Sunday, December 1, 2013

மருத்துவர் இம்ரான் அஹம்மது பெங்களூருவில் கைது

கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பத்திரிகையாளர்களைக் கொலை செய்து, இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாக மருத்துவர் இம்ரான் அஹம்மது (எ) இம்மு பாய்  துபையில் குடியேறி தலைமறைவாக இருந்து வந்தார்.  இவர் போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூருவுக்கு வந்திருப்பதாகச்செய்திகள் நிலவின.அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர்  ( National Investigation Agency ) பெங்களூருவில் வியாழக்கிழமை கைது செய்தனர். சனிக்கிழமையன்று விசாரணைக்காக ஹைதராபாதுக்கு  அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

2012, ஆகஸ்ட் 29-ஆம் தேதி பெங்களூரு ஹுப்ளியில் 12 பேரையும், செப்டம்பர் 2-ஆம் தேதி மேலும் ஒரு நபரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர்..மேலும் சிலர்  வளைகுடா நாடுகளில் பதுக்கியிருப்பதாகவும்  விசாரணையில் புலப்பட்டது. பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  இந்த வழக்கில் தொடர்புடைய . இவர்கள் அனைவரும் ஆயுதங்களையும், திருடு போன வாகனங்களையும் சேகரித்ததாகவும் கூறப்படுகின்றது. அதன் தொடர்ச்சியே  டாக்டர் இம்ரான் அஹம்மது தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

Kindly post a comment.