Friday, November 27, 2009

அவ்வுலகில் கூட ஹிட்லர், ஹிட்லர்தான்! நண்பர் சாண்க்யா சொ்ன்ன குட்டிக்கதை




இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின், ஜெனரல் ஐஸனோவர் இறைவனால் சொர்க்கத்திற்கு அனுப்பப் பட்டார். ஒரு நாள் "நான் நரகத்தைச் சுர்றிப் பார்க்க அனுமதி வேண்டும்" எனக் கடவுளிடம் கேட்டார். காரணம் கேட்டார், கடவுள். "வேறொன்றுமில்லை, அங்கே ஹிட்லர் அனுபவிக்கும் வேதனையை நான் பார்க்க வேண்டும்" என்று பதில் கூறினார்,ஐசனோவர்.

நரகத்தில் ஹிட்லர் சித்ரவதை செய்யும் முகாமிற்கு ஐசனோவர் அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அசிங்கங்கள் நிரம்பிய ஆள் உயரத் தொட்டியில், ஹிட்லர் அமிழ்த்தப் பட்டிருந்தார். தொட்டியின் மேல் தெரிந்த ஹிட்லரின் முகத்தில் நிலவிய பிரகாசமான புன்னகையைக் கண்டு ஐசனோவர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.விளக்கம் கேட்டபோது ஹிட்லர் சொன்ன பதில். " எனக்குக் கீழே சிக்கிக்கொண்டிருப்பது யார் தெரியுமா? முசோலினி. அவரின் தோள்களில்தான் நான் நிற்கிறேன்.அவரின் நிலையை நினத்து பார்" என்றவர்
அட்டகாசமாகச் சிரி்த்தார்.

நள்ளிரவில் தமிழக மு்தல்வரிடம் கடன் கேட்கப்போன வேலையில்லாப் பட்டதாரி வாலிபன்:




விழுப்பு்ரம் மாவட்டம், கடலூரைச் சேர்ந்தவர், முஹம்மது முபாரஹ். வயது 28. MBA பட்டதாரி. கடலூரிலிருந்து சென்னைக்கு 3 நண்பர்களுடன் சென்ற புதன் இரவு காரில் பயணித்திருக்கின்றான். நள்ளிரவில், தேனாம்பேட்டை வந்தபின், காரை, தமிழக முதல்வர் வீட்டிற்குச் செலுத்துமாறு கூறியுள்ளான். மாட்டிக்கொண்டான், காவலரிடம். விசாரித்தபோது முதல்வரிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்குவதூதான் நோக்கம் என்று கூறியுள்ளான். மருத்துவ அறிக்கை சாதகமாக இல்லாததால், வேலைதேடி துபாய் செல்ல நினைத்த முபாரக்கின் எண்ணம் ஈடேறவில்லை. தேனாம் பேட்டைக் காவல் நிலையத்திலிருந்து ,அவனையும், ஓட்டுநர் உள்ளிட்ட மூவரையும், அவனது தந்தை, ஷாகுல் ஹமீது அழைத்துச் சென்றதுடன் கதை முடிகின்றது. மூ்ளைக்கோளாறு காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர். ஜெயில் அடைப்பு, நீதிமன்றம், வழக்கு விசாரணை, தண்டனை என்றில்லாமல் அப்பாவிடம் ஒப்படைத்திட்ட காவல் துறையினரின் கருணைச் செயலைப் பாரட்டவே இந்தப் பதிவு.

காணவில்லை என்ற விளம்பரம்-விபத்தால் மரணம் என்பது போன்ற செய்திகள் தினந்தோ்றும் பேப்பரில் வந்துகொண்டுதான் இருக்கின்றன். ஆனால், நம் வீட்டில் ஒருவர் காணாமற் போனாலோ- மரணம் அடைந்துவிட்டாலோதான் பாதிக்கப்படுகின்றோம். அங்கொன்று்ம் இங்கொன்றுமாக அதி்ருப்தி அல்லது விரக்தியில் சிலர் இவ்வாறு அலைந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

