Saturday, October 29, 2011

இந்தியாவிற்கு மாலத்தீவு எப்போதும் நண்பனாக இருக்கும்

File:Coat of Arms of Maldives.svg


மாலத்தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருத்து எழுந்தது. இந்நிலையில் இதனை மறுத்துள்ள மாலத்தீவு அதிபர் முகமதுநஷீத் கூறுகையில், இந்தியாவிற்கு மாலத்தீவு எப்போதும் நண்பனாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

இந்தியாவை விட சிறந்த நட்பு நாடு இனிமேல் வர முடியாது என கூறினார். மேலும் அவர் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மாலத்தீவு எப்போதும் செயல்படாது. நெருக்கடி காலங்களில் மாலத்தீவுக்கு இந்தியா நிறைய உதவி அளித்துள்ளது. எதிர்காலத்திலும் இந்த உதவி தொடரும் எனவும் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.