Tuesday, June 11, 2013

”எல்லோரும் இந்நாட்டு மன்னர்”- பாரதியின் வாக்கை மெய்ப்பித்த மத்தியப்பிரதேச முதல்வருக்கு ஐ.நா.வின் பரிசு ! ( 2012 )


”எல்லோரும் இந்நாட்டு மன்னர்”- பாரதியின் வாக்கை மெய்ப்பித்த மத்தியப்பிரதேச முதல்வருக்கு ஐ.நா.வின் பரிசு ! ( 2012 )

ஒவ்வொரு ஆண்டும் , ஜுன் 2 தேதி ”உலக பொதுச் சேவை தினமாகக்” கொண்டாடப்படுகிறது. அப்பொழுது ஐக்கிய நாடுகள் சபை, சிறந்த பொதுச் சேவை வழங்கிய ஒரு நாட்டின் நிர்வாகிக்கோ, அரசுத் துறைக்கோ, அந்த ஆண்டிற்கான “சிறந்த பொதுச்சேவை அளித்தவர்” என்ற விருதை வழங்குகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு, உலகளவில், சிறந்த பொதுச்சேவை அளித்ததற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விருது, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான அரசுக்கு அளிக்கப்பட்டது.

பொதுச் சேவை உத்தரவாதச் சட்டம் 2010 எனும் புரட்சிகரமான சட்டத்தை இயற்றி, 336 பொதுச்சேவை மையங்களை மாநிலம் முழுவதும் அமைத்து, 1.25 கோடி விண்ணப்பங்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து, மக்களை உண்மையாகவே மாநிலத்தின் மன்னர்களாக்கிய சாதனைக்காக உலகளாவிய இந்த விருது வழங்கப்பட்டது.                                                                                                     
 
நன்றி :- அ.நாராயணன், ஆசிரியர், பாடம், editor@padam.in   
 
WWW.PAADAM.IN.                                                                                  


0 comments:

Post a Comment

Kindly post a comment.