நியாயமான பல்வேறு முற்சிகளுக்குப் பின்னரும் எண்ணியதை அடைய முடியாமல் போய்விடுகிற- பிரச்சினைகளை எதிர் கொள்ள இயலாத கோழைகளின் செயல் இது. ஆழ் மனதில், தலைவரிடம் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையால் அந்த வாலிபன் நள்ளிரவென்றும் பாராமல் பித்தனாக அலந்திருக்கின்றான். இது போன்ற நபர்க்ளைப் பார்க்க நேர்வோர், சிறிதளவு கவனம் செலுத்தினால், முயற்சி மேற்கொண்டால், மனச் சிதைவின் துவக்கக் கட்டத்திலேயே குணப்ப்டுத்திவிட முடியும். முயற்சிப்போமா? source:TOI

விவேகானந்தர் போற்றிய கேரளத்துப் பெரியார்-சமூக சீர்திருத்தவாதி










"கேரளம் பரசுராமர் பார்ப்பனருக்கு்த் தந்த நன்கொடை" என்ற கர்ணபரம்பரைக் கரு்த்திற்கெதிராகப் போர்க்கொடி தூக்கியவர்,சட்டாம்பி ஸ்வாமிகள். சட்டாம்பி என்றால் மானிட்டர் என்று பொருள். சட்டாம்பிள்ளை என்ற சொல் தமிழிலிலும் வ்ழக்கில் உண்டு.

கேரளத்தில் விவேகானந்தர் பயணித்தபோது, இவரிடமிருந்துதான், சின் முத்திரைக்கு உரியதான ஐயப்பாடுகளில் தெளிவடைந்தார்."சிறப்பிற்குரியதோர் மனிதர்" என்று விவேகானந்தரால் பாராட்டப்பட்டவர்,சட்டாம்பி ஸ்வாமிகள்.

உணவும்,தண்ணீரும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்று முழக்கமிட்டவர்,இவர். சமூகத்தின் அடித்தட்டில் இருந்த, ஈழவ மக்களுக்காகப் பாடுபட்டவர்.கேரளத்தில் நிலவிய பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரலெழுப்பிய வகையில், தமிழகப் பெரியாருடன் ஒப்பிடலாம். பார்ப்பனீயர் கேரளத்தில் குடியேறியவர்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

தென்னிந்தியா முழுவதும் பயணித்தார்;மதங்கள், மொழிகள் ஆராய்ந்தார்.பயணத்திற்குப்பின், 1914-ல்,ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தபட்ராசரம்ம் உருவாக்கினார்.ROBIN JEFFRI -என்ற வெளிநாட்டுப் பயணி,சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள், நாராயண குருவிற்கு( மகாத்மா காந்தி சந்தித்த கேரளத்துச் சீர்திருத்தவாதி) யோகாப்பியாசங்க்ளைக் கற்றுக்கொடுத்த விபரத்தைத் தம் எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வகுப்பறைக்குள் உட்கார அனுமதித்த கொல்லூர் அதியர் மடத்திலிருந்த்தான் இவரது கல்விப் பயணம் தொடர்கின்றது. தைக்காட்டு ஐயா என்ற தமிழறிஞ்ர், ஸ்வாமினாத தேசிகர்,சுப ஜ்டாதிபதிகள் ஆகியோரிடமெல்லாம் பயிற்சி் பெற்ற்வர்.தமிழ்,மலையாளம்,சமஸ்கிருதம் தேர்ச்சி உண்டு.

இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர்,ஐயப்பன்.மக்கள் அழைத்த பெயர்,குஞ்சன். திருவனந்தபுரத்திற்கருகில் உள்ள கன்னன்மூலில் பிறந்தவர். ஆனந்த்சர்மா என்ற வாசுதேவசர்மா-திருனங்கா இவரது பெற்றோர்.

