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.

அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.

"பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.

""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.

அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.

இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.

கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.

பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.

அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.

காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.

எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.

அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.

""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.

1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.

பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''

சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''

பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?''

சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.

""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.

இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.

பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.

இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.

""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

"கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.

""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.

""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.

பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும்.

ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.

வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.

திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.

""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.

நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.

""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''

பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.

அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:

""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)

மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.

"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன? பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.

சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை. அது "யுகாக்கினி'.

நன்றி :- வைரமுத்து, தினமணி















Sunday, August 28, 2016




விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப் பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாக வும் தனித்தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த பெரும்பாலானோர் ஆசிரியர் களாக உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக பணி புரிந்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் செல்ல பெருமாள் கூறுகையில், “தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு” என்கிறார்.

இதுதொடர்பாக இப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் அறிவழகன் கூறியதாவது: 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் பஞ்சா யத்து போர்டு பள்ளியாகவும், அதன் பின்னர் தாலுகா போர்டு பள்ளியாகவும் தரம் உயர்த்தப் பட்டது இந்தப் பள்ளி. 1956-ம் ஆண்டு அப்போதைய தென்னாற் காடு மாவட்ட ஜில்லா போர்டு தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த சாமிக்கண்ணு படையாச்சி தலைமையில் இப்பள்ளியின் 75-ம் ஆண்டு விழா நடத்துள்ளது.

அப்போதே இப்பள்ளியில் படித்து வெளிவந்த பெரும்பாலா னோர் ஆசிரியர்களாக பணியாற்றி னார்கள். இன்னும் சொல்லப் போனால் கடந்த 4 தலைமுறை களில் இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆசிரியர் என சுமார் 500 ஆசிரியர்களை இப்பள்ளி உரு வாக்கியுள்ளது.

இக்கிராமத்து மக்கள் வேலை தொடர்பாக சென்னைக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கினர். சென்னை சென்றவர்களில் சடகோபன் என்பவர் துணை மேயராக இருந்தி ருக்கிறார். கண்ணப்ப முதலியார், ஜெயலட்சுமி போன்றவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்றார்.

இப்பள்ளியில் படித்து தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற 94 வயதான ராமகிருஷ்ணனை கேட்டபோது, “முதன்முதலில் 2 ஆசிரியர்களைக் கொண்டு திண்ணைப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர் தாலுகா போர்டு பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அந்த காலத்தில் 8-ம் வகுப்பு படித்தவுடன் விழுப்புரம், கடலூரில் ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேருவார்கள். நான் பள்ளியில் படிக்கும்போதே என்னுடன் என் மூத்த சகோதரியும் படித்தார். 5-ம் வகுப்பு படித்த அவருக்கு ஆசிரியை பணி கிடைத்தது. ஆனால் அவரது குடும்பத்தார் பணிக்கு அனுப்பவில்லை. 1941 முதல் 1943-ல் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். 1.6.1943-ல் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தேன்.

1939 முதல் 15.8.1945 வரை இரண்டாம் உலகப் போர் நடந்தது. அப்போது இப்பள்ளியில் பணி யாற்றிய திருவேங்கடம், பழனிச் சாமி, சிவலிங்கம் ஆகிய 3 ஆசிரி யர்கள் பணியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க புறப் பட்டனர். அவர்களுக்கு விழா கொண்டாடி கிராமமே ஒன்றுகூடி வழியனுப்பி வைத்தது. இப்பள்ளி யில் படித்த சுசீலா என்ற பெண் மணியே இப்பள்ளியின் முதல் பெண் ஆசிரியை” என்றார்.



ஓய்வுபெற்ற 80 வயதான ஆசிரியை சுசீலாவிடம் பேசிய போது, “என்னுடன் சில பெண்களே படித்தனர். ஆனால் வேலைக்கு யாரையும் அனுப்பவில்லை. வேலைக்குச் சென்ற சொற்பமான பெண்களில் நானும் ஒருத்தி. தற்போது பெண்களுக்கு விழிப் புணர்வு உள்ளது போல அப்போது இல்லை.

அங்கு படித்த ஒவ்வொருவரும் இது என் பள்ளி என பெருமிதம் கொண்டோம். ஆனால் இன்று ஆங்கிலப்பள்ளி, சிபிஎஸ்சி என தனியார் பள்ளிகளைப் பெற்றோர் நாடுகின்றனர். எங்களுக்கு வாழ்க்கை கொடுத்த பள்ளியில் எங்கள் சந்ததியினர் படிக்காமல் புறக்கணிப்பதைக் காணும்போது துக்கம் தாங்க முடியவில்லை” என்றார்.

நன்றி :- தி இந்து

4 தலைமுறைகளில் வீட்டுக்கு ஒரு ஆசிரியரை உருவாக்கியபள்ளி !




விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப் பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாக வும் தனித்தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த பெரும்பாலானோர் ஆசிரியர் களாக உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக பணி புரிந்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் செல்ல பெருமாள் கூறுகையில், “தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு” என்கிறார்.

இதுதொடர்பாக இப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் அறிவழகன் கூறியதாவது: 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் பஞ்சா யத்து போர்டு பள்ளியாகவும், அதன் பின்னர் தாலுகா போர்டு பள்ளியாகவும் தரம் உயர்த்தப் பட்டது இந்தப் பள்ளி. 1956-ம் ஆண்டு அப்போதைய தென்னாற் காடு மாவட்ட ஜில்லா போர்டு தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த சாமிக்கண்ணு படையாச்சி தலைமையில் இப்பள்ளியின் 75-ம் ஆண்டு விழா நடத்துள்ளது.

அப்போதே இப்பள்ளியில் படித்து வெளிவந்த பெரும்பாலா னோர் ஆசிரியர்களாக பணியாற்றி னார்கள். இன்னும் சொல்லப் போனால் கடந்த 4 தலைமுறை களில் இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆசிரியர் என சுமார் 500 ஆசிரியர்களை இப்பள்ளி உரு வாக்கியுள்ளது.

இக்கிராமத்து மக்கள் வேலை தொடர்பாக சென்னைக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கினர். சென்னை சென்றவர்களில் சடகோபன் என்பவர் துணை மேயராக இருந்தி ருக்கிறார். கண்ணப்ப முதலியார், ஜெயலட்சுமி போன்றவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்றார்.

இப்பள்ளியில் படித்து தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற 94 வயதான ராமகிருஷ்ணனை கேட்டபோது, “முதன்முதலில் 2 ஆசிரியர்களைக் கொண்டு திண்ணைப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர் தாலுகா போர்டு பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அந்த காலத்தில் 8-ம் வகுப்பு படித்தவுடன் விழுப்புரம், கடலூரில் ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேருவார்கள். நான் பள்ளியில் படிக்கும்போதே என்னுடன் என் மூத்த சகோதரியும் படித்தார். 5-ம் வகுப்பு படித்த அவருக்கு ஆசிரியை பணி கிடைத்தது. ஆனால் அவரது குடும்பத்தார் பணிக்கு அனுப்பவில்லை. 1941 முதல் 1943-ல் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். 1.6.1943-ல் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தேன்.

1939 முதல் 15.8.1945 வரை இரண்டாம் உலகப் போர் நடந்தது. அப்போது இப்பள்ளியில் பணி யாற்றிய திருவேங்கடம், பழனிச் சாமி, சிவலிங்கம் ஆகிய 3 ஆசிரி யர்கள் பணியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க புறப் பட்டனர். அவர்களுக்கு விழா கொண்டாடி கிராமமே ஒன்றுகூடி வழியனுப்பி வைத்தது. இப்பள்ளி யில் படித்த சுசீலா என்ற பெண் மணியே இப்பள்ளியின் முதல் பெண் ஆசிரியை” என்றார்.



ஓய்வுபெற்ற 80 வயதான ஆசிரியை சுசீலாவிடம் பேசிய போது, “என்னுடன் சில பெண்களே படித்தனர். ஆனால் வேலைக்கு யாரையும் அனுப்பவில்லை. வேலைக்குச் சென்ற சொற்பமான பெண்களில் நானும் ஒருத்தி. தற்போது பெண்களுக்கு விழிப் புணர்வு உள்ளது போல அப்போது இல்லை.

அங்கு படித்த ஒவ்வொருவரும் இது என் பள்ளி என பெருமிதம் கொண்டோம். ஆனால் இன்று ஆங்கிலப்பள்ளி, சிபிஎஸ்சி என தனியார் பள்ளிகளைப் பெற்றோர் நாடுகின்றனர். எங்களுக்கு வாழ்க்கை கொடுத்த பள்ளியில் எங்கள் சந்ததியினர் படிக்காமல் புறக்கணிப்பதைக் காணும்போது துக்கம் தாங்க முடியவில்லை” என்றார்.

