Tuesday, August 30, 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் ருத்ரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை!




அனைவருக்கும் வணக்கம்! தமிழீழ விடுதலை போராட்டத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பேச்சு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சு சகல நெஞ்சங்களையும் பெட்னா அரங்கில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பியுள்ளது


தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு தமிழனும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு என்றும் துணை நிற்பான்! பிரதமரின் உரை உங்கள் கண்களை திறக்கட்டும்! நாடு கடந்த அரசு, உலக போராட்டங்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாக, இதுவரை இல்லாத வடிவில், உலக தமிழரை இணைத்து, தமிழீழ விடுதலை புலிகளின் , தமிழீழ தேசியத்தலைவரின் பாதையில் இன்னொரு படி!

இது உலக தமிழருக்கு எல்லாம் குரல் கொடுக்க பிறக்கபோகும் தமிழீழம் எங்கு தமிழனுக்கு அநீதி நிகழ்ந்தாலும் தட்டி கேட்கும் என்பதற்கு சான்றாக நாடு கடந்த தமிழீழ அரசு சிங்கள படைகள் தமிழக மீனவர்களை சுட்ட பொது உலக அரங்கு எங்கும் அதை கொண்டு சென்றது என பிரதமர் கூறியபோது எங்கள் மனங்கள் எவ்வளவு திறக்க வேண்டும் என புரிந்து கொண்டேன்!

தமிழீழம் உலகதமிழர்களின் ஒற்றைக் கனவு

0 comments:

Post a Comment

Kindly post a comment.