Sunday, February 19, 2012

திருப்பாவையைப் பாடும் தாய்லாந்து மன்னர்!




உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தலம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தைக் கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது. வைணவத் தலமான இந்த கோயில் தான் இன்று வரை உலகில் கட்டப்பட்டவற்றிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாயிருந்திருக்கும்  என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றுச் சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!


இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகள் பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தன. .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் பாழடையத் தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு  "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது,
அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.


பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்தகத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

 இன்றளவும்  இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! 
விண்ணிலிருந்து 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!!

ஒருமுறை  வை.கோவும். தா.பாண்டியனும் தேவநேயப்பாவாணர் அரங்கில் பேசும்பொழுது கம்போடியக் கோவிலின் ப்கழ்பரப்பினார், தா.பாண்டியன். காளையார் கோவில் சிற்பங்களைச் சென்று பார்த்து ரசிக்காதவன்தமிழனே அல்ல என்றும் வசைபாடினார். பழ. நெடுமாறனின் தம்பி,
பழ. கோமதிநாயகத்தின்  முதலாம் ஆண்டு நினைவுநாள்  விழாவன்றுதான் என்று எண்ணுகின்றேன்


அதே கூட்டத்தில் பேசிய வை.கோ. கரிகாலன் கட்டிய கல்லணையின் அறிவியல் நுட்பத்ததினைத் தெர்ந்து கொண்ட பின்னரே, அதே தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தித்தான்  வில்லியம் ஆர்தர் காட்டன், இராஜமகேந்திரபுரம் ( இராஜமுந்திரி ) அருகில் உள்ள தவளேஸ்வரத்தில் அணையினைக் கட்டினான் என்ற உண்மையையும் எடுத்துரைத்தார்.

அண்மையில் ஜெயா தொலைக்காட்சி கூட இந்த கம்போடியாவில் உள்ள கோவிலை ஒளி பரப்பியது.. இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு கூட்டம். எதற்காக? மோசில்லா பயர்பாக்ஸில் முற்றிலும் ஆங்கிலம் அறியாதவர்கள் கூட,  கணினியைத் தமிழில்-உலகளாவில் 80 மற்றும் 40 மொழிகளில் இயக்க வழி செய்துள்ள விபரங்களைப் பேசிட வியத்நாமிலிருந்து சிறப்புப் பேச்சாளராக,ARKY< MOZILLA LOCALIZATION (11on) asia  வந்திருந்தார்.


அவரிடம் வியட்நாமில் இந்துக் கோவில்கள் உள்ளனவா என்று கேட்டேன். இல்லை கம்போடியாவில்தான்  இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.


மேலும் ஒரு உண்மை கம்போடியாவில் இன்னும் மன்னராட்சிதான். அவர் பதவி ஏற்கும்போது பாடுவது திருப்பாவைதான்.


லண்டன் சர்ச்சில் தினமும் திருவாசகம் பாடப்படுவதாக திருவாவடுதுறையின் இன்றைய ஆதீனம் மேடைகளில் பேசுவார். மக்காவில் முஸ்லீம்கள் தொழுவது கல்லைத்தான் அது சிவ லிங்கம் என்றும் கூறுவார். இவை தினமணியில் முன்னர் ஒரு முறை வெளியாயிருந்தது யாரும் மறுக்கவில்லை. உண்மை தெரிந்தோர் கூறலாம்.  .

1 comments:

Kindly post a comment.