”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம்” என்றுதிக்கும் நுற்சுவையஃ தாக்கிய ஓர்
ஒளவை பொதுமறையை ஆக்கியநம் வள்ளுவரின்
தெளவையென நாட்டும் தரத்து.
நானான் மணிக்கடிகை நன்காய்ந்து கொண்டேனஃ
தானான் அடைந்த உயர் ஆனந்தம் -தேனார்
உணவால் மகார்மொழியால் ஒண்டொடியால் ஏர்சால்
மணமலரால் பெற்றிலன்காண் மற்று.
முன்னெறிகள் என்று மொழியப் படுகின்ற
பன்னெறிக ளுள்ளும் படருங்கால் – நன்னெறியென்
றொன்றுகண்டேன் அஃதுள் உவந்துசென்றேன் நான்மணியின்
நன்றுகண்டேன் சில்லிடத்து நான்.
நல்வழியக் காத்திருக்க நம்மோர் அதுவிடுத்திங்
கல்வழியில் சென்றலைகின் றாரந்தோ – தொல்வழியை
விட்டுப் புதுவழியை மேவுவதால் தாழ்ப்பஞருவ்
பட்டுழல்வ தொன்றே பயன்.
நல்வழியக் காத்திருக்க நம்மோர் அதுவிடுத்திங்
கல்வழியில் சென்றலைகின் றாரந்தோ – தொல்வழியை
விட்டுப் புதுவழியை மேவுவதால் தாழ்ப்பஞருவ்
பட்டுழல்வ தொன்றே பயன்.
நன்றிக்குரியோர்.
வ.உ.சி.பாடல்கள் 1915 / 1999-நவம்பர்
பதிப்பாசிரியர், வரலாற்று ஆய்வாளர்
செ.திவான் எம்.ஏ., எம்.ஃபில்
வெளியீடு
வ.உ.சி.இலக்கியப் பேரவை
1 / 1 மதுரை ரோடு
திருநெல்வேலி சந்திப்பு.,627 007
இரண்டாம் பதிப்பு இலவசப் பதிப்பாக
பாரதிக்குப்பின்,
84 ஆண்டுகள் கழிந்து
நெல்லைவாழ் செ.திவான் முயற்சியில்
வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது
16 ஆண்டுகளுக்குப்பின்
இணையத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.