Sunday, March 2, 2014

புதுடெல்லி :‘ரா’ அதிகாரி மனைவி, பிள்ளைகளை கொலை செய்து தூக்குப்போட்டு சாவு

மனைவி, பிள்ளைகளை கொலை செய்து மத்திய உளவு அதிகாரி தூக்குப்போட்டு சாவு டெல்லியில் பரபரப்பு 

மனைவி, பிள்ளைகளை கொலை செய்து விட்டு, மத்திய உளவு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ரா’ அதிகாரி

வெளிநாடுகள் மற்றும் அணு திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் உளவு அமைப்பு ‘ரா’ ஆகும். இதில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்தவர் அனன்யா சக்கரவர்த்தி (வயது 52). இவரது மனைவி ஜெய்ஸ்ரீ. இந்த தம்பதியருக்கு அர்ணாப் (17) என்று ஒரு மகன்; திஷா (12) என்று ஒரு மகள்.அனன்யா சக்ரவர்த்தி குடும்பத்தினருடன் தெற்கு டெல்லியில் சாதிக் நகரில் அமைந்துள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.

குடும்பமே பலி

இந்த நிலையில் நேற்று அவர் மர்மமான முறையில் தனது இல்லத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி ஜெய்ஸ்ரீ மற்றும் பிள்ளைகள் அர்ணாப், திஷா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் தரையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன.

அனன்யா சக்ரவர்த்தி தனது மனைவி, பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

பின்னணி என்ன?

இத்தகைய விபரீத முடிவினை அனன்யா சக்ரவர்த்தி எடுத்ததின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக அவர் கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கவில்லை.சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, அனன்யா சக்ரவர்த்தி, மனைவி, பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘‘சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம். சம்பவத்தின் சரியான காரணம் இனிதான் தெரிய வரும்’’ என்றனர். இந்த சம்பவம், டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.