கொழும்புத்
துறைமுகத்துக்கு இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.குதார் திடீர் பயணம் ஒன்றை
மேற்கொண்டுள்ளதாக இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதன் காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு இலங்கைக் கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.
91.1 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
.
அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற போது கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடியதாகக் கடந்தவாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன
.
ஆனால், வேவு பார்க்கும் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட எந்தவொரு சீனக் கப்பலும் கொழும்புத் துறைமுகத்துக்குள் வரவில்லை என்று இலங்கைக் கடற்படை கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் திடீரென கொழும்புக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.