நன்றி :- தி இந்து

[World ‘s Longest Subsea Eurotunnel

Connecting Britain to Europe

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 


UnderseaTunnel Link
முன்னுரை: 
13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் மேல் முதலாவது குகை அமைப்பு திட்டம் 1802 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது. அத்திட்டப்படி இடையில் இருந்த ஒரு தீவுடன் இணைத்து இரண்டு குகைகள் அமைத்துக் குதிரை வண்டிப் போக்குவரத்தைத் துவக்குவதாய் இருந்தது. சிறிது காலம் நீடித்த ‘அமியன்ஸ் சமாதானத் ‘ தருணத்தில் [Peace of Amiens] நெபோலியனின் திட்டத்தை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டிருந்தது! ஆனால் ஓராண்டுக் குள்ளே பிரிட்டன் மீது நெப்போலியன் கொண்டிருந்த வெறுப்பு மறுபடியும் திரும்பவே, அத்திட்டம் அத்துடன் கைவிடப்பட்டது!
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொழிற்புரட்சி நுணுக்கம் மிகுந்து, இருப்புப்பாதை இரயில் யுகம் பிறக்கவே, பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் கால்வாய்க் குகை [Channel Tunnel or Chunnel] ஒன்றைக் கட்டும் எண்ணம் மீண்டும் உருவெடுத்தது! அதே சமயத்தில் பகைவர் படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்துக்கு இயற்கையாகவே ஏற்பாட்டுள்ள கடல் அரணைக் கால்வாய் குகை நீக்கிவிடும் என்று சிந்தித்து, பிரிட்டனும் அந்தப் பாதுகாப்பு வேலியை இழக்கத் தயாராக இல்லை! அக்குறையைத் தவிர்க்க முன்னோடித் திட்டங்களில் குகைக் கணவாயை, யுத்த சமயத்தில் கடல் வெள்ளத்தால் மூழ்க்க பூதத் திறப்பிகள் [Giant Valves] அமைக்கப் பட்டிருந்தன!
1861 இல் ஜேம்ஸ் சாமர்ஸ் கடலடிக் கண்வாய் இரயில் பாதையை அமைக்க [The Channel Railway Connecting England & France By James Chalmers] முழு டிசைன் பணிகளைச் செய்து, விபரங்கள் அடங்கிய திட்டத்தைத் தயாரித்து, நிதி மதிப்பீடையும், நிதி சேர்ப்பு விளக்கத்தையும் வெளியிட்டார். அவரது திட்டத்தில் மாபெரும் இரும்புக் குழலை [Huge Iron Tube on the Seabed] கடல்தளத்தில் கிடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த டிசைனில் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்ததால் அத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது பிறகு கைவிடப் பட்டது!
1860, 1880, 1920, 1945 ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய புதிய முயற்சிகள் முளைத்து எழுவதற்கு முன்பே மறுபடியும் முடக்கப் பட்டன. இறுதியாக 1987 ஆம் ஆண்டில் முழு மூச்சில் பிரிட்டன், பிரான்ஸ் இரண்டு வல்லரசு நாடுகளும் கூடி உழைத்து, 150-250 அடி ஆழத்தில் இங்கிலீஷ் கால்வாய்க் கடலடியைக் குடைந்து இருபதாம் நூற்றாண்டின் சிரமமான, பிரமிக்கத் தக்க ஈரோ கணவாயை 1994 இல் கட்டி முடித்தார்கள். பிரிட்டனில் ஃபோக்ஸ்டோன், பிரான்ஸில் சங்கத் [Folkestone, Sangatte] ஆகிய இரு நகரங்களை இருப்புப் பாதை மூலமாக இணைத்து இரயிலில் பயணிகளும், வாகனங்களும், பளு பாரங்களும் போய்வர ஏதுவாக்கப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர், பிரென்ச் அதிபர் பிரான்கொ மிட்டிரான்ட் [Margaret Thatcher & Francois Mitterand] ஆகியோர் இருவரும் 1995 ஆண்டில் இரயில் போக்குவரத்துப் பாதையான ‘ஈரோ குகைக்குத் ‘ [Eurotunnel] திறப்பு விழாவை நிகழ்த்தினார்கள். 21 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடித்த ஈரோடன்னல், இருபதாம் நூற்றாண்டின் உன்னத பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது! அந்த நிதி மதிப்பு ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா மீதுள்ள பொன்வாயில் பாலத்தைக் [Golden Gate Bridge] கட்டிய தொகையைப் போல் 700 மடங்கு என்று கருதப்படுகிறது!
Eurotunnel -4
ஈரோக்குகை வழியாகச் செல்லும் இரயில் போக்குவரத்துகள்
ஈரோ குகை வழியாக நான்கு வகை வாகன வண்டிகள் அனுதினமும் பயணம் செய்கின்றன. மின்சார வண்டியான ‘மீட்சி இரயில் ‘ எனப்படும் ஷட்டில் [Le Shuttle], ஈரோப் கண்டம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்யும் டாசல் எஞ்சின் இழுக்கும் வேக வண்டி, ‘ஈரோஸ்டார் ‘ [Eurostar], பார இரயில் [Goods Train] ஆகிய பெரிய வாகனங்களும், பராமரிப்பு செய்யும் சிறிய பணி வண்டிகளும் குகைகளின் வழியாகச் செல்பவை. 7600 hp [Horse Power] இழுக்கும் ஆற்றல் கொண்டு 2000 டன் எடையுள்ள மீட்சி இரயில் குகைப் பாதை நிலையங்களுக் கிடையே மட்டும் திரும்பத் திரும்பப் பயணம் செய்பவை. கார்கள், பஸ்கள் கூட ஏற்றப் பட்டு மீட்சி வண்டி மூலமாக அனுதினம் கடலைக் கடக்கின்றன.
Eurotunnel -5
பிரான்ஸ், பிரிட்டன் இரட்டை நாட்டுக்குச் சொந்தமான, 3600 பேர் பணி புரியும் ஈரோடன்னல் கம்பேனி [Eurotunnel Consortium] இரயில் கணவாய்க் கண்காணிக்கும் பொறுப்பை 2086 ஆண்டுவரை ஏற்றுக் கொண்டுள்ளது. 2000 ஆண்டில் மட்டும் 2.8 மில்லியன் கார்கள், 80,000 பஸ்கள், 1.1 மில்லியன் டிரக்குகள் ஈரோக் கணவாய் வழியாகச் சென்றுள்ளன! அதே காலத்தில் லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஈரோஸ்டார் இரயில் பயணத்தில் [Eurostar Rail Service] குகை வழியாக 7.1 மில்லியன் மாந்தர் பயணம் செய்ததாக அறியப் படுகிறது! மேலும் 2.9 மில்லியன் டன் பாரங்களும் இரயில் பளு வண்டிகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளன.
Cutawawy
கடலடிக் குகையைக் குடையும் தொழிற்துறை நுணுக்கம்
தளர்ந்த மண்ணடங்கும் [Soft Soil] கடலடியிலோ அல்லது ஆற்றுக்கு அடியிலோ கணவாய்க் குகையைக் குடைந்து அமைப்பது, இன்னல்களைத் தரும் ஓர் அசுரப் பணி! மனிதர் யந்திரங்களைக் கொண்டு தோண்டும் போது, திடாரென மண்திட்டுகள் சரிந்து விழுவதும், வெள்ளம் கசிந்து குகையை மூடுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் எதிர்பாராத இடர் நிகழ்ச்சிகள்! ‘கடற்புழு ‘ அல்லது ‘கடல் நத்தை ‘ [Shipworm or Marine Mollusks] எனப்படும் ‘குகை தோண்டிக் கூடு ‘ கண்டுபிடிக்கும் வரை நீருக்கு அடியில் குகையைக் குடைவது முடியாத வினையாகக் கருதப்பட்டது! அக்கருவி பாதுகாப்பு அரண் ஒன்றைக் கொண்டு குடைந்து வெட்டும் உளிப்பற்கள் உள்ளும், புறமும் நத்தைபோல் நகர வசதி செய்யப் பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்து, வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் அந்த விபத்தில் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டுக் குகையில் வெள்ளம் அடித்துச் சென்றது!
அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அடித்துச் சென்றது!
Eurotunnel -3
1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஞ்சினியர் பீட்டர் பார்லோ [Peter Barlow] என்பவர் புருனெல் கருவியைச் செம்மைப் படுத்தி ஒற்றை இரும்புத் தகடைப் பயன்படுத்தி நேருளை வடிவத்தில் [Cylinderical Shape] பாதுக்காப்பு வெட்டுக் கருவியை அமைத்தார். பார்லோவின் சீடரான ஜேம்ஸ் ஹென்ரி கிரேஹெட் [James Henry Greathead] இரட்டை நேருளை வெட்டுக் கருவியை ஆக்கி, கடலடித் தூண்கள் போன்று காற்றின் அழுத்த விசையைப் பயன்படுத்திக் கருவியின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தத்தை நிலைப்படுத்தி, நவீனப் பாதுகாப்பு வெட்டுக் கருவியைத் தோற்றுவித்தார்!
1919 இல் நியூ யார்க் ஹட்ஸன் நதிக்குக் கீழே மன்ஹாட்டன் பகுதியை நியூ ஜெர்ஸியுடன் இணைக்கும் ‘ஹாலண்டு குகையைக் ‘ [Holland Tunnel] கிலிஃபோர்டு ஹாலண்டு [Clifford Holland] ஆரம்பித்து, 1927 இல் பின்பு மற்றவர்களால் முடிக்கப் பட்டது! 1950 ஆண்டு முதல் வெட்டுக் கருவியின் வெளிப் பாதுகாப்புக் கவசம், ‘நுழைக்கும் குழல்களாக ‘ [Sunken Tubes] மாற்றப் பட்டன! துளையைக் குடைந்ததும் கருவியின் மேற்புறம் சுற்றியுள்ள பெரும் இரும்புச் குழல்கள் நுழைக்கப்பட்டு குகை மண்ணைத் தாங்கும் அரணாக அமைக்கப் படுகிறது! பிறகு முன்வார்த்த வளைத் தட்டுகள் [Prefabricated Sections] செருகி இணைக்கப் பட்டு, வட்டக் குகை இடைவெளி மண்ணால் நிரப்பப் படுகிறது.
Eurotunnel -2
பிரிட்டிஷ் கால்வாய்க் கடலடியில் அமைத்த மூன்று குகைகள்
24 மைல் அகன்ற இங்கிலீஷ் கால்வாய்க் கடலுக்கு அடியே செல்லும், உலகிலே மிகப்பெரும் நீளமுள்ள குகைப் பாதையைக் கட்ட சுமார் 250 ஆண்டுகளாக பிரான்சும் பிரிட்டனும் முயன்று வந்திருக்கிறார்கள்! ஜப்பானின் செய்கான் கடற்குகை [Seikan Tunnel] அதைவிட நீளமானதாக இருந்தாலும், மெய்யாகக் கடக்கும் கடல் அகலம் [15 மைல்] அதைவிட ஒன்பது மைல் குன்றியது! 18 பில்லியன் டாலர் [1990 நாணய மதிப்பு] நிதி மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட ஈரோடன்னல் முயற்சிபோல் வரலாற்றில் செலவு மிக்க எந்தத் தனியார் துறை நிதி திரட்டுத் திட்டமும் அதுவரை துவக்கப்பட வில்லை! இறுதியில் ஈரோடன்னல் அமைக்கச் செலவான தொகை: 21 பில்லியன் டாலர்! குகை அமைப்பைப் பின்பற்றி இரண்டு தடவை 1880, 1974 ஆண்டுகளில் நிலத்தைத் தோண்டத் துவங்கினாலும், தொடரப்படாமல் திட்டம் ஏதோ ஒரு காரணத்தல் நிறுத்தமானது! ‘டோவர் [பிரிட்டன்], காலே [பிரான்ஸ்] ஆகிய இரு நகரையும் கடலடி இரயில் குகை மூலம் இணைக்கும் பாதை போன்று, ஆழ்ந்த விருப்பு வெறுப்பு மிகுந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று 1936 இல் பிரிட்டிஷ் பிரமுகர், வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) ஆத்திரமாகக் கூறினாராம்!
உலகிலே நீண்ட குகை குடையப் பட்ட போது நிபுணர்களுக்குப் பெரும் சவாலாய் பல பிரச்சனைகளை உண்டாக்கியது! எவ்விதம் நூற்றுக் கணக்கான வேலை ஆட்களை உள்ளே அனுப்பி, வெளியே பாதுகாப்பாய்க் கொண்டு வருவது ? எவ்விதம் கட்டுமானச் சாதனங்களை குகைக்குள் அனுப்புவது ? எவ்விதம் மில்லியன் டன் கணக்கில் தோண்டிய மண்ணையும், புழுதியையும் தொடர்ந்து அகற்றுவது ? மாபெரும் யந்திர சாதனங்களை ஈரடிப்பும், நீரடிப்பும் மண்டிய புழுதியில், பல மைல் தூரம் குகைக்குள்ளே எப்படி இழுத்துச் செல்வது ? குகை தோண்டும் யந்திர வெட்டிகள் [Rotary Cutters], குப்பைமண் அகற்றிகள் [Conveyor Belts] அடிக்கடிச் சிக்கிக் கொள்ளும் போது, வெகு சிரமப் பணிகள் செய்து அவை தளர்த்தப்பட வேண்டும்!
இறுதியாக 1987 இல் பிரான்சும் பிரிட்டனும் இருபுறமும் தோண்ட ஆரம்பித்து, 1990 டிசம்பர் முதல் தேதி வரலாற்று முக்கிய நாளில், அட்லாண்டிக் கடலடில் 200 அடி ஆழத்தில் கைகோர்த்து இணைப்பு விழாவைக் கொண்டாடினர்! இரு குழுவினரும் திக்குத் தெரியாத வெப்பக் குகைக்குள்ளே தோண்டும் போது, ஒருவரை ஒருவர் மறைமுகமாக அணுகும்படித் தளநோக்குத் திசை அறிவிக்க [Survey Direction By Natigation Satellites, Triangulation & Plumb] நவீன அண்டவெளித் துணைக்கோள் பாதை காட்டும் நுணுக்க முறைகள் பயன்படுத்தப் பட்டன. லேசர் கதிருடன் இணைக்கப்பட்ட மின் கணனிகள் [Guided by Computer Linked Lasers] குகை குடையும் பணியாளிகளுக்கு தொடர்ந்து திசை காட்டின.
கணவாயின் இருபுறத்திலும் பூதப் புழுக்கள் போல் கடல் மடியைக் குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machines (TBM)] மணிக்கு 2400 டன் மண்ணைக் குடைந்து வெளியே தள்ளின! அந்தப் பூத யந்திரங்கள் சுற்றும் டங்ஸ்டன் வெட்டுப் பற்களைக் கொண்டவை! ஒரே சமயத்தில் குடைந்து, ஒரே சமயத்தில் மண்ணை அகற்றி, ஒரே சமயத்தில் குகைக்கு உட்கவசம் [Lining Shell] பூணும் திறமை கொண்டவை! குகை முடிந்ததும் சேர்ந்து போன மண்குவியல் 8 மில்லியன் கியூபிக் மீடர் கொள்ளளவுக் கோபுரமாக உயர்ந்தது! குகைப்பணி மையத்தில் முடிந்ததும் பிரிட்டிஷ் தோண்டும் யந்திரம் குகைக்குள்ளே புதைக்கப் பட்டது! பிரென்ச் யந்திரம் தொடர்ந்து தோண்டி கணவாய்க் குகையை முழுவதையும் தோண்டி முடித்தது!
இங்கிலீஷ் கால்வாயின் கடல்நீர்க் கடியில் 150-250 அடி ஆழத்தில் இறுகிய சுண்ணாம்பு அடுக்குகளைக் [Chalk Layers] குடைந்து, மூன்று இணையான குகைகள் [Three Parallel Tunnels] தோண்டப்பட்டன. குகைகளின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீடர்]. கடக்கும் கடலின் நீளம்: 24 மைல். 25 அடி விட்டமுள்ள இரண்டு இரயில் பாதைக் குகைகள், அவற்றுக்கு இடையே 50 அடி தூர மையத்தில் 16 அடி விட்டமுள்ள பணிக்குகை [Service Tunnel] ஒன்றும் ஆக மூன்று குகைகள் அமைக்கப்பட்டன. பணிக்குகையில் பராமரிப்பு, செப்பணிடும் வாகனங்கள் உலவ முடியும். மையக் குகை 1230 அடிக்கு ஒருதரமாக 270 இடங்களில் மற்ற பக்கத்துக் குகைகளோடு இணைக்கப் பட்டுள்ளது. பணிக்குகையில் காற்றழுத்தம் மற்ற இரண்டு குகைகளை விடவும் சற்று அதிகமாக்கப்பட்டு, அபாய நிகழ்ச்சியின் போது ‘அடைப்பு முறம் ‘ [Dampers] திறந்து இணைப்பாகி, பயணிகளுக்கு புதுக் காற்றையும், பாதுகாப்பையும் அளிக்க ஏதுவாகிறது.
இருபுறமும் அமைந்த இரயில் குகைகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இரயில் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் காற்றுப் போக்கு இழுப்பைத் [Aerodynamic Drag] தவிர்த்துச் சமநிலைப் படுத்த, ‘விடுவிப்புக் குழல் இணைப்புகள் ‘ [Relief Ducts Joints] அமைக்கப் பட்டுள்ளன. இரயிலின் பொதுவான வேகம் மணிக்கு 87 மைல்; உச்ச வேகம் மணிக்கு 100 மைல். பிரிட்டனிலிருந்து குகைவழியாகப் பிரான்சுக்கு இரயில் 35 நிமிடங்களில் வந்து விடுகிறது. நேர்த்திசை இரயில் ஒரு குகையிலும், எதிர்த்திசை இரயில் அடுத்த குகையிலும் செல்கின்றன. தேவைப் பட்டால் திசை மாற்றி இரயில் வேறு குகையில் செல்லவும் இருப்புப் பாதைக் குறுக்கு இணைப்புகள் செய்யப் பட்டுள்ளன.
முப்பத்து மைல் நீண்ட குகை, 24 மைல் நீளமான கடலுக்குக் கீழே 150 அடி முதல் 250 அடி ஆழத்தில் செல்கிறது. அவ்விதம் நீண்ட குகையில் புவிநிலை வாயு அழுத்தம் [Atmospheric Pressure] சீராகக் காற்று நுழையும் செங்குத்து ‘விடுவிப்பித் துளைகள் ‘ [Venting Shafts] இரண்டு நிலப் பகுதியில் [பிரிட்டன் கரையில் ஒன்றும், பிரென்ச் கரையில் ஒன்றும்] அமைக்கப் பட்டுள்ளன. ஈரோ குகையின் உள்ளே முப்பது மைல் பாதைகளில் எங்காவது தீ விபத்து நேர்ந்தால், பயணிகளையும் சாதனங்களையும் முதலில் பாதுகாப்பது, ஈரோடன்னல் அதிகாரிகளின் தலையாய பணியாகிறது! மின்சார இரயில் வண்டிகள் 25,000 வோல்ட் அழுத்தமுள்ள மேல்தளத் தொங்கு கம்பிகளில் மின்சக்தியை உறிஞ்சிக் கொண்டு மணிக்கு 100 மைல் உச்ச வேகத்தில் செல்லும் போது, மின்சாரத் தீ விபத்து நேர வாய்ப்புள்ளது! அடுத்து இரசாயனப் பளுக்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளில் தீப்பற்றி எழவும் வாய்ப்புக்கள் உள்ளன!
ஈரோக்குகை ஆட்சி அரங்கு, பாதுகாப்பு மையங்கள்
இரயில் வண்டிகளின் பயணப் போக்குகள், வேகங்கள், திசைகள், ஓடு மிடங்கள் யாவும், ஈரோடன்னல் ஆட்சி அரங்கில் [Eurotunnel Control Centre] தொடர்ந்து அல்லும் பகலும் கண்காணிக்கப் படுகின்றன. மின்சாரச் சமிக்கை ஏற்பாடுகள் [The Electric Signalling System] அனைத்தும் பிரென்ச் கண்காணிப்பு ஏற்பாடுகளில் [French TVM-430] இயங்கி வருகின்றன. சமிக்கை மின்னோட்டங்கள் இருப்புப் பாதைகளுக்கு அருகே உள்ள சாதனங்கள் மூலம், ஓட்டுநர் காண எஞ்சின் ஆட்சி அரங்குக்கு அனுப்பப் படுகின்றன. வண்டியின் வேகம் உச்ச அளவைத் [மணிக்கு 100 மைல்] தாண்டும் போது, மைய ஆட்சி அரங்கின் சுயக் கட்டுப்பாடு சாதனம் எஞ்சின் சக்கிரங்களுக்குத் தடை உராய்வு அளித்து [Automatic Brake Application] வேகத்தைக் குறைக்கிறது!
ஈரோக் குகையின் இருபுறமும் தீவிபத்தைக் கட்டுப்படுத்த ‘தீ கண்காணிப்பு மையம் ‘ [Fire Management Centre] அமைக்கப் பட்டுள்ளது. அவற்றின் முக்கிய பணிகள்:
சுழலும் கூரிய தோண்டி
1. குகையில் அனைத்துத் தீப்புகை அறிவிப்புச் சாதனங்களையும், தீயணைப்பு பாதுகாப்புக் கருவிகளையும் [Monitor Fire Detection & Suppression Equipment] கண்காணித்து வருதல்.
2. எதிர்பாராது தீவிபத்து நேர்ந்தால், மைய ஆட்சி அரங்கிற்கு எச்சரிப்பது.
3. ஒவ்வொரு கண்காணிப்பு மையத்திலும், தீயணைப்புச் சாதனங்கள் சேமித்து வைக்கப்பட்டு, போதிய தீயணைப்புப் படையினர் இராப் பகலாகப் 24 மணிநேரப் பணியில் தயாராக இருப்பது.
4. தீயணைப்பு மையங்கள் யாவும் வெளிப்புறம் நிறுவகமான எல்லா அபாய நிகழ்ச்சி மையங்களுடன் சுயமான எச்சரிக்கைத் தொடர்பைக் கொண்டிருப்பது.
செப்பணிடும் சிறிய நடுக்குகை
 Fire Escape
ஈரோக் கணவாயில் ஏற்பட்ட முதல் தீவிபத்து!
1996 நவம்பர் 18 ஆம் தேதி இரவு 8:45 மணி பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குப் பாரம் ஏற்றிச் சென்ற 29 பெட்டி மீட்சி இரயிலில் [29-Car Vehicle Shuttle (Carrier Wagon)] முதல் ஈரோடன்னல் தீ விபத்து ஏற்பட்டது! பிரான்ஸ் முனைக் கலே [Calais] நிலையத்தைக் கடந்து, குகைக்குள் நுழையும் போது பார வண்டியின் கடைசிப் பெட்டியில் தீ கிளம்பி யிருக்க வேண்டும் என்று தீயணைப்புப் படையினர் கருதுகிறார்கள். தீ எழுச்சி உடனே ஈரோகுகை ஆட்சி அரங்குக்கு அறிவிக்கப் பட்டது! தீயணைப்பு விதிகளின்படி, பார வண்டியின் பயணம் தொடர அனுமதிக்கப் பட்டுப் பிரிட்டன் நிலையத்தில் தீ அணைக்கப் பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது! அம்முடிவு எஞ்சின் ஓட்டுநருக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் தீ பெருகி விட்டதாகத் தெரிகிறது!
குகையின் முனையில் தயாராக இருக்கும் பிரென்ச் பகுதியின் ‘முன்னோடிக் காப்புக் குழு ‘ [First Line of Response Team (FLOR)], மையத்தில் உள்ள பணிக்குகையில் தீக்கட்டுப்பாடு சாதனங்களைப் பயன்படுத்த எதிர்பார்த்திருந்தது. மையத்தில் இருந்த பிரிட்டன் பகுதி தீயணைப்புப் படையும் தயாராக இருந்தது. அச்சமயம் எஞ்சின் அறைக் கருவி அரங்கில், ‘வண்டியில் முரண்பாடு நிகழ்ச்சி ‘ இருப்பதாகக் காட்டி, ‘இரயில் தண்டவாளத்திலிருந்து புரண்டு விடும் ‘ என்று ஒரு சிவப்பு சமிக்கை எச்சரிப்பு விடுத்தது! விதிப்படி உடனே வண்டி குகை நடுவே ஓட்டுநரால் நிறுத்தப் பட்டது! அப்போது வண்டி அடைந்த தூரம் கலே யிலிருந்து 12 மைல்!
வண்டியின் மேற்பார்வை அதிபதி [Chef De Train] என்ன நிகழ்கிறது என்று கதவைத் திறக்க, புகை மண்டலம் உண்டி வாகனத்தில் நுழைந்தது! உடனே அதன் உள்ளிருந்த 33 நபர் பாதுகாப்பான மையக் குகைக்குள் அழைத்துச் செல்லப் பட்டனர். அப்போது எதிர்த்திசையில் வந்த இரயில் நிறுத்தப் பட்டு 33 நபர் அந்த வண்டியில் மீண்டும் கலே நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். தீப் பற்றிய பெட்டியும், மற்ற ஏழு பெட்டிகளும் தீயில் எரிந்து முழுவதும் மாய்ந்தன! கொளுந்து விட்டுப் பற்றிய நெருப்பு, குகையின் 1330 அடி [400 மீடர்] நீளக் காங்கிரீட் கவசத்தை 16 அங்குல ஆழத்துக்குச் சிதைத்தது!
தீக் கட்டுப்பாடு காலை 5:00 மணிக்கு செய்ய முடிந்து, 11:15 மணிக்குத் தீ முழுவதும் அணைக்கப் பட்டது! பதினைந்து நாட்கள் தீப் பற்றிய குகையில் பயணம் நிறுத்தமாகி, மறுபுறம் உள்ள குகையில் மட்டும் வாகனப் போக்குகள் தொடர்ந்தன. 1996 டிசம்பர் 10 முதல் மறுபடியும் இரயில் பயணங்கள் இரண்டு திசையிலும் சீராகின. சுற்றுப் பயண இரயில் போக்குகள் 1997 ஜனவரி 6 முதல் மறுபடியும் அனுமதிக்கப் பட்டன!
இங்கிலீஷ் கால்வாய்ப் பயணத்தின் எதிர்கால நிலைப்பாடு
1998 ஆண்டில் மட்டும் 3.45 மில்லியன் சுற்றுப் பயண வாகனங்கள் ஈரோ கணவாய் வழியாகச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. ஈரோடன்னலில் பயண மக்கள் அடர்த்தியும், வாகனப் போக்குகள் எண்ணிக்கையும் மிகையாகி வருவதால், புதிய ஏற்பாடுகளை பிரான்சும், பிரிட்டனும் சிந்தித்துக் கொண்டு வருகின்றன! ஏகக் குறுகிய இருப்புப் பாதையாய்த் தனித்தியங்கி வரும் ஈரோடன்னலுக்குப் போட்டியாக அடுத்தொரு கடற்குகை வெகு சீக்கிரத்தில் இங்கிலீஷ் கால்வாயில் வரப் போவதாக அறியப்படுகிறது! அத்திட்டத்தில் இரண்டு குகைகள் அமைக்கப்பட விருக்கின்றன. முதல் குகை: ஒரு திசையில் போகும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதைகளை ஒரு மட்டத்தில் கொண்டு, அதற்கு மேல் மட்டத்தில் எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதையும் அமைப்பதாக உள்ளது. இரண்டாம் குகை: முதல் குகைபோல் ஒரு திசையில் செல்லும் இரட்டை இருப்புப் பாதை ஒரு மட்டத்திலும், அடுத்த மட்டத்தில் எதிர்த்திசையில் செல்லும் இரயிலுக்கு இருப்புப் பாதை இரண்டும் கட்டப் போவதாகத் தெரிகிறது.
தகவல்:
1. The Seven Wonders of the World By Life [Dec 15, 2003]
2. National Geographic Sosiety -Underwater Tunnels, Marvels of Engineering [1992]
3. National Geographic France Celebrates Its Bicentennial [July 1989]
4. The E-Learing Zone -Facts & Figures of the Channel Tunnel [www.cornwallis.kent.uk/intranet/elearn/science/eurotunn] [2004]
5. Channel Tunnel (Chunnel) Vital Statics
6. English Channel Tunnel Fire National Fire Protection Association, Quincy, MA, USA. [Nov 16, 1996]
7. Le Shuttle Arriving in France -Jeremy Lennard & Agencies [Apr 7, 2004]
8. The Tunnel Boring Details, About Eurotunnel [Feb 23, 2004]
9. The History of Eurotunnel [www.eurotunnel.co.uk/]
*************

