Tuesday, January 31, 2012

முதல்வருக்கு "முதல்வர்கள்' தந்தி


மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் கல்விக் குழு, கல்வி பேரவைக் கூட்டம் நடத்த வேண்டும் என, தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கல்லூரி முதல்வர்கள் அவசர தந்தி அனுப்பினர்.

அதில், துணைவேந்தர் நியமிக்கப்படாததால் கல்விக் குழு, கல்வி பேரவைக் குழுக் கூட்டம் நீண்டகாலமாக நடக்கவில்லை. புதிய பாடத்திட்ட ஒப்புதல், வரவு செலவு திட்ட அறிக்கை ஒப்புதல், தேர்வு தொடர்பான சீர்திருத்தங்கள் உடனடியாக அமல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே, பல்கலை கன்வீனர் கமிட்டி சேர்மன் மூலம் உடனடியாக இக்கூட்டங்களைக் கூட்ட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

நன்றி. tamil.yahoo.in

1 comments:

Kindly post a comment.