அமெரிக்காவைச் சேர்ந்த லார்ஸ் பீட்டர்
ஹான்சென், யூஜீன் ஃபாமா மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோர்
பொருளதாரப் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மூலதனச் சந்தையின் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் அளித்த வழிகாட்டுதல்களுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான நடுவர் குழு தெரிவித்துள்ளது.
""சொத்துகளின் தற்போதைய மதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு இவர்கள் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளனர். இவர்களது வழிகாட்டுதல்கள், ஒரு வகையில் சந்தை அபாயங்களின் மாறுபடும் போக்கு மற்றும் அபாயங்களை அணுகும் போக்கு ஆகிவற்றைச் சார்ந்தும், இன்னொரு வகையில் சந்தை குறித்த கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மற்றும் சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைச் சார்ந்தும் சொத்துக்களை மதிப்பிடத் துணை புரிகின்றன'' என்று இவர்களைத் தேர்ந்தெடுத்த ராயல் ஸ்வீடன் அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஆல்பிரட் நோபல் தனது உயிலில் குறிப்பிடாமல் வழங்கப்படும் ஒரே நோபல் பரிசான பொருளாதாரத்துக்கான பரிசு 1969-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டின் மத்திய வங்கி தனது 300-வது ஆண்டுவிழாவில் இந்தப் பரிசை அறிமுகப்படுத்தியது.
கடந்த பத்து வருடங்களாக இந்தப் பரிசைப்பெற்ற 20 பேரில், 17 பேர் அமெரிக்கர்கள். சென்ற ஆண்டு அமெரிக்காவின் ஆல்வின் ரோத் மற்றும் லாயிட் ஷாப்லேவுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1998-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த அமர்தியா சென் இந்தப் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
லார்ஸ் பீட்டர் ஹான்சென்
60 வயதான இவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நோபல் பரிசுக்கு முன்னதாக 2010-இல் பி.பி.வி.ஏ அறிவுஜீவிகள் விருது, 2008-இல் சி.எம்.ஈ குழுமப் பரிசு, 2006-இல் நெம்மர்ஸ் பரிசு ஆகியவற்றை இவர் வென்றுள்ளார்.
யூஜீன் ஃபாமா
ஏற்கெனவே பொருளாதாரத்துக்கான ஜெர்மன் வங்கி பரிசு, மோர்கன் ஸ்டான்லீ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள யூஜீன், 1939-இல் பிறந்தவர். இவரும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ராபர்ட் ஷில்லர்
அமெரிக்காவின் கனெட்டிகட் மாகாணத்திலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2009-இல் பொருளாதாரத்துக்கான ஜெர்மன் வங்கிப் பரிசைப் பெற்றுள்ள இவருக்கு வயது 67.
தினமணி :- 15-10-2013
மூலதனச் சந்தையின் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் அளித்த வழிகாட்டுதல்களுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான நடுவர் குழு தெரிவித்துள்ளது.
""சொத்துகளின் தற்போதைய மதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு இவர்கள் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளனர். இவர்களது வழிகாட்டுதல்கள், ஒரு வகையில் சந்தை அபாயங்களின் மாறுபடும் போக்கு மற்றும் அபாயங்களை அணுகும் போக்கு ஆகிவற்றைச் சார்ந்தும், இன்னொரு வகையில் சந்தை குறித்த கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மற்றும் சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைச் சார்ந்தும் சொத்துக்களை மதிப்பிடத் துணை புரிகின்றன'' என்று இவர்களைத் தேர்ந்தெடுத்த ராயல் ஸ்வீடன் அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஆல்பிரட் நோபல் தனது உயிலில் குறிப்பிடாமல் வழங்கப்படும் ஒரே நோபல் பரிசான பொருளாதாரத்துக்கான பரிசு 1969-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டின் மத்திய வங்கி தனது 300-வது ஆண்டுவிழாவில் இந்தப் பரிசை அறிமுகப்படுத்தியது.
கடந்த பத்து வருடங்களாக இந்தப் பரிசைப்பெற்ற 20 பேரில், 17 பேர் அமெரிக்கர்கள். சென்ற ஆண்டு அமெரிக்காவின் ஆல்வின் ரோத் மற்றும் லாயிட் ஷாப்லேவுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1998-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த அமர்தியா சென் இந்தப் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
லார்ஸ் பீட்டர் ஹான்சென்
60 வயதான இவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நோபல் பரிசுக்கு முன்னதாக 2010-இல் பி.பி.வி.ஏ அறிவுஜீவிகள் விருது, 2008-இல் சி.எம்.ஈ குழுமப் பரிசு, 2006-இல் நெம்மர்ஸ் பரிசு ஆகியவற்றை இவர் வென்றுள்ளார்.
யூஜீன் ஃபாமா
ஏற்கெனவே பொருளாதாரத்துக்கான ஜெர்மன் வங்கி பரிசு, மோர்கன் ஸ்டான்லீ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள யூஜீன், 1939-இல் பிறந்தவர். இவரும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ராபர்ட் ஷில்லர்
அமெரிக்காவின் கனெட்டிகட் மாகாணத்திலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2009-இல் பொருளாதாரத்துக்கான ஜெர்மன் வங்கிப் பரிசைப் பெற்றுள்ள இவருக்கு வயது 67.
தினமணி :- 15-10-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.