ஈரோக்குகை உலகிலே நீளமான கடலடிக் கணவாய் -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

[World ‘s Longest Subsea Eurotunnel

Connecting Britain to Europe

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 


UnderseaTunnel Link
முன்னுரை: 
13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் மேல் முதலாவது குகை அமைப்பு திட்டம் 1802 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது. அத்திட்டப்படி இடையில் இருந்த ஒரு தீவுடன் இணைத்து இரண்டு குகைகள் அமைத்துக் குதிரை வண்டிப் போக்குவரத்தைத் துவக்குவதாய் இருந்தது. சிறிது காலம் நீடித்த ‘அமியன்ஸ் சமாதானத் ‘ தருணத்தில் [Peace of Amiens] நெபோலியனின் திட்டத்தை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டிருந்தது! ஆனால் ஓராண்டுக் குள்ளே பிரிட்டன் மீது நெப்போலியன் கொண்டிருந்த வெறுப்பு மறுபடியும் திரும்பவே, அத்திட்டம் அத்துடன் கைவிடப்பட்டது!
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொழிற்புரட்சி நுணுக்கம் மிகுந்து, இருப்புப்பாதை இரயில் யுகம் பிறக்கவே, பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் கால்வாய்க் குகை [Channel Tunnel or Chunnel] ஒன்றைக் கட்டும் எண்ணம் மீண்டும் உருவெடுத்தது! அதே சமயத்தில் பகைவர் படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்துக்கு இயற்கையாகவே ஏற்பாட்டுள்ள கடல் அரணைக் கால்வாய் குகை நீக்கிவிடும் என்று சிந்தித்து, பிரிட்டனும் அந்தப் பாதுகாப்பு வேலியை இழக்கத் தயாராக இல்லை! அக்குறையைத் தவிர்க்க முன்னோடித் திட்டங்களில் குகைக் கணவாயை, யுத்த சமயத்தில் கடல் வெள்ளத்தால் மூழ்க்க பூதத் திறப்பிகள் [Giant Valves] அமைக்கப் பட்டிருந்தன!
1861 இல் ஜேம்ஸ் சாமர்ஸ் கடலடிக் கண்வாய் இரயில் பாதையை அமைக்க [The Channel Railway Connecting England & France By James Chalmers] முழு டிசைன் பணிகளைச் செய்து, விபரங்கள் அடங்கிய திட்டத்தைத் தயாரித்து, நிதி மதிப்பீடையும், நிதி சேர்ப்பு விளக்கத்தையும் வெளியிட்டார். அவரது திட்டத்தில் மாபெரும் இரும்புக் குழலை [Huge Iron Tube on the Seabed] கடல்தளத்தில் கிடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த டிசைனில் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்ததால் அத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது பிறகு கைவிடப் பட்டது!
1860, 1880, 1920, 1945 ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய புதிய முயற்சிகள் முளைத்து எழுவதற்கு முன்பே மறுபடியும் முடக்கப் பட்டன. இறுதியாக 1987 ஆம் ஆண்டில் முழு மூச்சில் பிரிட்டன், பிரான்ஸ் இரண்டு வல்லரசு நாடுகளும் கூடி உழைத்து, 150-250 அடி ஆழத்தில் இங்கிலீஷ் கால்வாய்க் கடலடியைக் குடைந்து இருபதாம் நூற்றாண்டின் சிரமமான, பிரமிக்கத் தக்க ஈரோ கணவாயை 1994 இல் கட்டி முடித்தார்கள். பிரிட்டனில் ஃபோக்ஸ்டோன், பிரான்ஸில் சங்கத் [Folkestone, Sangatte] ஆகிய இரு நகரங்களை இருப்புப் பாதை மூலமாக இணைத்து இரயிலில் பயணிகளும், வாகனங்களும், பளு பாரங்களும் போய்வர ஏதுவாக்கப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர், பிரென்ச் அதிபர் பிரான்கொ மிட்டிரான்ட் [Margaret Thatcher & Francois Mitterand] ஆகியோர் இருவரும் 1995 ஆண்டில் இரயில் போக்குவரத்துப் பாதையான ‘ஈரோ குகைக்குத் ‘ [Eurotunnel] திறப்பு விழாவை நிகழ்த்தினார்கள். 21 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடித்த ஈரோடன்னல், இருபதாம் நூற்றாண்டின் உன்னத பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது! அந்த நிதி மதிப்பு ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா மீதுள்ள பொன்வாயில் பாலத்தைக் [Golden Gate Bridge] கட்டிய தொகையைப் போல் 700 மடங்கு என்று கருதப்படுகிறது!
Eurotunnel -4
ஈரோக்குகை வழியாகச் செல்லும் இரயில் போக்குவரத்துகள்
ஈரோ குகை வழியாக நான்கு வகை வாகன வண்டிகள் அனுதினமும் பயணம் செய்கின்றன. மின்சார வண்டியான ‘மீட்சி இரயில் ‘ எனப்படும் ஷட்டில் [Le Shuttle], ஈரோப் கண்டம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்யும் டாசல் எஞ்சின் இழுக்கும் வேக வண்டி, ‘ஈரோஸ்டார் ‘ [Eurostar], பார இரயில் [Goods Train] ஆகிய பெரிய வாகனங்களும், பராமரிப்பு செய்யும் சிறிய பணி வண்டிகளும் குகைகளின் வழியாகச் செல்பவை. 7600 hp [Horse Power] இழுக்கும் ஆற்றல் கொண்டு 2000 டன் எடையுள்ள மீட்சி இரயில் குகைப் பாதை நிலையங்களுக் கிடையே மட்டும் திரும்பத் திரும்பப் பயணம் செய்பவை. கார்கள், பஸ்கள் கூட ஏற்றப் பட்டு மீட்சி வண்டி மூலமாக அனுதினம் கடலைக் கடக்கின்றன.
Eurotunnel -5
பிரான்ஸ், பிரிட்டன் இரட்டை நாட்டுக்குச் சொந்தமான, 3600 பேர் பணி புரியும் ஈரோடன்னல் கம்பேனி [Eurotunnel Consortium] இரயில் கணவாய்க் கண்காணிக்கும் பொறுப்பை 2086 ஆண்டுவரை ஏற்றுக் கொண்டுள்ளது. 2000 ஆண்டில் மட்டும் 2.8 மில்லியன் கார்கள், 80,000 பஸ்கள், 1.1 மில்லியன் டிரக்குகள் ஈரோக் கணவாய் வழியாகச் சென்றுள்ளன! அதே காலத்தில் லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஈரோஸ்டார் இரயில் பயணத்தில் [Eurostar Rail Service] குகை வழியாக 7.1 மில்லியன் மாந்தர் பயணம் செய்ததாக அறியப் படுகிறது! மேலும் 2.9 மில்லியன் டன் பாரங்களும் இரயில் பளு வண்டிகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளன.
Cutawawy
கடலடிக் குகையைக் குடையும் தொழிற்துறை நுணுக்கம்
தளர்ந்த மண்ணடங்கும் [Soft Soil] கடலடியிலோ அல்லது ஆற்றுக்கு அடியிலோ கணவாய்க் குகையைக் குடைந்து அமைப்பது, இன்னல்களைத் தரும் ஓர் அசுரப் பணி! மனிதர் யந்திரங்களைக் கொண்டு தோண்டும் போது, திடாரென மண்திட்டுகள் சரிந்து விழுவதும், வெள்ளம் கசிந்து குகையை மூடுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் எதிர்பாராத இடர் நிகழ்ச்சிகள்! ‘கடற்புழு ‘ அல்லது ‘கடல் நத்தை ‘ [Shipworm or Marine Mollusks] எனப்படும் ‘குகை தோண்டிக் கூடு ‘ கண்டுபிடிக்கும் வரை நீருக்கு அடியில் குகையைக் குடைவது முடியாத வினையாகக் கருதப்பட்டது! அக்கருவி பாதுகாப்பு அரண் ஒன்றைக் கொண்டு குடைந்து வெட்டும் உளிப்பற்கள் உள்ளும், புறமும் நத்தைபோல் நகர வசதி செய்யப் பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்து, வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் அந்த விபத்தில் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டுக் குகையில் வெள்ளம் அடித்துச் சென்றது!
அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அடித்துச் சென்றது!
Eurotunnel -3
1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஞ்சினியர் பீட்டர் பார்லோ [Peter Barlow] என்பவர் புருனெல் கருவியைச் செம்மைப் படுத்தி ஒற்றை இரும்புத் தகடைப் பயன்படுத்தி நேருளை வடிவத்தில் [Cylinderical Shape] பாதுக்காப்பு வெட்டுக் கருவியை அமைத்தார். பார்லோவின் சீடரான ஜேம்ஸ் ஹென்ரி கிரேஹெட் [James Henry Greathead] இரட்டை நேருளை வெட்டுக் கருவியை ஆக்கி, கடலடித் தூண்கள் போன்று காற்றின் அழுத்த விசையைப் பயன்படுத்திக் கருவியின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தத்தை நிலைப்படுத்தி, நவீனப் பாதுகாப்பு வெட்டுக் கருவியைத் தோற்றுவித்தார்!
1919 இல் நியூ யார்க் ஹட்ஸன் நதிக்குக் கீழே மன்ஹாட்டன் பகுதியை நியூ ஜெர்ஸியுடன் இணைக்கும் ‘ஹாலண்டு குகையைக் ‘ [Holland Tunnel] கிலிஃபோர்டு ஹாலண்டு [Clifford Holland] ஆரம்பித்து, 1927 இல் பின்பு மற்றவர்களால் முடிக்கப் பட்டது! 1950 ஆண்டு முதல் வெட்டுக் கருவியின் வெளிப் பாதுகாப்புக் கவசம், ‘நுழைக்கும் குழல்களாக ‘ [Sunken Tubes] மாற்றப் பட்டன! துளையைக் குடைந்ததும் கருவியின் மேற்புறம் சுற்றியுள்ள பெரும் இரும்புச் குழல்கள் நுழைக்கப்பட்டு குகை மண்ணைத் தாங்கும் அரணாக அமைக்கப் படுகிறது! பிறகு முன்வார்த்த வளைத் தட்டுகள் [Prefabricated Sections] செருகி இணைக்கப் பட்டு, வட்டக் குகை இடைவெளி மண்ணால் நிரப்பப் படுகிறது.
Eurotunnel -2
பிரிட்டிஷ் கால்வாய்க் கடலடியில் அமைத்த மூன்று குகைகள்
24 மைல் அகன்ற இங்கிலீஷ் கால்வாய்க் கடலுக்கு அடியே செல்லும், உலகிலே மிகப்பெரும் நீளமுள்ள குகைப் பாதையைக் கட்ட சுமார் 250 ஆண்டுகளாக பிரான்சும் பிரிட்டனும் முயன்று வந்திருக்கிறார்கள்! ஜப்பானின் செய்கான் கடற்குகை [Seikan Tunnel] அதைவிட நீளமானதாக இருந்தாலும், மெய்யாகக் கடக்கும் கடல் அகலம் [15 மைல்] அதைவிட ஒன்பது மைல் குன்றியது! 18 பில்லியன் டாலர் [1990 நாணய மதிப்பு] நிதி மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட ஈரோடன்னல் முயற்சிபோல் வரலாற்றில் செலவு மிக்க எந்தத் தனியார் துறை நிதி திரட்டுத் திட்டமும் அதுவரை துவக்கப்பட வில்லை! இறுதியில் ஈரோடன்னல் அமைக்கச் செலவான தொகை: 21 பில்லியன் டாலர்! குகை அமைப்பைப் பின்பற்றி இரண்டு தடவை 1880, 1974 ஆண்டுகளில் நிலத்தைத் தோண்டத் துவங்கினாலும், தொடரப்படாமல் திட்டம் ஏதோ ஒரு காரணத்தல் நிறுத்தமானது! ‘டோவர் [பிரிட்டன்], காலே [பிரான்ஸ்] ஆகிய இரு நகரையும் கடலடி இரயில் குகை மூலம் இணைக்கும் பாதை போன்று, ஆழ்ந்த விருப்பு வெறுப்பு மிகுந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று 1936 இல் பிரிட்டிஷ் பிரமுகர், வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) ஆத்திரமாகக் கூறினாராம்!
உலகிலே நீண்ட குகை குடையப் பட்ட போது நிபுணர்களுக்குப் பெரும் சவாலாய் பல பிரச்சனைகளை உண்டாக்கியது! எவ்விதம் நூற்றுக் கணக்கான வேலை ஆட்களை உள்ளே அனுப்பி, வெளியே பாதுகாப்பாய்க் கொண்டு வருவது ? எவ்விதம் கட்டுமானச் சாதனங்களை குகைக்குள் அனுப்புவது ? எவ்விதம் மில்லியன் டன் கணக்கில் தோண்டிய மண்ணையும், புழுதியையும் தொடர்ந்து அகற்றுவது ? மாபெரும் யந்திர சாதனங்களை ஈரடிப்பும், நீரடிப்பும் மண்டிய புழுதியில், பல மைல் தூரம் குகைக்குள்ளே எப்படி இழுத்துச் செல்வது ? குகை தோண்டும் யந்திர வெட்டிகள் [Rotary Cutters], குப்பைமண் அகற்றிகள் [Conveyor Belts] அடிக்கடிச் சிக்கிக் கொள்ளும் போது, வெகு சிரமப் பணிகள் செய்து அவை தளர்த்தப்பட வேண்டும்!
இறுதியாக 1987 இல் பிரான்சும் பிரிட்டனும் இருபுறமும் தோண்ட ஆரம்பித்து, 1990 டிசம்பர் முதல் தேதி வரலாற்று முக்கிய நாளில், அட்லாண்டிக் கடலடில் 200 அடி ஆழத்தில் கைகோர்த்து இணைப்பு விழாவைக் கொண்டாடினர்! இரு குழுவினரும் திக்குத் தெரியாத வெப்பக் குகைக்குள்ளே தோண்டும் போது, ஒருவரை ஒருவர் மறைமுகமாக அணுகும்படித் தளநோக்குத் திசை அறிவிக்க [Survey Direction By Natigation Satellites, Triangulation & Plumb] நவீன அண்டவெளித் துணைக்கோள் பாதை காட்டும் நுணுக்க முறைகள் பயன்படுத்தப் பட்டன. லேசர் கதிருடன் இணைக்கப்பட்ட மின் கணனிகள் [Guided by Computer Linked Lasers] குகை குடையும் பணியாளிகளுக்கு தொடர்ந்து திசை காட்டின.
கணவாயின் இருபுறத்திலும் பூதப் புழுக்கள் போல் கடல் மடியைக் குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machines (TBM)] மணிக்கு 2400 டன் மண்ணைக் குடைந்து வெளியே தள்ளின! அந்தப் பூத யந்திரங்கள் சுற்றும் டங்ஸ்டன் வெட்டுப் பற்களைக் கொண்டவை! ஒரே சமயத்தில் குடைந்து, ஒரே சமயத்தில் மண்ணை அகற்றி, ஒரே சமயத்தில் குகைக்கு உட்கவசம் [Lining Shell] பூணும் திறமை கொண்டவை! குகை முடிந்ததும் சேர்ந்து போன மண்குவியல் 8 மில்லியன் கியூபிக் மீடர் கொள்ளளவுக் கோபுரமாக உயர்ந்தது! குகைப்பணி மையத்தில் முடிந்ததும் பிரிட்டிஷ் தோண்டும் யந்திரம் குகைக்குள்ளே புதைக்கப் பட்டது! பிரென்ச் யந்திரம் தொடர்ந்து தோண்டி கணவாய்க் குகையை முழுவதையும் தோண்டி முடித்தது!
