Wednesday, November 13, 2013

சென்றுகொண்டிருக்கிறது வென்றுகொண்டிருக்கிறது வாழ்வின் போக்கு -வையவன்




 இனிதினும் இனிது

இனியதோடு இரு
இனிதாய் உறங்கு
இறுதிக்கு அஞ்சாது
உறுதியாய் இரு.
இனி மாறும் எல்லாம்
இருக்கும் காலம்
போகும் யார்
தடுத்து நிற்கும்
விதியின் வேகம் ?
ஈனக்கவலை உதித்தால்
உதறிப் போடு .
பிறந்தோம் இருந்தோம்
இதனினும் பெரிய
இனியது எது ?
பறவையின் பாட்டும்
காற்றின் கீதமும்
கேட்பதைக் கவனி.
சென்றுகொண்டிருக்கிறது
வென்றுகொண்டிருக்கிறது
வாழ்வின் போக்கு 

-வையவனின் கவிதைகள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.