பிரசீனா மலயாளம், வேதாதிகர நிரூபணம்,ஸ்ரீசக்ர பூஜாபலன், க்ர்ஷ்டுமாதா நிரூபணம்,ஜீவகாருண்ய நிரூபணம்,ஆதிபாக்ஷா -இவை இவர் படைத்தளிதவை.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட புற்க்கணிக்கப்பட்டவகளுக்கு்ப் பாடுபட்டவர்கள் எவ்ராக இருப்பினும், பதிவு செய்திட விருப்பம்;http://www.nairs.in/chattambi.htm என்ற வலைத்தளம், NAIR ACADEMY OF INFORMATION RESEARCH AND SERVICES -அமைப்பினரால் உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதி இது. தமிழகத்தில் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி-திராவிட இயக்கங்களுக்கு, மு்ன்னோடியான, பார்ப்பனதல்லதோர் இயக்கத்தி்ன் செயல்பாடுகளுக்குச் சமமாகக் கருதலாம்.

ஒழுக்கக் குறைவு உயிருக்குக் கேடு:-



Shivani Bhatnagar (Died: January 23, 1999) was a journalist working for the Indian Express newspaper. Her murder on January 23, 1999 became a scandal that reached into the top levels of Indian politics. Indian Police Service officer Ravi Kant Sharma was charged with the murder by the Delhi Police, who investigated the case. Sharma surrendered to the police on September 27, 2002, after having been in hiding since the arrest warrant was issued on August 3 of that year. Sharma and his wife, Madhu, have alleged that Bhatnagar’s murder was orchestrated by the late Pramod Mahajan, a prominent leader of the Bharatiya Janata Party (BJP). Mahajan was killed by his own brother.

IPS officer R K Sharma along with three other accused in the Shivani Bhatnagar murder case were convicted by a Delhi Court on March 18, 2008. Two other accused -- Ved Prakash Sharma and Ved Prakash alias Kalu -- were acquitted for want of evidence. Those convicted were sentenced to life imprisonment on March 24, 2008. They plan to file an appeal against the trial court verdict.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர் ஷிவானி பட்னகர்-IPS ஆபீசர் ரவி கன்ட் ஷர்மா கூடா நட்பும், திருமண வற்புறுத்தலும் கடைசியில் கொலையில் முடிந்தது.கோர்ட்டின் விரைந்த விசாரணையால்,1999க்கு 2008ல் தீர்ப்பு இருவருக்கு. எஞ்சிய காவல்துறை உயர் அதிகாரி 2009-நவம்பரில் டிஸ்மிஸ். 1999-ல் இருந்த 2-வயதுக் குழந்தை என்ன ஆனதோ?
source:TOI

Thursday, November 26, 2009

திரைத்துறைச் செல்வி- நடிகை- புதுமுகம்-தேவை- மிகவும் அவசரம்.


"புத்தம் புது பூமி வேண்டும்"
- திரைப்படத்தில் நடித்திடப் புதுமுக நடிகை வேண்டும்.

மணிரத்னத்தின் பயிற்சிப் பட்டறையில் பல்லாண்டு பயின்றவரும்,

தாசரிநாராயணராவ் போன்ற பிரபலங்களிடமெல்லாம் பணியாற்றியவரும்,

18-20 ஆண்டுகால அனுபவசாலியுமான

ரவீந்தி்ரன் இயக்கு்கின்ற வெற்றிப்படம்

தயாரிப்பு மூவிங் மூவி மேக்கர்ஸ்.

தொடர்பிற்கு: Email : vikatakavi_chennai@yahoo.com

சிவாஜி என்ற சிங்கத்தைத் தயிர்ச் சாதம் போட்டே கொன்றுவிட்டோம்-கமலஹாசன். கமல் என்கி்ற தயிர்ச் சாதத்தைச் சிங்கமாக வாழ வைத்துவிட்டோம்-விகடகவி



விகடகவி-உலகத் தமிழர்களுக்காக வெளிவரும் ஓர் மாத இதழ். அதன் ஆசிரியர், எனது நண்பர், ஜெ.பால். விகடகவி பழைய பேப்பர் கடைகளில் பார்த்திட முடியாத ஓர் பத்திரிக்கை. ஏனெனில், விகடகவியை வாங்கு்வோர் பொக்கிஷமாகப் பாதுகாக்கின்றனர். 7-வது ஆண்டாக வந்து கொண்டிருக்கின்றது.