இங்கிலீஷ் கால்வாயின் கடல்நீர்க் கடியில் 150-250 அடி ஆழத்தில் இறுகிய சுண்ணாம்பு அடுக்குகளைக் [Chalk Layers] குடைந்து, மூன்று இணையான குகைகள் [Three Parallel Tunnels] தோண்டப்பட்டன. குகைகளின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீடர்]. கடக்கும் கடலின் நீளம்: 24 மைல். 25 அடி விட்டமுள்ள இரண்டு இரயில் பாதைக் குகைகள், அவற்றுக்கு இடையே 50 அடி தூர மையத்தில் 16 அடி விட்டமுள்ள பணிக்குகை [Service Tunnel] ஒன்றும் ஆக மூன்று குகைகள் அமைக்கப்பட்டன. பணிக்குகையில் பராமரிப்பு, செப்பணிடும் வாகனங்கள் உலவ முடியும். மையக் குகை 1230 அடிக்கு ஒருதரமாக 270 இடங்களில் மற்ற பக்கத்துக் குகைகளோடு இணைக்கப் பட்டுள்ளது. பணிக்குகையில் காற்றழுத்தம் மற்ற இரண்டு குகைகளை விடவும் சற்று அதிகமாக்கப்பட்டு, அபாய நிகழ்ச்சியின் போது ‘அடைப்பு முறம் ‘ [Dampers] திறந்து இணைப்பாகி, பயணிகளுக்கு புதுக் காற்றையும், பாதுகாப்பையும் அளிக்க ஏதுவாகிறது.
இருபுறமும் அமைந்த இரயில் குகைகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இரயில் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் காற்றுப் போக்கு இழுப்பைத் [Aerodynamic Drag] தவிர்த்துச் சமநிலைப் படுத்த, ‘விடுவிப்புக் குழல் இணைப்புகள் ‘ [Relief Ducts Joints] அமைக்கப் பட்டுள்ளன. இரயிலின் பொதுவான வேகம் மணிக்கு 87 மைல்; உச்ச வேகம் மணிக்கு 100 மைல். பிரிட்டனிலிருந்து குகைவழியாகப் பிரான்சுக்கு இரயில் 35 நிமிடங்களில் வந்து விடுகிறது. நேர்த்திசை இரயில் ஒரு குகையிலும், எதிர்த்திசை இரயில் அடுத்த குகையிலும் செல்கின்றன. தேவைப் பட்டால் திசை மாற்றி இரயில் வேறு குகையில் செல்லவும் இருப்புப் பாதைக் குறுக்கு இணைப்புகள் செய்யப் பட்டுள்ளன.
முப்பத்து மைல் நீண்ட குகை, 24 மைல் நீளமான கடலுக்குக் கீழே 150 அடி முதல் 250 அடி ஆழத்தில் செல்கிறது. அவ்விதம் நீண்ட குகையில் புவிநிலை வாயு அழுத்தம் [Atmospheric Pressure] சீராகக் காற்று நுழையும் செங்குத்து ‘விடுவிப்பித் துளைகள் ‘ [Venting Shafts] இரண்டு நிலப் பகுதியில் [பிரிட்டன் கரையில் ஒன்றும், பிரென்ச் கரையில் ஒன்றும்] அமைக்கப் பட்டுள்ளன. ஈரோ குகையின் உள்ளே முப்பது மைல் பாதைகளில் எங்காவது தீ விபத்து நேர்ந்தால், பயணிகளையும் சாதனங்களையும் முதலில் பாதுகாப்பது, ஈரோடன்னல் அதிகாரிகளின் தலையாய பணியாகிறது! மின்சார இரயில் வண்டிகள் 25,000 வோல்ட் அழுத்தமுள்ள மேல்தளத் தொங்கு கம்பிகளில் மின்சக்தியை உறிஞ்சிக் கொண்டு மணிக்கு 100 மைல் உச்ச வேகத்தில் செல்லும் போது, மின்சாரத் தீ விபத்து நேர வாய்ப்புள்ளது! அடுத்து இரசாயனப் பளுக்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளில் தீப்பற்றி எழவும் வாய்ப்புக்கள் உள்ளன!
ஈரோக்குகை ஆட்சி அரங்கு, பாதுகாப்பு மையங்கள்
இரயில் வண்டிகளின் பயணப் போக்குகள், வேகங்கள், திசைகள், ஓடு மிடங்கள் யாவும், ஈரோடன்னல் ஆட்சி அரங்கில் [Eurotunnel Control Centre] தொடர்ந்து அல்லும் பகலும் கண்காணிக்கப் படுகின்றன. மின்சாரச் சமிக்கை ஏற்பாடுகள் [The Electric Signalling System] அனைத்தும் பிரென்ச் கண்காணிப்பு ஏற்பாடுகளில் [French TVM-430] இயங்கி வருகின்றன. சமிக்கை மின்னோட்டங்கள் இருப்புப் பாதைகளுக்கு அருகே உள்ள சாதனங்கள் மூலம், ஓட்டுநர் காண எஞ்சின் ஆட்சி அரங்குக்கு அனுப்பப் படுகின்றன. வண்டியின் வேகம் உச்ச அளவைத் [மணிக்கு 100 மைல்] தாண்டும் போது, மைய ஆட்சி அரங்கின் சுயக் கட்டுப்பாடு சாதனம் எஞ்சின் சக்கிரங்களுக்குத் தடை உராய்வு அளித்து [Automatic Brake Application] வேகத்தைக் குறைக்கிறது!
ஈரோக் குகையின் இருபுறமும் தீவிபத்தைக் கட்டுப்படுத்த ‘தீ கண்காணிப்பு மையம் ‘ [Fire Management Centre] அமைக்கப் பட்டுள்ளது. அவற்றின் முக்கிய பணிகள்:
சுழலும் கூரிய தோண்டி
1. குகையில் அனைத்துத் தீப்புகை அறிவிப்புச் சாதனங்களையும், தீயணைப்பு பாதுகாப்புக் கருவிகளையும் [Monitor Fire Detection & Suppression Equipment] கண்காணித்து வருதல்.
2. எதிர்பாராது தீவிபத்து நேர்ந்தால், மைய ஆட்சி அரங்கிற்கு எச்சரிப்பது.
3. ஒவ்வொரு கண்காணிப்பு மையத்திலும், தீயணைப்புச் சாதனங்கள் சேமித்து வைக்கப்பட்டு, போதிய தீயணைப்புப் படையினர் இராப் பகலாகப் 24 மணிநேரப் பணியில் தயாராக இருப்பது.
4. தீயணைப்பு மையங்கள் யாவும் வெளிப்புறம் நிறுவகமான எல்லா அபாய நிகழ்ச்சி மையங்களுடன் சுயமான எச்சரிக்கைத் தொடர்பைக் கொண்டிருப்பது.
செப்பணிடும் சிறிய நடுக்குகை
 Fire Escape
ஈரோக் கணவாயில் ஏற்பட்ட முதல் தீவிபத்து!
1996 நவம்பர் 18 ஆம் தேதி இரவு 8:45 மணி பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குப் பாரம் ஏற்றிச் சென்ற 29 பெட்டி மீட்சி இரயிலில் [29-Car Vehicle Shuttle (Carrier Wagon)] முதல் ஈரோடன்னல் தீ விபத்து ஏற்பட்டது! பிரான்ஸ் முனைக் கலே [Calais] நிலையத்தைக் கடந்து, குகைக்குள் நுழையும் போது பார வண்டியின் கடைசிப் பெட்டியில் தீ கிளம்பி யிருக்க வேண்டும் என்று தீயணைப்புப் படையினர் கருதுகிறார்கள். தீ எழுச்சி உடனே ஈரோகுகை ஆட்சி அரங்குக்கு அறிவிக்கப் பட்டது! தீயணைப்பு விதிகளின்படி, பார வண்டியின் பயணம் தொடர அனுமதிக்கப் பட்டுப் பிரிட்டன் நிலையத்தில் தீ அணைக்கப் பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது! அம்முடிவு எஞ்சின் ஓட்டுநருக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் தீ பெருகி விட்டதாகத் தெரிகிறது!
குகையின் முனையில் தயாராக இருக்கும் பிரென்ச் பகுதியின் ‘முன்னோடிக் காப்புக் குழு ‘ [First Line of Response Team (FLOR)], மையத்தில் உள்ள பணிக்குகையில் தீக்கட்டுப்பாடு சாதனங்களைப் பயன்படுத்த எதிர்பார்த்திருந்தது. மையத்தில் இருந்த பிரிட்டன் பகுதி தீயணைப்புப் படையும் தயாராக இருந்தது. அச்சமயம் எஞ்சின் அறைக் கருவி அரங்கில், ‘வண்டியில் முரண்பாடு நிகழ்ச்சி ‘ இருப்பதாகக் காட்டி, ‘இரயில் தண்டவாளத்திலிருந்து புரண்டு விடும் ‘ என்று ஒரு சிவப்பு சமிக்கை எச்சரிப்பு விடுத்தது! விதிப்படி உடனே வண்டி குகை நடுவே ஓட்டுநரால் நிறுத்தப் பட்டது! அப்போது வண்டி அடைந்த தூரம் கலே யிலிருந்து 12 மைல்!
வண்டியின் மேற்பார்வை அதிபதி [Chef De Train] என்ன நிகழ்கிறது என்று கதவைத் திறக்க, புகை மண்டலம் உண்டி வாகனத்தில் நுழைந்தது! உடனே அதன் உள்ளிருந்த 33 நபர் பாதுகாப்பான மையக் குகைக்குள் அழைத்துச் செல்லப் பட்டனர். அப்போது எதிர்த்திசையில் வந்த இரயில் நிறுத்தப் பட்டு 33 நபர் அந்த வண்டியில் மீண்டும் கலே நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். தீப் பற்றிய பெட்டியும், மற்ற ஏழு பெட்டிகளும் தீயில் எரிந்து முழுவதும் மாய்ந்தன! கொளுந்து விட்டுப் பற்றிய நெருப்பு, குகையின் 1330 அடி [400 மீடர்] நீளக் காங்கிரீட் கவசத்தை 16 அங்குல ஆழத்துக்குச் சிதைத்தது!
தீக் கட்டுப்பாடு காலை 5:00 மணிக்கு செய்ய முடிந்து, 11:15 மணிக்குத் தீ முழுவதும் அணைக்கப் பட்டது! பதினைந்து நாட்கள் தீப் பற்றிய குகையில் பயணம் நிறுத்தமாகி, மறுபுறம் உள்ள குகையில் மட்டும் வாகனப் போக்குகள் தொடர்ந்தன. 1996 டிசம்பர் 10 முதல் மறுபடியும் இரயில் பயணங்கள் இரண்டு திசையிலும் சீராகின. சுற்றுப் பயண இரயில் போக்குகள் 1997 ஜனவரி 6 முதல் மறுபடியும் அனுமதிக்கப் பட்டன!
இங்கிலீஷ் கால்வாய்ப் பயணத்தின் எதிர்கால நிலைப்பாடு
1998 ஆண்டில் மட்டும் 3.45 மில்லியன் சுற்றுப் பயண வாகனங்கள் ஈரோ கணவாய் வழியாகச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. ஈரோடன்னலில் பயண மக்கள் அடர்த்தியும், வாகனப் போக்குகள் எண்ணிக்கையும் மிகையாகி வருவதால், புதிய ஏற்பாடுகளை பிரான்சும், பிரிட்டனும் சிந்தித்துக் கொண்டு வருகின்றன! ஏகக் குறுகிய இருப்புப் பாதையாய்த் தனித்தியங்கி வரும் ஈரோடன்னலுக்குப் போட்டியாக அடுத்தொரு கடற்குகை வெகு சீக்கிரத்தில் இங்கிலீஷ் கால்வாயில் வரப் போவதாக அறியப்படுகிறது! அத்திட்டத்தில் இரண்டு குகைகள் அமைக்கப்பட விருக்கின்றன. முதல் குகை: ஒரு திசையில் போகும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதைகளை ஒரு மட்டத்தில் கொண்டு, அதற்கு மேல் மட்டத்தில் எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதையும் அமைப்பதாக உள்ளது. இரண்டாம் குகை: முதல் குகைபோல் ஒரு திசையில் செல்லும் இரட்டை இருப்புப் பாதை ஒரு மட்டத்திலும், அடுத்த மட்டத்தில் எதிர்த்திசையில் செல்லும் இரயிலுக்கு இருப்புப் பாதை இரண்டும் கட்டப் போவதாகத் தெரிகிறது.
தகவல்:
1. The Seven Wonders of the World By Life [Dec 15, 2003]
2. National Geographic Sosiety -Underwater Tunnels, Marvels of Engineering [1992]
3. National Geographic France Celebrates Its Bicentennial [July 1989]
4. The E-Learing Zone -Facts & Figures of the Channel Tunnel [www.cornwallis.kent.uk/intranet/elearn/science/eurotunn] [2004]
5. Channel Tunnel (Chunnel) Vital Statics
6. English Channel Tunnel Fire National Fire Protection Association, Quincy, MA, USA. [Nov 16, 1996]
7. Le Shuttle Arriving in France -Jeremy Lennard & Agencies [Apr 7, 2004]
8. The Tunnel Boring Details, About Eurotunnel [Feb 23, 2004]
9. The History of Eurotunnel [www.eurotunnel.co.uk/]
*************

Wednesday, November 18, 2015

POSTS TAGGED ‘சென்னை குடிசை மக்கள்’

10511249_623522564422551_1081090026135520044_n
மெட்ராஸ்காரன் பார்வையில் மெட்ராஸ்
Posted: November 1, 2014 in Uncategorized
Tags: A.BHAGATH SINGH, சென்னை குடிசை மக்கள், சென்னையில் தலித்துகள், மெட்ராஸ்,Bhagath, chennai, chennai history, cinema, dalit cinema, dalits in chennai, madras, madras history, north chennai, vada chennai0
என்னது சென்னையபத்திப் படமே வரலையா? என்று யாராவது கேட்டால், ”என்னது  சிவாஜி கணேசன் செத்துடாரா?” என்று நீங்கள் திடீர் அதிர்ச்சி அடைவதாக நாங்க நினைக்க மாட்டோம். ஏன்னா எங்க மத்தியிலேயே உருவாக்கப்படுற படங்க எங்களபத்தி ஏன்டா பேசமாட்டுதுனு நாங்களே இப்பதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்கோம். சென்னையைக் களமாகக் கொண்டு பல படங்கள் வந்துள்ளது, ஆனால் அதில் எதிலும் சென்னை வாழ்மக்களின் வாழ்வியலோ, தனித்த அடையாளங்களோ என்றும் இடம் பெற்றதில்லை. முதலில் சென்னைக்கென்று தனித்த வாழ்வியல் அடையாளமென்ற ஒன்று இருக்கிறது என்பதையே நிறுவவேண்டியுள்ளது. அது வெறும் வந்தேறிகளின் நகரமல்ல, அப்பார்ட்மென்டிலும், காரிலும் பவனிவரும் மேல்தட்டு, நடுதரவர்க்கத்தவரின் நகரமல்ல, ஏழை எளிய உழைப்பாளி மக்களின் நகரம். இங்குப் பூர்வீகமாக வாழும் மக்களும் இருக்கிறார்கள். இவர்களே இந்நகரின் அடிப்படை, அவர்களுக்கென்று தனித்த பண்பாடும், வாழ்வியலும் இருக்கிறது. அவற்றை குறித்த இலக்கியங்களையும், சினிமாக்களையும் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
 இதுவரையிலான தமிழ் சினிமாவில் கேடிகளாகவும், ரவுடிகளாகவும் மட்டுமே  அடையாளப்படுத்தப்பட்ட எங்களின் உண்மை முகத்தை முதல் முறையாகத் திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி. நூற்றாண்டை தொடும் தமிழ் சினிமாவிற்கு, அதன் தலைமையகத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை இயல்புடன் பிரதிபலிக்க இத்தனை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது வருத்ததிற்கும் விமர்சனத்திற்கும் உரியதுதான் என்றாலும் இப்போதாவது நடந்ததே? என்று பெரும் மூச்சுதான் விடத்தோன்றுகிறது.
இப்படி அடையாளங்கள் புறகணிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியை முன்னிறுத்திதான் மெட்ராஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பெரும் எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது. படத்தின் உள்ளடக்கம், களம் என அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த பல செய்திகளின் மூலம் சென்னையின் புதுப் பரிணாமத்தை இது வெளிபடுத்தும் என்று மிகவும் கவரப்பட்டேன். அந்த வகையில் எமக்கிருந்த எதிர்பார்ப்பை நிவர்த்திச் செய்துவிட்டார் படத்தின் இயக்குனர் ரஞ்சித்.


இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளின் உள்ளூர் தலைவாகள் சுவர் பிடிப்பதில் உள்ள அதிகார போட்டிதான் படத்தின் மைக்கருவே, இதற்குக் களபலியாக்கப்படுபவர்கள் தலித்துகள். இப்போராட்டத்திற்கு மத்தியில் இயங்கும் முரண்பட்ட குணாம்சங்களைக் கொண்ட இரண்டு இளைஞர் வாழ்க்கைதான் படமே. அரசியல் அதிகாரம்தான் தன் மக்களின் விடுலைக்கு வழிவகுக்கும் என்று களத்தில் நிற்பவன் அன்பு, கல்வியறிவு தான் சமூக முன்னேற்றத்தை கொண்டுவரும் என்று நம்புபவன் காளி, படித்து மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். இவர்கள் இருவரும் இடையிலான நட்பு, இவர்களது காதல், கோபம், சர்ச்சை, சிக்கல் என பல சூழ்நிலைகளோடு மிக இயல்பாக இவர்களது கதாபாத்திரம் சித்தரிகப்பட்டள்ளது. சுவரை மீட்டிக்கும் முயற்சியில் அன்பு இறங்க பலியாகிறான். அன்புவின் மரணத்திற்குப் பின்புள்ள சதியை அப்பகுதி மக்களுக்கு அம்பலபடுத்தி எதிரிகளை அழிக்கிறான் காளி. இதுதான் படத்தின் சுருக்கமான கதை. சமூக அரசியலில் சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சுவரும், அதில் உள்ள ஓவியமும் ஒரு வகையில் சாதிய அதிகாரத்தின் அடையாளம் தான் என்று வெளிப்படையாகவே படம் பேசுவதோடு,  பெருங்கட்சிகளின் அதிகார அரசியலில் பலியிடப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மிக இயல்பாக முன்வைத்துள்ளது மெட்ராஸ்.
செயற்கையற்ற சென்னை தமிழ்
படத்தின் வெற்றியே, அதன் அப்பட்ட அழகான சென்னை மொழியிலான வசனங்கள் தான். மிக இயல்பாகச் சென்னை தமிழைப் பதிவுசெய்தது. சும்மா மண் வாசனை மணக்குதுபா.. இதுவரையிலான தமிழ் சினிமாவின் தேங்காய் சீனிவாசன் பாணி சென்னை தமிழ கேட்டாலே நாராசமா இருக்கு, இத கேட்க பல தடவை இரத்தம் கொதிச்சுப் போய்யிருக்கு. ஏன்னா  தமிழ்சினிமாவின் சென்னை தமிழைச் சென்னையின் நகரத்தின் எந்த மூலையிலும் கேட்டமுடியாது. கேட்டா இது ரிக்சாகாரங்க பேசுர தமிழாம், சென்னையில எந்த ரிக்சாகாரரும் இப்படி பேசமாட்டார், சினமாவில் தவிர. எனது அனுபவத்தில் மட்டுமல்ல, என் தந்தை அனுபவத்திலேயே கூட அப்படியொரு மொழிய அவரு எங்கயும் கேட்டதில்லையாம். ஏன்? எங்க ஆயா கூட அவங்க அம்மா மேல சத்தியமா கேட்டதில்லனு சொல்லிடிச்சு. எப்படியோ கமலஹாசன், தனுஷ், ஜீவா, விஜய் சேதுபதி போன்றவர்கள் சென்னை தமிழைக் கொஞ்சம் நல்லா பேசியது ஆறுதலை தந்ததுவந்தது. ஆனால் மெட்ராஸ் படத்திற்குப் பின் இவர்களதும் செயற்கையாகத் தோன்றுகிறது என்பதே உண்மை. அந்த அளவிற்கு மெட்ராஸ் தமிழ் உண்மையா இருக்கு.
இப்படம் வெகுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதோடு. சமூக அரசியல் தளத்திலும் நல்ல விவாதத்தைக் கிளப்பியுள்ளது. படத்தை விமர்சனபார்வையில் ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்து விவாதங்கள் நிகழந்துக்கொண்டே வருகிறது. தலித் கருத்தியல் கொண்டவர்கள், முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், வெகுஜன சினிமா விரும்பிகள் எனப் பலரும் படத்தை ஆதரிகின்றனர். எதிர்ப்பவர்களை எவ்வாறு தனித்து அடையாளபடுத்துவது என்றுதான் தெரியவில்லை, ஏனென்றால் மேலே குறிப்பிட்ட அதே கருத்தியல் கொண்டவர்களை உள்ளடக்கியதுதான் எதிர்கருத்து பரப்பிவருபவர்களும். எதிர்ப்பவர்களாக இங்கே சூட்டுவது விமர்சன பூர்வமாக நிறை குறைகளைச் சுட்டிகாட்டி படத்தைத் திறனாய்வு செய்பவர்களை அல்ல, மாறாகப் படம் எதை அடிப்படை கருவாக கொண்டுள்ளதோ அதையே இல்லை என்று மறுப்பவர்களைத்தான். அவர்களுக்குத்தான் நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது.
இவர்களுக்கு ஏன் மெட்ராஸ் கசக்கிறது என்பது ஆய்விற்குரியதே. படத்தை முழுமையாக நிராகரிப்பவர்களைக் கூட ஏதொ ஒருவகையில் ஏற்கலாம், ஆனால் படம் நல்ல படம்தான் என்று சொல்லவிட்டு, ”கொஞ்சம் உப்பு கம்மிய இருக்கு” “இன்னும் ரெண்டு இன்ஞ்ச் ஒசரமா இருந்திருந்தா, உலக மார்க்கெட்டல போயிருக்கும்” “கொஞ்சம லைட் ஒயிட்டா இருக்கு, இன்னும் கொஞ்சம் டார்க் கறுப்பா இருந்திருந்தா, நச்சுன்னு இருந்திருக்கும்” “நீலக்கலரே காணும் ஒரே ப்ளுவா இருக்கு” இப்படியாகப் பல விமர்சனங்கள். படத்தில் உள்ளதை விமர்சன ரீதியாகப் பார்ப்பதைவிட்டுட்டு, படத்தில் என்னவெல்லாம் இல்லை, சேர்த்திருக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் பரிந்துரை பட்டியல் இருக்கே.. எப்பாப்பா!! தாங்க முடியல. இது ஒரு பக்கம் இருக்கட்டும்..
இன்னொரு பக்கம் வந்தா, ”மெட்ராஸ் பட்டைய கிளப்பிடுச்சு. நல்ல முயற்சி ஆனா இதுவே மொத முயற்சினு கிடையாது. இதுக்கு முன்னாடி நிறையபேரு போட்ட ரோட்டுலதான் ரஞ்சித்து மெட்ராஸ்சுக்குப் பஸ் விட்டிருக்காரு அப்படினு” ஒரு வரலாற்று கருத்து. ரோடு போட்டது யாரெல்லாம்னா ”பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அமீர், சசிகுமார், சமுத்திரகனி, திருமுருகன், ‘பூ’ சசி, சுசீந்திரன்” என்று பெரிய பட்டியலே வைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ரஞ்சித்திற்கு முன்பு பயணித்தவர்களே, உண்மைதான். இவர்களும் சுயம்புவாகக் கிளம்பியவர்கள் இல்லை என்பதையும் ஏற்க வேண்டும். இதை ரஞ்சித் உட்படப் பட்டியலில் உள்ள அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன். ஆனா நம்ப இளைஞர்களின் விடிவெள்ளி இளைய தளபதியின் “கில்லி, திருமலை” போன்ற சென்னை படங்களின் தொடர்ச்சிதான் ”மெட்ராஸ்” படமுன்னு ஒப்பிட்டது இருக்கு பாருங்க… அய்யய்யையோ.. பிரமாதம். இதுக்கு நீங்க ரஞ்சித்த கூப்பிட்டு ”தம்பி நீ அடுத்து இளைய தளபதிய வைச்சு சொறாவோட இரண்டாம் பாகத்தை “திமிங்களம்”ன்னு சென்னை மீனவர்கள பத்தி ஒரு மாயஎதார்த்தவாதம் கோட்பாட்டை சினிமா எடுங்கன்னு சொல்லியிருக்கலாம்!! மக்களும் விடிவெள்ளியின் படத்த பாத்து தெளிவடைஞ்சு இருப்பாங்க!!
”மெட்ராஸ் தான் சென்னை மக்களைப் பற்றி முதன்முதலாகப் பேசிய படம் என்று கிடையாது, அதற்கு முன்பாகவே பொல்லாதவன், சென்னை 600028, புதுப்பேட்டை, இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா அகிய படங்கள் ஓரளவு செய்ததின் தொடர்ச்சியே எனது மெட்ராஸ்” என்று ரஞ்சித் விஜய் டி.வி பேட்டியில் வெளிபடையாக சொல்லியிருக்கிறார்.  இது சரியான மதிப்பீடுதான். பாரதிராஜாவின் “என்னுயிர் தோழன்(1990)” செய்யாதையா மெட்ராஸ் செய்துவிட்டது என்கிறார்கள், பாரதிராஜாவின் படம் சென்னை சேரிவாழ் மக்கள் மீதான அரசியல்வாதிகளின் சுரண்டலை பேசிய படைப்புதான். ஆனால் அது அவ்வளவு இயல்புதன்மையோடு சென்னையைப் பிரதியெடுக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்திற்கு அது ஒரு பங்களிப்பாக கொள்ளலாமே தவிர எதார்த்த படைப்பாகவெல்லாம் சொல்ல முடியாது.
எதார்த்த சினிமா இல்லையா?
      மெட்ராஸ் எதார்த்த படமெல்லாம் கிடையாது, வழக்கமான பலிக்குபலி வாக்கும் மசாலா படம்தான் என்று மாற்றுச் சினிமா குறித்து பல விவாதங்களை நடத்திவரும் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். ஒரு அரசியல் படம் பாமரர், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும் வகையிலும், முக்கியமாகப் பிடிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டால் அது எதார்த்தம் என்ற வகைபாட்டில் இருந்து விலகிவிடுமா என்ன? வழக்கமான தமிழ் படங்களில் இருந்து இது எத்தனை இடங்களில் விலகி, அதே வேலையில் மக்களை ரசிக்க வைத்துள்ளது என்பது மிக முக்கியமானது.
படத்தில் நாயகனுக்கும்-நாயகிக்கும் டூயட் இல்லை, நாயகனின் வல்லமைகளைச் சொல்லும் அறிமுகப் பாடல்களும் இல்லை. படத்தின் அறிமுக பாடலில் கூட அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் நாயகன் அறிமுகமே வருகிறது. இது கூடப் பழைய டிரெண்ட்தான், இப்போதைய டிரெண்ட் என்னானா? நாயகன் காதல் தோல்வியில் குடித்துவிட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தையே பங்கப்படுத்தி பாட்டு பாட வேண்டும். ஆனால் மெட்ராஸ் படத்திலும் காதல் தோல்வி பாடல் வருகிறது, ஆனால் நம்பிக்கை ஊட்டும் வகையில் வேறுபரிணாமத்தில் ஒலிக்கிறது. குத்துப்பாட்டு என்பது கூடத் தமிழ் சினிமாவின் ஒருவகை வணிக உட்கூறாக மாறிவிட்து, மெட்ராஸில் கானா பாலா, இரண்டு பாடல்களைப் பாடியும் வழக்கமான குத்துபாட்டு அதில் இல்லை என்பதை மாற்று சினிமா விரும்பிகள் என்னவாக புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் சென்னையின் பிரத்யேக அடையாளமாக மரணக் கானாவை படத்திற்குள் காட்சிபடுத்தியது மிகவும் முக்கியமான எதார்த்த பதிவு.
10167914_836847686339372_981653989116167863_n
மெட்ராஸை வெகுமக்களை ரசிக்க வைத்ததில் அதில் பங்கேற்ற நடிகர்களுக்கும், தொழிற்நுட்ப கலைஞர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. காளி-கலையரசி ஜோடியைவிட அன்பு-மேரியே ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்கள், இவர்கள் இருவரது நடிப்பும் மிக எதார்த்தம். ஜானியாக அரிகிருஷணன் பட்டையைக் கிளப்பியுள்ளார், 1980களின் ஆடை ஒப்பனையும், அவரது உடல்மொழியும், நடிப்பும் மக்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்பதற்கு முகநூலில் அவருக்குக் கிடைத்துள்ள பரவலான பாராட்டுகளும் வரவேற்புமே சாட்சி. கவிஞர் ஜெயபாலனின் ஓவியமே படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே உறுபெற்றுவிட்டது. மேலும் கோபி, வினோத் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் மெட்ராஸின் தனித்தன்மைதான். இப்படத்தில் வரும் பலரும் வடசென்னை வாழ் கலைஞர்கள் என்பதும் மிகமுக்கியமானது. இசை, பாடல், கேமிர என மூன்றும் படத்திற்கு முழுமையாகத் துணை நின்றுள்ளது. குறிப்பாகப் பாடல் வரிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் தன்மையில் உள்ளதோடு, அரசியலோடு உள்ளது முக்கியமானது.

