இலவச வீட்டுமனை கேட்டு கிராமக்கோயில் பூசாரிகள் மற்றும் பூ கட்டுவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பது: கரூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கிராமக்கோயில் பூசாரிகள் மற்றும் பூ கட்டுவோர் உள்ளோம். எங்களுக்கென்று சொந்த வீடு கிடையாது. பூ கட்டுதல் உள்ளிட்ட சொற்ப வருவாயில் குடும்பம் நடத்த இயலாத நிலையில் உள்ள எங்களால் சொந்த நிலம் வாங்கவோ, வீடு கட்டவோ இயலாது.
எனவே நாங்கள் வீடுகட்டிக் குடியிருக்க இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
நன்றி :-தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.