Tuesday, October 15, 2013

போலீஸார் நகைகளை பறித்துக் கொண்டனர் : கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் புகார்



கூட்ட நெரிசலின் போது எங்களை அடித்து உதைத்த காவல்துறையினர், கழுத்தில் இருந்த தாலி உட்பட அனைத்து நகைகளையும் பறித்துக் கொண்டதாக மத்திப் பிரதேசத்தில் துர்கா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் கூறியுள்ளனர்.

ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் துர்கா தேவி கோயிலில் ஞாயிறன்று நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 110 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், காவலர்கள் கூட்ட நெரிசலின் போது தங்களை அடித்து உதைத்து காது, கழுத்து, கைகளில் இருந்த நகைகளைப் பறித்துக் கொண்டதாகவும், தாலியைக் கூட விட்டு வைக்கவில்லை என்றும் தொலைக்காட்சி ஒன்றில், நெரிசல் சம்பவம் நிகழ்ந்தது குறித்து பேசிய போது கூறியுள்ளனர்.      

தினமணி-15-10-2013                                                                                                                                    





0 comments:

Post a Comment

Kindly post a comment.