இது தலித் சினிமாவா?
அவர்களின் அடுத்தகேள்வி, இதில் எங்கே தலித் வாழ்வியல் இருக்கிறது என்று? தலித் அடையாளம் என்ற உடன் ஊரிலே மிக மோசமான பண்ணையார், ஊர் கோவில் பிரச்சனை, பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் இருந்து ஒரு படித்த இளைஞன், தலித் மக்களுக்குப் படிப்பு வேண்டும், குடிக்கக் கூடாது என்று அறிவுரைப்பது, பண்ணையார் மகளோடு காதல், ஊர் எரிப்பு, ”எஜமா நாங்க தெரியாம பண்ணிடோம்எங்க வயத்துல அடிச்சிடாதீங்க”………………… இப்படியாக எதவாது வசனங்களுடன் படம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது போலா. படத்தின் களம் சென்னை தலைவா, இங்குச் சாதியம் நுணுக்காமாதான் செயல்படுதாம், புத்திஜீவிங்க ரொம்பபேரு சொல்லியிருக்காங்க. அத படத்திலயும் நுணுக்கமாதான் தலைவா சொல்லமுடியும். நமது சினிமா உருவாக்கிய உளவியல் பிரச்சனை என்னான்னா. சமூக பிரச்சனைய பேசும் சினமானாலே பக்கம் பக்கமா வசனம் பேசி,கொழகொழகொழன்னு மொக்கபோடுரது. உணர்ச்சிகரமா வசனம் பேசி மதம், சாதி பிரச்சனைய பேசியே தீக்குறது, கேஷ்மீர் தீவிர வாதியையே பேசி திருத்துர சினிமா பாத்து நம்ப மூல மங்கி போச்சுப் பாஸ், அதான் காட்சிமொழியில் அரசியல முன்வைச்சா கூடக் கண்ணையும் காதையும் பொத்திகிட்டு. என்னப்பா ஒன்னும் புரியலனு கேள்வி கேட்க தோணுது. சரி உங்க கேள்விக்கு ஒரு எதிர் கேள்வி, இதுவரையிலான தமிழ் சினிமால (அவா சினிமா, தேவர் சினிமா, கவுண்டர் சினமா……) ஆதிக்கச் சாதி பெருமைய வாய்கிழிய பேசினாங்களே, அவங்களோட உண்மையான அடையாளத்த தைரியமா சொல்லமுடிஞ்சுதா? குற்றப்பரம்பரை பிரச்சனையையும், பெருங்காமநல்லூர் போராட்டத்தையும் வெளிபடுத்தி இருக்காங்களா.  சினிமாவின் ஏ, பி, சி னு எல்லாச் சென்டர்லயும் ஆதிக்கம் செலுத்துர அவங்களாலேயே வெட்டிபெருமையைத் தான் பேசு முடிஞ்சதே தவிர, உண்மையைப் படமெடுக்க முடியலயே.. நாங்க பேசுரது ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம் பாஸ் அவ்வளவு லேசுல சொல்வதற்கான சமத்துவச் சூழல் இங்க இல்லை. இத ஒத்துக்கறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுக்குதான் பிரச்சனை. இதுக்காக அசிங்கப்பட வேண்டியது நீங்கதான், நாங்க இல்லை.  ”செல்லுலாயிட்” என்ற மலையாளப்படத்தில் புலையர், பறையர். நாடார், நாயர், நம்பூதரி எனச் சாதிகளின் பெயர்கள் மிக இயல்பாக வசனத்தில் இடம்பெற்றதோடு, அன்றைய கேரளத்தின் சாதியவெறியை விமர்சன பூர்வகமாக முன்வைத்து வெற்றியும் பெற்றது. இது தமிழ் சினிமாவில் என்று சாத்தியமாகும். அசமத்துவமற்ற சமூகச் சூழலில் தமிழ் சினிமாவில் மட்டும் தனியா சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது. சமூக அசமத்துவத்திற்கு எதிர எப்படி அடித்தல எதிர்ப்புக் குரல்கள் வலுக்குதோ, அதே போலச் சினிமாவிலும் எதிர்ப்பு குரல் மெல்ல வலுக்கும். அக்குரலில் ஒன்றுதான் மெட்ராஸ்.
கேள்விக்குக் கேள்வி பதிலாகாதுன்னு நீங்க சொல்லறது எனக்குக் கேட்குது.  சரி.. தலித் அரசியலின் நிறம் நீலம், அது படத்தில் எவ்வளவு நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா? காளியும், அன்பும் விளையாடும் கால்பந்து அணியின் ஆடை நீல நிறம், அவர்களின் நடனக்குழுவின் பெயர் புலு பாய்ஸ், அன்பு வெட்டி கொல்லப்படும் போது அவனது உடை நீலம், இப்படி நிறையச் சொல்லமுடியும். சுவரோவியம் அழிக்கப்படும்போது முதலில் ஊற்றப்படும் நிறமும் நீலம்தான், அதைதொடர்ந்தே பிற நிறங்கள் ஊற்றப்படுகிறது. சமூக மாற்றத்திற்கான படை அணிவகுப்பில் தலித்துகளே முன்னனிப்படை என்பதையே இயக்குனர் உணர்த்துவதாகப் புரிந்துக்கொள்கிறேன். “இங்க இருக்கிறவனுங்கெல்லாம் தமிழ் தமிழ் இன்றானுங்க சாதி மதமுன்னா மட்டும் கத்தியத்தூக்கினு வரானுங்க” என்ற வசனமெல்லாம் யாருடைய அரசியல் பிரச்சனை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகள் தங்களின் அதிகார விளையாட்டிற்குத் தலித்துகளை எப்படிக் களபலி கொடுக்கிறது என்பதையும், இவ்வமைப்பிற்குள் தலித் ஒருவன் தலைவனாக (மாரி) வந்தாலும் அவன் தன் மக்களுக்குத் துரோகத்தை செய்யும் கருவியாகத்தான் இருப்பான் என்பதை பட்டவர்தனமாக பேசுகிறது.
வடசென்னையும் தலித் அடையாளமும் வெவ்வேறயா
தமிழ் இந்துவில் வெளியான குறுக்கு விசாரணையொன்றில் ”வடசென்னை வாசிகளெல்லாம் தலித்துகள் அல்ல!” என்று மாபெரும் கண்டுபுடிப்பு வெளியானது. ஏன்பா!  மதுரக்காரங்க எல்லாம் தேவரா காட்டினப்ப நீங்களெல்லாம் எங்க போயி இருந்தீங்க, பரவாயில்லை மதுரக்காரங்ய்க மேல இல்லாத பாசம் எங்கமீது வந்திருக்குன்னு நினச்சிகிறோம். எங்க அடையாளத்துமேல கரிசன படுரவரு வடசென்னைய பற்றிப் புரிதலோடு எழுதியிரக்கர குறுக்கு விசாரணைய படிக்கனுமே. அடேயப்பா! வாய்ப்பேயில்ல. அப்படியொரு புரிதல், கூகில் மேப்புல கூட வடச்சென்னைய இவரு பாத்திருக்க மாட்டாரு போல. இவர் மட்டுமல்ல சென்னையின் பூர்வக்குடிகள் மற்றும் சேரிவாழ் மக்கள் குறித்து மனவருத்தம் தெரிவிக்கும் பலர் வடசென்னை பக்கம் தப்பிதவறி கூட தலைவைச்சது கிடையாது. அதிக வாடகை கொடுத்தாலும் பரவாயில்லை, தென்சென்னையிலேயே இருக்கோம் என்கிறார்கள். கட்டமைப்பு வசதிகள் என்பதைவிட ஸ்டேடஸ் இவர்களை தடுக்கிறது. வடசென்னையில் இவர்கள் அதிகம் வந்துபோன இடம் சென்டரல் ஸ்டேஷனும், பாரிமுனையும் தான். பஸ்லயும், ரயிலயும் குட்கார்ந்து பார்த்த அனுபவத்திலேயே இவர்கள் வடசென்னையைப் பற்றி பக்கம்பக்கமா எழுதி தள்ளுராங்க.
உண்மையில் வடசென்னை வாசிகள் எல்லாம் தலித் இல்லை, என்பது சரிதான். ஆனால் இங்குள்ள அடிப்படை மக்களில் பெரும்பகுதி தலித்துகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையின் பாரம்பரிய குடியிருப்புகளில், வீட்டு வசதிவாரிய தொகுப்பு வீடுகளில் பறையர், ஆதி ஆந்திரர், மீனவர், வன்னியர், நாயுடு மற்றும் இஸ்லாமியர்கள் என பலர் பாரம்பரியமாக வாழ்ந்துவருகின்றனர். இவற்றைத் தவிர்த்து பிராமணர், முதலியார் உள்ளிட்ட பிற ஆதிக்கச் சாதியினரும் பாரம்பரியமாக இருந்துள்ளனர். வெள்ளைக்காரன் கட்டியெழுப்பிய கறுப்பர்நகரத்தின் வளர்ச்சியில் இரத்தமும் சதையுமாக இவர்களின் பங்களிப்பு உள்ளது. கபிலனின் வரிகளில் சொல்வதனால் “ரிப்பன் பில்டிங் ஐகோர்ட் எல்லாம் செங்கல் மணல் மட்டுமல்ல எங்களோட இரத்தங்களும் சேர்ந்திருக்குடா”, என இவர்களின் பங்களிப்பிலேயே சென்னை வளர்ந்தது. இன்றைய வடசென்னை முழுக்கப் பூர்வக்குடிகளின் நகரம் இல்லை, ஆனால் சென்னையின் பூர்வக்குடிகள் கணிசமாக வடசென்னையில்தான் இருக்கிறார்கள். இப்படிப் பாரம்பரிய மக்களும், பிற மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் இணைந்தே இங்கு வாழ்கின்றனர். வளர்ந்த நகரத்தில் பின்னர் வந்து குடிபெயா்ந்தவர்களின் ஆதிக்கம் இன்று தொடர்வதால் சென்னை வந்தேறிகளின் நகரம் என்று வந்தேறிகள் கருத்தை கட்டமைத்து வடச்சென்னையைின் அடையாளத்தை மறுக்கின்றனர்.
இதில் வியாசர்பாடி பகுதியின் குடியிருப்பை மையமாக வைத்து செய்த படம்தான் மெட்ராஸ், அதில் அப்பகுதியில் உள்ள தலித் இளைஞர்களை முன்வைத்துக் கதைசொல்லியிருக்கிறார் ரஞ்சித். சென்னையின் சமூக அரசியல் தெரிந்தவர்களுக்கு இது சரிதான் என புரியும், நமக்குத் தான் அரசியல் என்பதே கெட்ட வார்த்தை ஆச்சே, அப்புறம் எப்படிப் புரியும். பேசாம சராசரிப் ரசிகராக படத்தை ரசிக்க வேண்டியதுதானே. உங்களுக்கு அரசியலே வரலயே பாஸ். வராத அரசியல வா.. வா..னா எப்படி வரும். உங்கள் புலம்பலுக்காக வேண்டி ஒன்று பண்ணலாம், ரஞ்சித் அடுத்தப் படம் பண்ணும்போது, அவர் படம் பண்ணும் வடசென்னையின் ஏரிய, தெரு, வீடு எண், அதில் உள்ளவர்களின் எண்ணிக்கை, சாதி குறியீட்டு எண் மற்றும் ஆதார் அட்டை விபரங்களுடன் ஒரு அறிமுகத்தைத் தரசொல்லலாம். நீங்க கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவீங்கதானே??
என்னைப் பொறுத்தவரை சுவர் அரசியலே வடசென்னையின் முக்கிய அடையாள வெளிபாடுதான். திருவொற்றியூர் சுங்கங்சாவடி, ராயபுரம் ரயில் மேம்பாலம், பெரியமெடு, பெரம்பூர் பி.என்.சி மில், வில்லிவாக்கம் என வடசென்னை முழுக்க ஆங்காங்கு உயர்ந்த சுவர்களில் அரசியல் விளம்பரம் செய்ய நடக்கும் போட்டி இருக்கிறதே. இது பிற மாவட்டங்களுக்குப் பொறுந்துமா எனத் தெரியவில்லை, ஆனால் இந்தச் சுவர்களை தற்காப்பதில் அடித்தளக் கட்சி தொண்டர்கள் மேற்கொள்ளும் போட்டா போட்டிகள் அபூர்வமானாது. ஒரு கட்சியின் கட்டுபாட்டில் உள்ள சுவரை பிடித்துவிட்டால் அதற்கு வரும் பஞ்சாயத்து இருக்கிறதே எப்பாப்பா, அதைச் சரியாகவே மெட்ராஸ் பதிவு செய்துள்ளது.
குறையே இல்லாதல்ல மெட்ராஸ்!
madras-review
   மெட்ராஸ் படமே முழுமையானது, அப்பழுக்கற்றது என்றெல்லாம் ஒன்றுமில்லை. சினிமா அடிப்படையிலும், அரசியல் ரீதியாகவும் சில குறைபாடுகளை இப்படம் கொண்டுள்ளது. “எவ்வளவோ அரசியல் ரீதியாகக் கதைபண்ணாலும், பல விசயங்களை நேரடியாகச் சொல்வதற்கான வெளி இங்குயில்லை என்பதே உண்மை, இது ரஞ்சித்திற்கும் பொருந்தும். முதல்பாதியில் முன்வைக்கப்பட்ட கதை போக்கு இரண்டாம் பாதியில் தடம்தவறி போனதை யாரும் மறுக்க முடியாது. கதைகளத்தோடு ஒட்டாத கதாநாயகி, எதிரிகளைத் தன்னந்தனியாக வேட்டையாடி நண்பனின் இழப்பிற்குப் பலிவாங்கும் வழக்கமான திரைநாயகன் எனச் சில சருகல்களைச் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக ஆதிக்கவாதிகளிடம் இருந்து கைபற்றப்படும் சுவரில் “அன்பு” படத்தை வரையாமல் போனது கூட ஒருவகையில் குறையாகவே எனக்கு தோன்றியது. இவ்வாறான குறைபாடுகளுடன்தான் வணிக ரீதியாக இப்படம் வெற்றிபெற்றுள்ளது. இக்குறைபாடுகள் இல்லாது இருப்பின் அரசியல் ரீதியாக இன்னும் முழுமைபெற்றிருக்கும். இருப்பினும் இதுவரையிலான அரசியல் படங்களில் இது தமிழக அரசியலின் அடிமட்டத்தை மிக நுணுக்கமாகவே விமர்சன பார்வையோடு பேசியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சினிமாவின் வெற்றிக்குக் கை, கால், வாய் அசைத்த கதாநாயகனை புரட்சி நாயகர்களாக, அரசியல் தலைவர்களாக, தத்துவ ஆசான்களாகக் கொண்டாடிய காலம் போய், படத்தின் இயக்குனரை முதன்முறையாகக் கொண்டாடுவதும், வாழ்த்துவதும் கூட அளவியல் ரீதியாகப் பெரிய முன்னேற்றம்தான். மெட்ராஸ் வெற்றியை இவ்வளவு வரவேற்பிற்கும், கொண்டாடத்திற்கும், விமர்சனத்திற்கும், எதிர்ப்பிற்கும் உள்ளாவதற்குக் காரணம், இது ஒரு தலித்தால் தலித் அரசியல் செயல்பாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட படம் என்பதால்தான். அப்படினா ரஞ்சித்தான் திரைப்பட இயக்குனராகும் முதல் தலித்தா என்றால், இல்லை. இதற்கு முன்பு சிலர் வெற்றிபெற்றுள்ளனர், அவர்கள் தங்களுக்கான அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்வதற்கு மெட்ராஸ்சின் மூலம் ரஞ்சித் பெற்ற வெற்றிக் காரணமாக இருந்துள்ளது. ஒரு படத்தை, கலைஞனை சாதிய சார்பு நிலையில் மட்டும் வைத்து கொண்டாடுவதும் ஒருவகைச் சாதிவெறிதான், இதில் தலித்-தேவர்-பிராமணா என்றெல்லாம் வேறுபாடுகிடையாது என்று சிலர் தீடீர் சமத்துவம் பேசுகிறார்கள். அவ்வளவு சமத்துவ விரும்பியாபா நீங்க? இதே கேள்வியை நீங்கள் எல்லாரிடமும் கேட்டது உண்டா?, குறைந்தபட்சம் கேட்கனுமுன்னு நினைச்சதாவது உண்டா. அப்படியென்றால் கௌதம் கார்த்திக், விக்ரம்பிரபு போன்ற ஓன்றிரண்டு படங்களே நடித்துள்ள இளம் நடிகர்களுக்கு ஒட்டப்படும் ரசிகர் மன்றப் போஸ்டர்களை கண்டும்காணாமல் போனது ஏன்? இவர்களைத் தூக்கிபிடித்துக் கொண்டாடுவதற்குப் பின்னால் சாதிவெறி இல்லையா? கார்த்திக் மற்றும் பிரபுவுக்கு எந்தச் சாதியவெறியர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடினார்களோ அவர்கள் இப்போது அவர்களது மகன்களுக்கு ஒட்டுகிறார்கள். மெய்யாலும் பாஸ்.. பாருங்க சொன்னா நம்பமாட்ரீங்க.  இவையெல்லாம் மீறி ஆதிக்கவாதிகளின் கருத்தியலை ஆதரிப்பதற்கும், ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தியல் வெற்றியை கொண்டாடுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது பாஸ்.
இறுதியாக… ஒன்னுமட்டும் சொல்கிறேன்..
 மண்ணு வாசம், கொழம்பு வாசமெல்லாம் எங்க சென்னை மண்ணுக்கும் உண்டு, கொஞ்சம் மூக்கையும் மனசையும் திறந்து மோந்து பாரு” என்று தெனாவட்டாகச் சொல்லும் கர்வத்தை மெட்ராஸ் எங்களுக்குத் தந்துள்ளது. இதுவொன்றும் தானாக நடந்த ஒன்றல்ல.  எங்களில் இருந்து ஒருவன் சமூக-அரசியல் புரிதலுடன் உருவானதன் வெளிபாடே இது என்பதோடு, இதற்குக் “கானா” பாலா, கபிலன், கோபி மற்றும் பல வடசென்னை சார்ந்த கலைஞர்களும், பிற முற்போக்காளர்களின் முழுப் பங்களிப்பும், ஆதரவுமே இதை சாத்தியமாக்கியுள்ளது. 
அட! இனி சென்னை படம்தான் தமிழ் சினிமால டிரெண்ட் பாஸ்” இப்படி ஒரு கும்பல் இந்நேரத்துக்குக் கிளம்பியிருக்கும். அந்தக் கொடுமையையெல்லாம் இனிமே நாங்களும் பொருத்துக்கனும். பரவாயில்லை.. பரவாயில்ல… ஆனா அவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ”ஏய்ய்…..ய்ய்ய.. நாங்களும் மெட்ராஸ் காரங்கதான்டா” என்ற ரேஞ்சுக்கு எங்களயும் மட்டமாக ஆக்கிவிட்டுடாதீங்க!!. பீலீஸ்!!..

