Sunday, August 28, 2016

ஆசியா ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு !



துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள 
தொங்கு பாலம்.

ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது.

ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-வதாக தொங்கு பாலம் அமைக்கும் பணி கடந்த 2013 மே மாதம் தொடங்கப்பட்டது.

ரூ.20,100 கோடி செலவில் 3 ஆண்டு காலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1.4 கி.மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம், 322 மீட்டர் உயரம் கொண்டதாகும். 8 வழிச் சாலைகள், 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை, ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

புதிய தொங்கு பாலத்தை துருக்கி அதிபர் எர்டோகன் நேற்றுமுன்தினம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார். இந்தப் பாலத்துக்கு 16-ம் நூற்றாண்டை சேர்ந்த துருக்கி மன்னர் யாயூஷ் சுல்தான் சலிம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் மூலம் துருக்கி, ஐரோப்பாவுக்கு இடையே வர்த்தகம் மேம்படும் என்று அதிபர் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.