பள்ளிகள்,கல்லூரிகள், ஆங்கில மருத்துவமுறை மருத்துவ மனைகள், உள்ளாடைகள், பான்பிராக்,புகைப்பான், போதைப் பொருட்கள்,பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற விளம்பரங்களைத் தவிர, மூலிகை,சித்த மருத்துவம்,ஆயுர்வேதம் மற்ற விளம்பரங்கள் வரவேற்கப்படும் என்று அறிவித்துப் பத்திரிக்கையை நடத்திக்கொண்டிருக்கும் வித்தியாசமான மனிதர்.

நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கியுள்ளவர்.
தி்ரைத்துறையிலும் வெற்றிக்கொடிகட்டப்போகும் ஜெ.பால், கமல் குறித்து என்ன சொல்கின்றார். பார்க்கலாம். வருகின்றீர்களா?

சிவாஜி என்ற சிங்கத்தைத் தயிர்ச் சாதம் போட்டே கொன்றுவிட்டோம்-கமலஹாசன்
கமல் என்கி்ற தயிர்ச் சாதத்தைச் சிங்கமாக வாழவைத்து விட்டோம் -விகடகவி


.......... டாக்டர் ஒருவர், சிற்ந்த மருத்துவர் என்று பிரபலமாகக் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது தொடர்ந்து அந்தத் துறையில் நீடிக்கவேண்டும்.அதன்பின் அந்த ஊரில் அவர் பெரிய மருத்துவர். அப்படி கமலும் பெரிய மருத்துவராகியுள்ளார்.

ஆனால், கமல் என்ற கலைஞனை மற்றவர்கள் அறிமுகப்படுத்தியபோது பிறர் சொல்வதைச் சரியாகச் செய்யும் கிளிப்பிள்ளை. கமல் தன்னைப் படப்பாளியாக அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் சொல்வதை நாம் கேட்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் குறும்புக்கார சர்வாதிகாரி.

கமல் ஒரு மாற்று இல்லாத நடிகன் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. அதை அவர் தாராளமாகத் தக்க வைத்துக் கொள்வார்.கேள்விக்கிடமில்லை.கமலின் படைப்புக்களுக்கு அவர் வாழும் காலக்கட்டத்திலேயே எதிர்ப்படைப்புகளும் கருத்துகளும் தோன்றி அழிக்கும் தன்மை வாய்ந்தது.-இவை பத்திரிக்கையாளன் என்ற பார்வையில்:

விமர்சிக்கத் தெரியாத வயதிலும், விமர்சகத்தைத் தெரிந்த வயதிலும் கமலின் நடிப்பு ஒரு போதை. இந்த போதைக்கு ரசிகன் என்ற முறையில் அவரை வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.
விகடகவி அக்டோபர் மாத இதழில் வெளிவந்த வினா-விடையினொரு பகுதி. பகுதியிலிருந்து.

ப.சிதம்பரம் மீது செருப்பு வீசியவர் எழுதிஉள்ள புத்தகம்:-1984 - சீக்கியர் விவகாரம் ?



The unanswered questions, the justice delayed, the unbearable memories—the three days of 1984 when over 3000 Sikhs were slaughtered, have indelibly marked the lives of thousands more who continue to exist in a twilight of bitterness and despair.

It was outrage at this state of affairs that led Jarnail Singh, an unassuming, law- abiding journalist, to throw his shoe at home minister P Chidambaram during a press conference in New Delhi. He readily acknowledges that this was not an appropriate means of protest, but asks why, twenty-five years after the massacres, so little has been done to address the issues that are still unresolved and unanswered and a source of anguish to the whole community.

Who initiated the pogrom and why?

Why did the state apparatus allow it to happen?

Why, despite the many commissions and committees set up to investigate the events, have the perpetrators not been brought to book?

I Accuse is a powerful and passionate indictment of the state’s response to the killings of 1984. It explores the chain of events, the survivors’ stories and the continuing shadow it casts over their lives. Because, finally, 1984 was not an attack on the Sikh community alone; it was an attack on the idea at the very core of democracy—that every citizen, irrespective of faith and community, has a right to life, liberty and security.

Book Reviews
‘I Accuse… opens wounds which have not yet healed. It is a must read for all those who wish that such horrendous crimes do not take place again.’ —Khushwant Singh

Recent Comments