மாற்றுக்களம் என்று ஓர் வலைப்பூ : மெட்ராஸ்காரன் பார்வையில் மெட்ராஸ் - அ. பகத்சிங்

POSTS TAGGED ‘சென்னை குடிசை மக்கள்’

10511249_623522564422551_1081090026135520044_n
மெட்ராஸ்காரன் பார்வையில் மெட்ராஸ்
Posted: November 1, 2014 in Uncategorized
Tags: A.BHAGATH SINGH, சென்னை குடிசை மக்கள், சென்னையில் தலித்துகள், மெட்ராஸ்,Bhagath, chennai, chennai history, cinema, dalit cinema, dalits in chennai, madras, madras history, north chennai, vada chennai0
என்னது சென்னையபத்திப் படமே வரலையா? என்று யாராவது கேட்டால், ”என்னது  சிவாஜி கணேசன் செத்துடாரா?” என்று நீங்கள் திடீர் அதிர்ச்சி அடைவதாக நாங்க நினைக்க மாட்டோம். ஏன்னா எங்க மத்தியிலேயே உருவாக்கப்படுற படங்க எங்களபத்தி ஏன்டா பேசமாட்டுதுனு நாங்களே இப்பதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்கோம். சென்னையைக் களமாகக் கொண்டு பல படங்கள் வந்துள்ளது, ஆனால் அதில் எதிலும் சென்னை வாழ்மக்களின் வாழ்வியலோ, தனித்த அடையாளங்களோ என்றும் இடம் பெற்றதில்லை. முதலில் சென்னைக்கென்று தனித்த வாழ்வியல் அடையாளமென்ற ஒன்று இருக்கிறது என்பதையே நிறுவவேண்டியுள்ளது. அது வெறும் வந்தேறிகளின் நகரமல்ல, அப்பார்ட்மென்டிலும், காரிலும் பவனிவரும் மேல்தட்டு, நடுதரவர்க்கத்தவரின் நகரமல்ல, ஏழை எளிய உழைப்பாளி மக்களின் நகரம். இங்குப் பூர்வீகமாக வாழும் மக்களும் இருக்கிறார்கள். இவர்களே இந்நகரின் அடிப்படை, அவர்களுக்கென்று தனித்த பண்பாடும், வாழ்வியலும் இருக்கிறது. அவற்றை குறித்த இலக்கியங்களையும், சினிமாக்களையும் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
 இதுவரையிலான தமிழ் சினிமாவில் கேடிகளாகவும், ரவுடிகளாகவும் மட்டுமே  அடையாளப்படுத்தப்பட்ட எங்களின் உண்மை முகத்தை முதல் முறையாகத் திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி. நூற்றாண்டை தொடும் தமிழ் சினிமாவிற்கு, அதன் தலைமையகத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை இயல்புடன் பிரதிபலிக்க இத்தனை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது வருத்ததிற்கும் விமர்சனத்திற்கும் உரியதுதான் என்றாலும் இப்போதாவது நடந்ததே? என்று பெரும் மூச்சுதான் விடத்தோன்றுகிறது.
இப்படி அடையாளங்கள் புறகணிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியை முன்னிறுத்திதான் மெட்ராஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பெரும் எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது. படத்தின் உள்ளடக்கம், களம் என அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த பல செய்திகளின் மூலம் சென்னையின் புதுப் பரிணாமத்தை இது வெளிபடுத்தும் என்று மிகவும் கவரப்பட்டேன். அந்த வகையில் எமக்கிருந்த எதிர்பார்ப்பை நிவர்த்திச் செய்துவிட்டார் படத்தின் இயக்குனர் ரஞ்சித்.


இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளின் உள்ளூர் தலைவாகள் சுவர் பிடிப்பதில் உள்ள அதிகார போட்டிதான் படத்தின் மைக்கருவே, இதற்குக் களபலியாக்கப்படுபவர்கள் தலித்துகள். இப்போராட்டத்திற்கு மத்தியில் இயங்கும் முரண்பட்ட குணாம்சங்களைக் கொண்ட இரண்டு இளைஞர் வாழ்க்கைதான் படமே. அரசியல் அதிகாரம்தான் தன் மக்களின் விடுலைக்கு வழிவகுக்கும் என்று களத்தில் நிற்பவன் அன்பு, கல்வியறிவு தான் சமூக முன்னேற்றத்தை கொண்டுவரும் என்று நம்புபவன் காளி, படித்து மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். இவர்கள் இருவரும் இடையிலான நட்பு, இவர்களது காதல், கோபம், சர்ச்சை, சிக்கல் என பல சூழ்நிலைகளோடு மிக இயல்பாக இவர்களது கதாபாத்திரம் சித்தரிகப்பட்டள்ளது. சுவரை மீட்டிக்கும் முயற்சியில் அன்பு இறங்க பலியாகிறான். அன்புவின் மரணத்திற்குப் பின்புள்ள சதியை அப்பகுதி மக்களுக்கு அம்பலபடுத்தி எதிரிகளை அழிக்கிறான் காளி. இதுதான் படத்தின் சுருக்கமான கதை. சமூக அரசியலில் சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சுவரும், அதில் உள்ள ஓவியமும் ஒரு வகையில் சாதிய அதிகாரத்தின் அடையாளம் தான் என்று வெளிப்படையாகவே படம் பேசுவதோடு,  பெருங்கட்சிகளின் அதிகார அரசியலில் பலியிடப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மிக இயல்பாக முன்வைத்துள்ளது மெட்ராஸ்.
செயற்கையற்ற சென்னை தமிழ்
படத்தின் வெற்றியே, அதன் அப்பட்ட அழகான சென்னை மொழியிலான வசனங்கள் தான். மிக இயல்பாகச் சென்னை தமிழைப் பதிவுசெய்தது. சும்மா மண் வாசனை மணக்குதுபா.. இதுவரையிலான தமிழ் சினிமாவின் தேங்காய் சீனிவாசன் பாணி சென்னை தமிழ கேட்டாலே நாராசமா இருக்கு, இத கேட்க பல தடவை இரத்தம் கொதிச்சுப் போய்யிருக்கு. ஏன்னா  தமிழ்சினிமாவின் சென்னை தமிழைச் சென்னையின் நகரத்தின் எந்த மூலையிலும் கேட்டமுடியாது. கேட்டா இது ரிக்சாகாரங்க பேசுர தமிழாம், சென்னையில எந்த ரிக்சாகாரரும் இப்படி பேசமாட்டார், சினமாவில் தவிர. எனது அனுபவத்தில் மட்டுமல்ல, என் தந்தை அனுபவத்திலேயே கூட அப்படியொரு மொழிய அவரு எங்கயும் கேட்டதில்லையாம். ஏன்? எங்க ஆயா கூட அவங்க அம்மா மேல சத்தியமா கேட்டதில்லனு சொல்லிடிச்சு. எப்படியோ கமலஹாசன், தனுஷ், ஜீவா, விஜய் சேதுபதி போன்றவர்கள் சென்னை தமிழைக் கொஞ்சம் நல்லா பேசியது ஆறுதலை தந்ததுவந்தது. ஆனால் மெட்ராஸ் படத்திற்குப் பின் இவர்களதும் செயற்கையாகத் தோன்றுகிறது என்பதே உண்மை. அந்த அளவிற்கு மெட்ராஸ் தமிழ் உண்மையா இருக்கு.
இப்படம் வெகுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதோடு. சமூக அரசியல் தளத்திலும் நல்ல விவாதத்தைக் கிளப்பியுள்ளது. படத்தை விமர்சனபார்வையில் ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்து விவாதங்கள் நிகழந்துக்கொண்டே வருகிறது. தலித் கருத்தியல் கொண்டவர்கள், முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், வெகுஜன சினிமா விரும்பிகள் எனப் பலரும் படத்தை ஆதரிகின்றனர். எதிர்ப்பவர்களை எவ்வாறு தனித்து அடையாளபடுத்துவது என்றுதான் தெரியவில்லை, ஏனென்றால் மேலே குறிப்பிட்ட அதே கருத்தியல் கொண்டவர்களை உள்ளடக்கியதுதான் எதிர்கருத்து பரப்பிவருபவர்களும். எதிர்ப்பவர்களாக இங்கே சூட்டுவது விமர்சன பூர்வமாக நிறை குறைகளைச் சுட்டிகாட்டி படத்தைத் திறனாய்வு செய்பவர்களை அல்ல, மாறாகப் படம் எதை அடிப்படை கருவாக கொண்டுள்ளதோ அதையே இல்லை என்று மறுப்பவர்களைத்தான். அவர்களுக்குத்தான் நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது.
இவர்களுக்கு ஏன் மெட்ராஸ் கசக்கிறது என்பது ஆய்விற்குரியதே. படத்தை முழுமையாக நிராகரிப்பவர்களைக் கூட ஏதொ ஒருவகையில் ஏற்கலாம், ஆனால் படம் நல்ல படம்தான் என்று சொல்லவிட்டு, ”கொஞ்சம் உப்பு கம்மிய இருக்கு” “இன்னும் ரெண்டு இன்ஞ்ச் ஒசரமா இருந்திருந்தா, உலக மார்க்கெட்டல போயிருக்கும்” “கொஞ்சம லைட் ஒயிட்டா இருக்கு, இன்னும் கொஞ்சம் டார்க் கறுப்பா இருந்திருந்தா, நச்சுன்னு இருந்திருக்கும்” “நீலக்கலரே காணும் ஒரே ப்ளுவா இருக்கு” இப்படியாகப் பல விமர்சனங்கள். படத்தில் உள்ளதை விமர்சன ரீதியாகப் பார்ப்பதைவிட்டுட்டு, படத்தில் என்னவெல்லாம் இல்லை, சேர்த்திருக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் பரிந்துரை பட்டியல் இருக்கே.. எப்பாப்பா!! தாங்க முடியல. இது ஒரு பக்கம் இருக்கட்டும்..
இன்னொரு பக்கம் வந்தா, ”மெட்ராஸ் பட்டைய கிளப்பிடுச்சு. நல்ல முயற்சி ஆனா இதுவே மொத முயற்சினு கிடையாது. இதுக்கு முன்னாடி நிறையபேரு போட்ட ரோட்டுலதான் ரஞ்சித்து மெட்ராஸ்சுக்குப் பஸ் விட்டிருக்காரு அப்படினு” ஒரு வரலாற்று கருத்து. ரோடு போட்டது யாரெல்லாம்னா ”பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அமீர், சசிகுமார், சமுத்திரகனி, திருமுருகன், ‘பூ’ சசி, சுசீந்திரன்” என்று பெரிய பட்டியலே வைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ரஞ்சித்திற்கு முன்பு பயணித்தவர்களே, உண்மைதான். இவர்களும் சுயம்புவாகக் கிளம்பியவர்கள் இல்லை என்பதையும் ஏற்க வேண்டும். இதை ரஞ்சித் உட்படப் பட்டியலில் உள்ள அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன். ஆனா நம்ப இளைஞர்களின் விடிவெள்ளி இளைய தளபதியின் “கில்லி, திருமலை” போன்ற சென்னை படங்களின் தொடர்ச்சிதான் ”மெட்ராஸ்” படமுன்னு ஒப்பிட்டது இருக்கு பாருங்க… அய்யய்யையோ.. பிரமாதம். இதுக்கு நீங்க ரஞ்சித்த கூப்பிட்டு ”தம்பி நீ அடுத்து இளைய தளபதிய வைச்சு சொறாவோட இரண்டாம் பாகத்தை “திமிங்களம்”ன்னு சென்னை மீனவர்கள பத்தி ஒரு மாயஎதார்த்தவாதம் கோட்பாட்டை சினிமா எடுங்கன்னு சொல்லியிருக்கலாம்!! மக்களும் விடிவெள்ளியின் படத்த பாத்து தெளிவடைஞ்சு இருப்பாங்க!!
”மெட்ராஸ் தான் சென்னை மக்களைப் பற்றி முதன்முதலாகப் பேசிய படம் என்று கிடையாது, அதற்கு முன்பாகவே பொல்லாதவன், சென்னை 600028, புதுப்பேட்டை, இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா அகிய படங்கள் ஓரளவு செய்ததின் தொடர்ச்சியே எனது மெட்ராஸ்” என்று ரஞ்சித் விஜய் டி.வி பேட்டியில் வெளிபடையாக சொல்லியிருக்கிறார்.  இது சரியான மதிப்பீடுதான். பாரதிராஜாவின் “என்னுயிர் தோழன்(1990)” செய்யாதையா மெட்ராஸ் செய்துவிட்டது என்கிறார்கள், பாரதிராஜாவின் படம் சென்னை சேரிவாழ் மக்கள் மீதான அரசியல்வாதிகளின் சுரண்டலை பேசிய படைப்புதான். ஆனால் அது அவ்வளவு இயல்புதன்மையோடு சென்னையைப் பிரதியெடுக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்திற்கு அது ஒரு பங்களிப்பாக கொள்ளலாமே தவிர எதார்த்த படைப்பாகவெல்லாம் சொல்ல முடியாது.
எதார்த்த சினிமா இல்லையா?
      மெட்ராஸ் எதார்த்த படமெல்லாம் கிடையாது, வழக்கமான பலிக்குபலி வாக்கும் மசாலா படம்தான் என்று மாற்றுச் சினிமா குறித்து பல விவாதங்களை நடத்திவரும் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். ஒரு அரசியல் படம் பாமரர், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும் வகையிலும், முக்கியமாகப் பிடிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டால் அது எதார்த்தம் என்ற வகைபாட்டில் இருந்து விலகிவிடுமா என்ன? வழக்கமான தமிழ் படங்களில் இருந்து இது எத்தனை இடங்களில் விலகி, அதே வேலையில் மக்களை ரசிக்க வைத்துள்ளது என்பது மிக முக்கியமானது.
படத்தில் நாயகனுக்கும்-நாயகிக்கும் டூயட் இல்லை, நாயகனின் வல்லமைகளைச் சொல்லும் அறிமுகப் பாடல்களும் இல்லை. படத்தின் அறிமுக பாடலில் கூட அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் நாயகன் அறிமுகமே வருகிறது. இது கூடப் பழைய டிரெண்ட்தான், இப்போதைய டிரெண்ட் என்னானா? நாயகன் காதல் தோல்வியில் குடித்துவிட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தையே பங்கப்படுத்தி பாட்டு பாட வேண்டும். ஆனால் மெட்ராஸ் படத்திலும் காதல் தோல்வி பாடல் வருகிறது, ஆனால் நம்பிக்கை ஊட்டும் வகையில் வேறுபரிணாமத்தில் ஒலிக்கிறது. குத்துப்பாட்டு என்பது கூடத் தமிழ் சினிமாவின் ஒருவகை வணிக உட்கூறாக மாறிவிட்து, மெட்ராஸில் கானா பாலா, இரண்டு பாடல்களைப் பாடியும் வழக்கமான குத்துபாட்டு அதில் இல்லை என்பதை மாற்று சினிமா விரும்பிகள் என்னவாக புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் சென்னையின் பிரத்யேக அடையாளமாக மரணக் கானாவை படத்திற்குள் காட்சிபடுத்தியது மிகவும் முக்கியமான எதார்த்த பதிவு.
10167914_836847686339372_981653989116167863_n
மெட்ராஸை வெகுமக்களை ரசிக்க வைத்ததில் அதில் பங்கேற்ற நடிகர்களுக்கும், தொழிற்நுட்ப கலைஞர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. காளி-கலையரசி ஜோடியைவிட அன்பு-மேரியே ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்கள், இவர்கள் இருவரது நடிப்பும் மிக எதார்த்தம். ஜானியாக அரிகிருஷணன் பட்டையைக் கிளப்பியுள்ளார், 1980களின் ஆடை ஒப்பனையும், அவரது உடல்மொழியும், நடிப்பும் மக்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்பதற்கு முகநூலில் அவருக்குக் கிடைத்துள்ள பரவலான பாராட்டுகளும் வரவேற்புமே சாட்சி. கவிஞர் ஜெயபாலனின் ஓவியமே படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே உறுபெற்றுவிட்டது. மேலும் கோபி, வினோத் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் மெட்ராஸின் தனித்தன்மைதான். இப்படத்தில் வரும் பலரும் வடசென்னை வாழ் கலைஞர்கள் என்பதும் மிகமுக்கியமானது. இசை, பாடல், கேமிர என மூன்றும் படத்திற்கு முழுமையாகத் துணை நின்றுள்ளது. குறிப்பாகப் பாடல் வரிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் தன்மையில் உள்ளதோடு, அரசியலோடு உள்ளது முக்கியமானது.

