Friday, November 6, 2015

தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற வேண்டும் - http://onlineuthayan.com/

தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற வேண்டும்
தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற வேண்டும்
திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளின் அத்தியாயங்களை இலங்கை பாடசாலைகளில் தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டுமென  இலங்கை வந்துள்ள இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் இராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பா.ஜ.க இராஜியசபா உறுப்பினர் தருண் விஜய் ஆகியோருக்குமிடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் குறிப்பிட்டதாவது :-

‘இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிகளிலும் திருக்குறள் பாடத்திட்டமாக இடம்பெறுவதற்காக இந்தியப் பாராளுமன்றத்தில் முதன் முதலாக குரல் எழுப்பி அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருக்கிறது.

மிகவிரைவில் எல்லா மொழிகளிலும் திருக்குறள் ஒரு பாடத்திட்டமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் அனைத்து மொழிகளிலும் வெளிவந்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்

0 comments:

Post a Comment

Kindly post a comment.