Thursday, February 27, 2014

தி.மு.க.வின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன:மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி; கூட்டணிக்கு இனி எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது" என்று தி.மு.க.பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியபோது ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

 வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய அளவிலும், மாநில அளவிலும் சில கட்சிகள் தங்களது பணிகளை தொடங்கியுள்ளன. அதிமுக 40 தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தமிழக முதல்வர் தனது பிரசார தேதியை அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையிலிருந்து வாய்தா வாங்கவே இந்த தேர்தல் பிரசாரத் தேதியை அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக .ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 4,806 பேர் திமுகவில் இணைந்தனர்.

இந்நேரம் .காம்  


0 comments:

Post a Comment

Kindly post a comment.