Sunday, June 9, 2013

செருப்பு அணிந்ததற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனுக்குத் தண்டனை !

 


செருப்பு அணிந்ததற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனுக்குத் தண்டனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடமாடிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனைத் தலையில் செருப்பை சுமக்கச் செய்து தண்டனை வழங்கிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் 6அம் வகுப்பு பயிலும் அருண் என்ற மாணவன் அவனது நண்பர்களுடன் தேர்வு முடிவுகள் குறித்து அறிய  பள்ளிக்குச் சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காகத் திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பைத் தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் வருத்தமடைந்த மாணவன், அவனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளான். நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்குக் கொலை செய்து விடுவதாக அவர் வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் நிலமாலை  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது       



 புதிய தலைமுறை தரும் தகவல் இது.

தினமணியில் நிலமாலையின் தந்தை பதிவு ராஜா, சகோதரர் அக்னி  ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

தினமணி :- 09-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.