இது தலித் சினிமாவா?
அவர்களின் அடுத்தகேள்வி, இதில் எங்கே தலித் வாழ்வியல் இருக்கிறது என்று? தலித் அடையாளம் என்ற உடன் ஊரிலே மிக மோசமான பண்ணையார், ஊர் கோவில் பிரச்சனை, பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் இருந்து ஒரு படித்த இளைஞன், தலித் மக்களுக்குப் படிப்பு வேண்டும், குடிக்கக் கூடாது என்று அறிவுரைப்பது, பண்ணையார் மகளோடு காதல், ஊர் எரிப்பு, ”எஜமா நாங்க தெரியாம பண்ணிடோம்எங்க வயத்துல அடிச்சிடாதீங்க”………………… இப்படியாக எதவாது வசனங்களுடன் படம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது போலா. படத்தின் களம் சென்னை தலைவா, இங்குச் சாதியம் நுணுக்காமாதான் செயல்படுதாம், புத்திஜீவிங்க ரொம்பபேரு சொல்லியிருக்காங்க. அத படத்திலயும் நுணுக்கமாதான் தலைவா சொல்லமுடியும். நமது சினிமா உருவாக்கிய உளவியல் பிரச்சனை என்னான்னா. சமூக பிரச்சனைய பேசும் சினமானாலே பக்கம் பக்கமா வசனம் பேசி,கொழகொழகொழன்னு மொக்கபோடுரது. உணர்ச்சிகரமா வசனம் பேசி மதம், சாதி பிரச்சனைய பேசியே தீக்குறது, கேஷ்மீர் தீவிர வாதியையே பேசி திருத்துர சினிமா பாத்து நம்ப மூல மங்கி போச்சுப் பாஸ், அதான் காட்சிமொழியில் அரசியல முன்வைச்சா கூடக் கண்ணையும் காதையும் பொத்திகிட்டு. என்னப்பா ஒன்னும் புரியலனு கேள்வி கேட்க தோணுது. சரி உங்க கேள்விக்கு ஒரு எதிர் கேள்வி, இதுவரையிலான தமிழ் சினிமால (அவா சினிமா, தேவர் சினிமா, கவுண்டர் சினமா……) ஆதிக்கச் சாதி பெருமைய வாய்கிழிய பேசினாங்களே, அவங்களோட உண்மையான அடையாளத்த தைரியமா சொல்லமுடிஞ்சுதா? குற்றப்பரம்பரை பிரச்சனையையும், பெருங்காமநல்லூர் போராட்டத்தையும் வெளிபடுத்தி இருக்காங்களா.  சினிமாவின் ஏ, பி, சி னு எல்லாச் சென்டர்லயும் ஆதிக்கம் செலுத்துர அவங்களாலேயே வெட்டிபெருமையைத் தான் பேசு முடிஞ்சதே தவிர, உண்மையைப் படமெடுக்க முடியலயே.. நாங்க பேசுரது ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம் பாஸ் அவ்வளவு லேசுல சொல்வதற்கான சமத்துவச் சூழல் இங்க இல்லை. இத ஒத்துக்கறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுக்குதான் பிரச்சனை. இதுக்காக அசிங்கப்பட வேண்டியது நீங்கதான், நாங்க இல்லை.  ”செல்லுலாயிட்” என்ற மலையாளப்படத்தில் புலையர், பறையர். நாடார், நாயர், நம்பூதரி எனச் சாதிகளின் பெயர்கள் மிக இயல்பாக வசனத்தில் இடம்பெற்றதோடு, அன்றைய கேரளத்தின் சாதியவெறியை விமர்சன பூர்வகமாக முன்வைத்து வெற்றியும் பெற்றது. இது தமிழ் சினிமாவில் என்று சாத்தியமாகும். அசமத்துவமற்ற சமூகச் சூழலில் தமிழ் சினிமாவில் மட்டும் தனியா சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது. சமூக அசமத்துவத்திற்கு எதிர எப்படி அடித்தல எதிர்ப்புக் குரல்கள் வலுக்குதோ, அதே போலச் சினிமாவிலும் எதிர்ப்பு குரல் மெல்ல வலுக்கும். அக்குரலில் ஒன்றுதான் மெட்ராஸ்.
கேள்விக்குக் கேள்வி பதிலாகாதுன்னு நீங்க சொல்லறது எனக்குக் கேட்குது.  சரி.. தலித் அரசியலின் நிறம் நீலம், அது படத்தில் எவ்வளவு நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா? காளியும், அன்பும் விளையாடும் கால்பந்து அணியின் ஆடை நீல நிறம், அவர்களின் நடனக்குழுவின் பெயர் புலு பாய்ஸ், அன்பு வெட்டி கொல்லப்படும் போது அவனது உடை நீலம், இப்படி நிறையச் சொல்லமுடியும். சுவரோவியம் அழிக்கப்படும்போது முதலில் ஊற்றப்படும் நிறமும் நீலம்தான், அதைதொடர்ந்தே பிற நிறங்கள் ஊற்றப்படுகிறது. சமூக மாற்றத்திற்கான படை அணிவகுப்பில் தலித்துகளே முன்னனிப்படை என்பதையே இயக்குனர் உணர்த்துவதாகப் புரிந்துக்கொள்கிறேன். “இங்க இருக்கிறவனுங்கெல்லாம் தமிழ் தமிழ் இன்றானுங்க சாதி மதமுன்னா மட்டும் கத்தியத்தூக்கினு வரானுங்க” என்ற வசனமெல்லாம் யாருடைய அரசியல் பிரச்சனை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகள் தங்களின் அதிகார விளையாட்டிற்குத் தலித்துகளை எப்படிக் களபலி கொடுக்கிறது என்பதையும், இவ்வமைப்பிற்குள் தலித் ஒருவன் தலைவனாக (மாரி) வந்தாலும் அவன் தன் மக்களுக்குத் துரோகத்தை செய்யும் கருவியாகத்தான் இருப்பான் என்பதை பட்டவர்தனமாக பேசுகிறது.
வடசென்னையும் தலித் அடையாளமும் வெவ்வேறயா
தமிழ் இந்துவில் வெளியான குறுக்கு விசாரணையொன்றில் ”வடசென்னை வாசிகளெல்லாம் தலித்துகள் அல்ல!” என்று மாபெரும் கண்டுபுடிப்பு வெளியானது. ஏன்பா!  மதுரக்காரங்க எல்லாம் தேவரா காட்டினப்ப நீங்களெல்லாம் எங்க போயி இருந்தீங்க, பரவாயில்லை மதுரக்காரங்ய்க மேல இல்லாத பாசம் எங்கமீது வந்திருக்குன்னு நினச்சிகிறோம். எங்க அடையாளத்துமேல கரிசன படுரவரு வடசென்னைய பற்றிப் புரிதலோடு எழுதியிரக்கர குறுக்கு விசாரணைய படிக்கனுமே. அடேயப்பா! வாய்ப்பேயில்ல. அப்படியொரு புரிதல், கூகில் மேப்புல கூட வடச்சென்னைய இவரு பாத்திருக்க மாட்டாரு போல. இவர் மட்டுமல்ல சென்னையின் பூர்வக்குடிகள் மற்றும் சேரிவாழ் மக்கள் குறித்து மனவருத்தம் தெரிவிக்கும் பலர் வடசென்னை பக்கம் தப்பிதவறி கூட தலைவைச்சது கிடையாது. அதிக வாடகை கொடுத்தாலும் பரவாயில்லை, தென்சென்னையிலேயே இருக்கோம் என்கிறார்கள். கட்டமைப்பு வசதிகள் என்பதைவிட ஸ்டேடஸ் இவர்களை தடுக்கிறது. வடசென்னையில் இவர்கள் அதிகம் வந்துபோன இடம் சென்டரல் ஸ்டேஷனும், பாரிமுனையும் தான். பஸ்லயும், ரயிலயும் குட்கார்ந்து பார்த்த அனுபவத்திலேயே இவர்கள் வடசென்னையைப் பற்றி பக்கம்பக்கமா எழுதி தள்ளுராங்க.
உண்மையில் வடசென்னை வாசிகள் எல்லாம் தலித் இல்லை, என்பது சரிதான். ஆனால் இங்குள்ள அடிப்படை மக்களில் பெரும்பகுதி தலித்துகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையின் பாரம்பரிய குடியிருப்புகளில், வீட்டு வசதிவாரிய தொகுப்பு வீடுகளில் பறையர், ஆதி ஆந்திரர், மீனவர், வன்னியர், நாயுடு மற்றும் இஸ்லாமியர்கள் என பலர் பாரம்பரியமாக வாழ்ந்துவருகின்றனர். இவற்றைத் தவிர்த்து பிராமணர், முதலியார் உள்ளிட்ட பிற ஆதிக்கச் சாதியினரும் பாரம்பரியமாக இருந்துள்ளனர். வெள்ளைக்காரன் கட்டியெழுப்பிய கறுப்பர்நகரத்தின் வளர்ச்சியில் இரத்தமும் சதையுமாக இவர்களின் பங்களிப்பு உள்ளது. கபிலனின் வரிகளில் சொல்வதனால் “ரிப்பன் பில்டிங் ஐகோர்ட் எல்லாம் செங்கல் மணல் மட்டுமல்ல எங்களோட இரத்தங்களும் சேர்ந்திருக்குடா”, என இவர்களின் பங்களிப்பிலேயே சென்னை வளர்ந்தது. இன்றைய வடசென்னை முழுக்கப் பூர்வக்குடிகளின் நகரம் இல்லை, ஆனால் சென்னையின் பூர்வக்குடிகள் கணிசமாக வடசென்னையில்தான் இருக்கிறார்கள். இப்படிப் பாரம்பரிய மக்களும், பிற மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் இணைந்தே இங்கு வாழ்கின்றனர். வளர்ந்த நகரத்தில் பின்னர் வந்து குடிபெயா்ந்தவர்களின் ஆதிக்கம் இன்று தொடர்வதால் சென்னை வந்தேறிகளின் நகரம் என்று வந்தேறிகள் கருத்தை கட்டமைத்து வடச்சென்னையைின் அடையாளத்தை மறுக்கின்றனர்.
இதில் வியாசர்பாடி பகுதியின் குடியிருப்பை மையமாக வைத்து செய்த படம்தான் மெட்ராஸ், அதில் அப்பகுதியில் உள்ள தலித் இளைஞர்களை முன்வைத்துக் கதைசொல்லியிருக்கிறார் ரஞ்சித். சென்னையின் சமூக அரசியல் தெரிந்தவர்களுக்கு இது சரிதான் என புரியும், நமக்குத் தான் அரசியல் என்பதே கெட்ட வார்த்தை ஆச்சே, அப்புறம் எப்படிப் புரியும். பேசாம சராசரிப் ரசிகராக படத்தை ரசிக்க வேண்டியதுதானே. உங்களுக்கு அரசியலே வரலயே பாஸ். வராத அரசியல வா.. வா..னா எப்படி வரும். உங்கள் புலம்பலுக்காக வேண்டி ஒன்று பண்ணலாம், ரஞ்சித் அடுத்தப் படம் பண்ணும்போது, அவர் படம் பண்ணும் வடசென்னையின் ஏரிய, தெரு, வீடு எண், அதில் உள்ளவர்களின் எண்ணிக்கை, சாதி குறியீட்டு எண் மற்றும் ஆதார் அட்டை விபரங்களுடன் ஒரு அறிமுகத்தைத் தரசொல்லலாம். நீங்க கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவீங்கதானே??
என்னைப் பொறுத்தவரை சுவர் அரசியலே வடசென்னையின் முக்கிய அடையாள வெளிபாடுதான். திருவொற்றியூர் சுங்கங்சாவடி, ராயபுரம் ரயில் மேம்பாலம், பெரியமெடு, பெரம்பூர் பி.என்.சி மில், வில்லிவாக்கம் என வடசென்னை முழுக்க ஆங்காங்கு உயர்ந்த சுவர்களில் அரசியல் விளம்பரம் செய்ய நடக்கும் போட்டி இருக்கிறதே. இது பிற மாவட்டங்களுக்குப் பொறுந்துமா எனத் தெரியவில்லை, ஆனால் இந்தச் சுவர்களை தற்காப்பதில் அடித்தளக் கட்சி தொண்டர்கள் மேற்கொள்ளும் போட்டா போட்டிகள் அபூர்வமானாது. ஒரு கட்சியின் கட்டுபாட்டில் உள்ள சுவரை பிடித்துவிட்டால் அதற்கு வரும் பஞ்சாயத்து இருக்கிறதே எப்பாப்பா, அதைச் சரியாகவே மெட்ராஸ் பதிவு செய்துள்ளது.
குறையே இல்லாதல்ல மெட்ராஸ்!
madras-review
   மெட்ராஸ் படமே முழுமையானது, அப்பழுக்கற்றது என்றெல்லாம் ஒன்றுமில்லை. சினிமா அடிப்படையிலும், அரசியல் ரீதியாகவும் சில குறைபாடுகளை இப்படம் கொண்டுள்ளது. “எவ்வளவோ அரசியல் ரீதியாகக் கதைபண்ணாலும், பல விசயங்களை நேரடியாகச் சொல்வதற்கான வெளி இங்குயில்லை என்பதே உண்மை, இது ரஞ்சித்திற்கும் பொருந்தும். முதல்பாதியில் முன்வைக்கப்பட்ட கதை போக்கு இரண்டாம் பாதியில் தடம்தவறி போனதை யாரும் மறுக்க முடியாது. கதைகளத்தோடு ஒட்டாத கதாநாயகி, எதிரிகளைத் தன்னந்தனியாக வேட்டையாடி நண்பனின் இழப்பிற்குப் பலிவாங்கும் வழக்கமான திரைநாயகன் எனச் சில சருகல்களைச் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக ஆதிக்கவாதிகளிடம் இருந்து கைபற்றப்படும் சுவரில் “அன்பு” படத்தை வரையாமல் போனது கூட ஒருவகையில் குறையாகவே எனக்கு தோன்றியது. இவ்வாறான குறைபாடுகளுடன்தான் வணிக ரீதியாக இப்படம் வெற்றிபெற்றுள்ளது. இக்குறைபாடுகள் இல்லாது இருப்பின் அரசியல் ரீதியாக இன்னும் முழுமைபெற்றிருக்கும். இருப்பினும் இதுவரையிலான அரசியல் படங்களில் இது தமிழக அரசியலின் அடிமட்டத்தை மிக நுணுக்கமாகவே விமர்சன பார்வையோடு பேசியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சினிமாவின் வெற்றிக்குக் கை, கால், வாய் அசைத்த கதாநாயகனை புரட்சி நாயகர்களாக, அரசியல் தலைவர்களாக, தத்துவ ஆசான்களாகக் கொண்டாடிய காலம் போய், படத்தின் இயக்குனரை முதன்முறையாகக் கொண்டாடுவதும், வாழ்த்துவதும் கூட அளவியல் ரீதியாகப் பெரிய முன்னேற்றம்தான். மெட்ராஸ் வெற்றியை இவ்வளவு வரவேற்பிற்கும், கொண்டாடத்திற்கும், விமர்சனத்திற்கும், எதிர்ப்பிற்கும் உள்ளாவதற்குக் காரணம், இது ஒரு தலித்தால் தலித் அரசியல் செயல்பாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட படம் என்பதால்தான். அப்படினா ரஞ்சித்தான் திரைப்பட இயக்குனராகும் முதல் தலித்தா என்றால், இல்லை. இதற்கு முன்பு சிலர் வெற்றிபெற்றுள்ளனர், அவர்கள் தங்களுக்கான அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்வதற்கு மெட்ராஸ்சின் மூலம் ரஞ்சித் பெற்ற வெற்றிக் காரணமாக இருந்துள்ளது. ஒரு படத்தை, கலைஞனை சாதிய சார்பு நிலையில் மட்டும் வைத்து கொண்டாடுவதும் ஒருவகைச் சாதிவெறிதான், இதில் தலித்-தேவர்-பிராமணா என்றெல்லாம் வேறுபாடுகிடையாது என்று சிலர் தீடீர் சமத்துவம் பேசுகிறார்கள். அவ்வளவு சமத்துவ விரும்பியாபா நீங்க? இதே கேள்வியை நீங்கள் எல்லாரிடமும் கேட்டது உண்டா?, குறைந்தபட்சம் கேட்கனுமுன்னு நினைச்சதாவது உண்டா. அப்படியென்றால் கௌதம் கார்த்திக், விக்ரம்பிரபு போன்ற ஓன்றிரண்டு படங்களே நடித்துள்ள இளம் நடிகர்களுக்கு ஒட்டப்படும் ரசிகர் மன்றப் போஸ்டர்களை கண்டும்காணாமல் போனது ஏன்? இவர்களைத் தூக்கிபிடித்துக் கொண்டாடுவதற்குப் பின்னால் சாதிவெறி இல்லையா? கார்த்திக் மற்றும் பிரபுவுக்கு எந்தச் சாதியவெறியர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடினார்களோ அவர்கள் இப்போது அவர்களது மகன்களுக்கு ஒட்டுகிறார்கள். மெய்யாலும் பாஸ்.. பாருங்க சொன்னா நம்பமாட்ரீங்க.  இவையெல்லாம் மீறி ஆதிக்கவாதிகளின் கருத்தியலை ஆதரிப்பதற்கும், ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தியல் வெற்றியை கொண்டாடுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது பாஸ்.
இறுதியாக… ஒன்னுமட்டும் சொல்கிறேன்..
 மண்ணு வாசம், கொழம்பு வாசமெல்லாம் எங்க சென்னை மண்ணுக்கும் உண்டு, கொஞ்சம் மூக்கையும் மனசையும் திறந்து மோந்து பாரு” என்று தெனாவட்டாகச் சொல்லும் கர்வத்தை மெட்ராஸ் எங்களுக்குத் தந்துள்ளது. இதுவொன்றும் தானாக நடந்த ஒன்றல்ல.  எங்களில் இருந்து ஒருவன் சமூக-அரசியல் புரிதலுடன் உருவானதன் வெளிபாடே இது என்பதோடு, இதற்குக் “கானா” பாலா, கபிலன், கோபி மற்றும் பல வடசென்னை சார்ந்த கலைஞர்களும், பிற முற்போக்காளர்களின் முழுப் பங்களிப்பும், ஆதரவுமே இதை சாத்தியமாக்கியுள்ளது. 
அட! இனி சென்னை படம்தான் தமிழ் சினிமால டிரெண்ட் பாஸ்” இப்படி ஒரு கும்பல் இந்நேரத்துக்குக் கிளம்பியிருக்கும். அந்தக் கொடுமையையெல்லாம் இனிமே நாங்களும் பொருத்துக்கனும். பரவாயில்லை.. பரவாயில்ல… ஆனா அவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ”ஏய்ய்…..ய்ய்ய.. நாங்களும் மெட்ராஸ் காரங்கதான்டா” என்ற ரேஞ்சுக்கு எங்களயும் மட்டமாக ஆக்கிவிட்டுடாதீங்க!!. பீலீஸ்!!..