Saturday, July 20, 2013

சீனா: பீஜிங் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு - பயணிகள் அலறியடித்து ஓட்டம்


சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று மாலை குண்டு வெடித்தது. குண்டுவெடித்த இடத்தில் பயங்கர புகை மண்டலம் ஏற்பட்டதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான விவரங்களின்படி, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஒருவன் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த அந்த மர்ம நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.                                                                                                        

நன்றி :-மாலைமலர், 20-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.