CHRLS REYNOLDS 86 வயதுடையவர். சென்ற வாரம் அவருக்கு PAYPAL - மூலம் வந்த மின்னஞ்சலின் கணக்குப்படி
$ 92,233, 720, 368, 547, 800 ( $ 92 QUADRILLION ) .-என்பதைக் கையிருப்பாகக் காட்டி அவரை உலகக் கோடீஸ்வரராக்கிவிட்டது. அவர் அதிர்ச்சியும் வியப்பும்
அடைந்தார்..
பத்தாண்டுகளாக PAYPAL கணக்கைப் பயன்படுத்திவருவதாகவும், மாதத்திற்கு
$100 -பணத்திற்குமேல் செலவு செய்ததில்லை என்றும் கூறினார்.
PAYPAL நிர்வாகம் தன் தவறை ஒப்புக்கொண்டு, தவற்றினைச் சரிசெய்தது.
கணக்கில் மட்டும் PAYPAL தவறின் காரணமாக ஏற்பட்ட உலகக் கோடீஸ்வரர் என்ற நிலையும் நீங்கியது.
நியூயார்க் செய்தியாக நமக்குத் தருவது, TIMES OF INDIA, 18-07- 2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.