Thursday, November 19, 2015

விபச்சார வழக்கில் கிஸ் ஆப் லவ் தம்பதிகள் கைது

g Service
sகேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தியதாக கூறி, கிஸ் ஆப் லவ் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவி ரஷ்மி ராயர் ஆகியோர் கைது செய்யப்படனர்.
 

 
காதல் இளம் ஜோடிகளை மிரட்டி வரும் நபர்களுக்கு எதிராக தொடங்கப்பட்டதுதான் கிஸ் ஆப் லவ் பிரச்சாரம். குறிப்பாக காதலர்களை தாக்குபவர்களை கண்டித்து பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தமிடும் பிரச்சாரத்தை தொடங்கியது கிஸ் ஆப் லவ் பிரச்சாரம் அமைப்பு. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. ஆனாலும் இவர்கள் அதையும் தாண்டி பிரசாரம் செய்தனர்.
 
இந்த நிலையில், இதன் ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி நாயர் மற்றும் பிரபல ரவுடி அக்பர் ஆகியோர் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, காவல்துறை சோதனையில் ராகுல் பசுபாலன், அவரது மனைவி ரஷ்மி மற்றும் பிரபல ரவுடி அக்பர் உள்பட 8 பேர் கைது செய்தனர். இதில் ஒரு சிறுமியும் அடக்கம். அந்த சிறுமி பெங்களூரில் இருந்து வந்து சமீபத்தில் இதில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 http://tamil.webdunia.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.