Friday, January 3, 2014

ஆன்லைன் மூலம் மட்டுமே, பணம் செலுத்த முடியும்.!


சென்னை:தமிழ்நாடு அரசு கேபிள், "டிவி' நிறுவனத்தில், கேபிள் ஆபரேட்டர்கள், மார்ச் மாதம் 1ம் தேதியில் இருந்து, ஆன்லைன் மூலம் மட்டுமே, பணம் செலுத்த முடியும்.

தமிழ்நாடு அரசு கேபிள், "டிவி' நிறுவனம், ஏற்கனவே அறிவித்தபடி, மாதாந்திர கட்டணத் தொகை, 5,000 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டிய, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், பன்முனை கேபிள் ஆபரேட்டர்கள், தனியார் உள்ளூர் "டிவி' உரிமையாளர்கள், இம்மாதம் 1ம் தேதியில் இருந்து, நேரடியாக ஆன்லைன் முறையில், www.tactv.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே, செலுத்த முடியும்.

மேலும், இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள அனைவரும், மார்ச் 1ம் தேதியில் இருந்து, ஆன்லைன் முறையில் மட்டுமே, மாதாந்திர கட்டணம் செலுத்த இயலும். அதன் பின், சலான் மூலம், கட்டணம் செலுத்தும் வசதி இருக்காது.எனவே, அனைவரும், வங்கிகளை அணுகி, ஆன்லைன் வசதியைப் பெற்று, அதன் மூலம், கட்டணம் செலுத்தும்படி, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் அறிவித்துள்ளது.

செய்தி : தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.