ச.செல்வராஜ்,
தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணிஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். இவரது குறிப்பிடத்தக்க சிறப்புப் பணி, அகழாய்வுதான். இவர் காஞ்சிபுரம், கரூர், கங்கை கொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, மராட்டியர் அகழ்வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோரா கையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு – selvaraj.sabapathi@gmail.com
|
Story List
கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 4 (09/10/2015)
காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த பழைய கற்கால மனிதன் உணவு தேடுதலையே தனது தொழிலாகக் கொண்டான். உணவ.....
கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 3 (02/10/2015)
உலகின் வேறு எப்பகுதியில் கிடைக்கும் கைக்கோடாரிகளைவிட, இந்தியாவில் கிடைக்கும் கைக்கோடாரிகள் நேர்த்திய.....
கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 2 (25/09/2015)
முதல் பழைய கற்காலத்துக்கு உரிய கற்கருவிகளாக எல்லா இடங்களிலும் பொதுவாக கைக் கோடாரிகளும், வெட்டுக் கத்.....
)தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம் (18/09/2015)
மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம்.....
5)தமிழகத்தின் நிலவியல் அமைப்புகள் - 2 (11/09/2015)
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாய்மொழிக்கு ஏற்ப, தமிழகத்துக்கு நீராதாரத்தை வழங்கக்கூடியவை, இரண்டு பரு.....
நன்றி :- தினமணி
1
0 comments:
Post a Comment
Kindly post a comment.