Saturday, November 7, 2015

ரெயில் முன்பதிவு டிக்கெட் ரத்து கட்டணம் இரு மடங்காக உயர்கிறது.!



ரெயில் முன்பதிவு டிக்கெட் ரத்து கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. 
இது 12–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரத்து கட்டணம் உயர்வு

ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்து விட்டு, அந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தை திரும்பப்பெறுவதற்கு ஒரு தொகையை ரெயில்வே பிடித்து வருகிறது.

டிக்கெட்டை ரத்து செய்வதற்கான இந்த தொகையை 12–ந் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தி ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளை ரெயில்வே கொண்டு வருகிறது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

4 மணி நேரத்துக்கு முன் ரத்து

* ரெயில் புறப்பட்டு சென்ற பிறகு, முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ய இனி முடியாது. ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்ய வேண்டும்.

* ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்வதற்கு, தற்போது படுக்கை வசதியுடன் கூடிய 2–ம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது ரூ.60 ஆக உயர்கிறது.

* 3 அடுக்கு ஏ.சி. வகுப்பு டிக்கெட் ரத்துக்கான கட்டணம் ரூ.90–ல் இருந்து ரூ.180 ஆக அதிகரிக்கிறது.

ஆர்.ஏ.சி. டிக்கெட்

* ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளைப் பொறுத்தமட்டில், ரெயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். அதன்பிறகு ரத்து செய்ய முடியாது.

* இதில் படுக்கை வசதியுடன் கூடிய 2–ம் வகுப்பு டிக்கெட்டுக்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இனி அது ரூ.120 ஆக உயர்கிறது.

* 2 அடுக்கு ஏ.சி. வகுப்பு டிக்கெட் ரத்துக்கான கட்டணம் ரூ.100–ல் இருந்து ரூ.200 ஆக அதிகரிக்கிறது.

* ரெயில் டிக்கெட் ரத்து கட்டண உயர்வு, ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதியை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்படுகிறது.

* சாதாரண டிக்கெட் (முன் பதிவு இல்லாதது) வாங்குகிற கவுண்ட்டர்களில், ரெயில் டிக்கெட் ரத்துக்கான பணத்தை பெற அனுமதிக்கவும் ரெயில்வே முடிவு செய்துள்ளது.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.