Sunday, December 1, 2013

இலங்கை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தீ விபத்து


இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் மையம் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சாம்பலானது.

"மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது, தற்போது தீ அணைக்கப்பட்டு விட்டது' என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜீத் ரோஹானா தெரிவித்தார்.

"தீ விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அதேசமயம், உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து விட்டன' என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் பண்டாரநாயகே நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த மையத்தில், காமன்வெல்த் மாநாடு நடைபெற்றபோது, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.


நன்றி ;- தினமணி , 01-12-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.