புயல் அபாயம் இல்லை: மேலடுக்குச் சுழற்சியால் உள் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
By சென்னை,
First Published : 19 November 2015 12:37 AM IST
புதிய மேலடுக்கு சுழற்சியால், கோவை, நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் தற்போது தமிழகத்துக்கு புயல் அபாயம் ஏதும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிகழ்வின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும். குறிப்பாக, உள் மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்ப்பார்க்கலாம்.
அதாவது, நீலகிரி, கோவை, விருதுநகர் போன்ற தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை பெய்யும் என்றார்.
புயல் ஆபத்து இல்லை: வங்கக் கடலில் புதிதாக தீவிர புயல் உருவாகி வருவதாகவும் அது தமிழகத்தை தாக்கும் என்று வெளியாகி உள்ள செய்தி குறித்து இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தற்போது புயல் தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.
மழை நிலவரம்(மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 100 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, விருதுநகரில் 90 மி.மீ, ராஜபாளையத்தில் 80 மி.மீ, கோவிலாங்குளம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், இலுப்பூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், ராமநாதபுரம் தொண்டி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, தூத்துக்குடி மாவட்டம் சுரங்குடி ஆகிய இடங்களில் 60 மி.மீட்டர் மழை பதிவானதாக எஸ்.ஆர். ரமணன் தெரிவித்தார்.
மேலும் தற்போது தமிழகத்துக்கு புயல் அபாயம் ஏதும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிகழ்வின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும். குறிப்பாக, உள் மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்ப்பார்க்கலாம்.
அதாவது, நீலகிரி, கோவை, விருதுநகர் போன்ற தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை பெய்யும் என்றார்.
புயல் ஆபத்து இல்லை: வங்கக் கடலில் புதிதாக தீவிர புயல் உருவாகி வருவதாகவும் அது தமிழகத்தை தாக்கும் என்று வெளியாகி உள்ள செய்தி குறித்து இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தற்போது புயல் தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.
மழை நிலவரம்(மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 100 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, விருதுநகரில் 90 மி.மீ, ராஜபாளையத்தில் 80 மி.மீ, கோவிலாங்குளம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், இலுப்பூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், ராமநாதபுரம் தொண்டி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, தூத்துக்குடி மாவட்டம் சுரங்குடி ஆகிய இடங்களில் 60 மி.மீட்டர் மழை பதிவானதாக எஸ்.ஆர். ரமணன் தெரிவித்தார்.
தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.