Wednesday, February 26, 2014

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உதவுங்கள்

New post on யெஸ்.பாலபாரதி

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உதவுங்கள்

by யெஸ்.பாலபாரதி
ramesh

நண்பர்களே,
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் இன்று மாலை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஒருபக்கம் உடல் செயலிழந்துள்ளதாகவும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி செய்யப்படுவதாகவும் கவிஞர் மனோமோகன் தெரிவித்தார். மேல்சிகிட்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். புது எழுத்து ரூ.2,000/-ஐ அனுப்பி உதவியைத் துவக்கியிருக்கிறது. தனியரான ரமேஷிற்கு இந்த சந்தர்பத்தில் அனைவரும் முன் வந்து உதவ வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறது.
மேலும் புது எழுத்து வெளியீடான ரமேஷின் பெருந்தொகைக் கவிதை நூலின் விற்பனைத் தொகை முழுவதையும் ரமேஷின் மருத்துவ செலவிற்கு வழங்கவும் புது எழுத்து முடிவு செய்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.500/- நன்கொடை வழங்க முன் வருபவருக்கு மூன்று தொகுப்புகள் அடங்கிய இந்நூல் தபால்/கூரியரில் அனுப்பித் தரப்படும்.
உதவுங்கள் என வேண்டுகிறது புதுஎழுத்து.
pudhu ezuthu,
a/c no. 867 999 265
Indian Bank,
KAVERIPATTINAM
IFSC CODE NO : IDIB000K031

யெஸ்.பாலபாரதி | 10:33 பிப இல் பிப்ரவரி 25, 2014 | URL: http://wp.me/p6FiU-oa

1 comments:

  1. ஒரு அன்பர் ரூ.1000/- வங்கியில் செலுத்திய தகவல் கிடைத்தது. அவரைத் தொடர்வோம். படைப்பாளிக்கு உதவுவோம்.

    ReplyDelete

Kindly post a comment.