Monday, August 29, 2016

வாகன சோதனையில் 76 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 76 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு விடிய, விடிய போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று நடைபெற்ற போலீசாரின் இரவு வாகன சோதனையில் பழைய குற்றவாளிகள் 111 பேர், குற்றப் பின்னணி உடைய 4 பேர் பிடிபட்டனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 76 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 381 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்

மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.