Wednesday, May 15, 2013

பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் மதுரை அண்ணாச்சியை வாழ்த்துவோம் !



பச்சைக்குறி காட்டப்பட்ட இந்தப் பெரியவரை நாம் போற்ற வேண்டும், ஏனென்றால், மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார், அவரிடம் சாப்பாடு வெறும் ரூபாய் 10 மட்டுமே! (சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்) இதில் அடங்கும்,மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6 க்கு விற்பனை செய்தார்,

கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10 க்கு விற்பனை செய்து வருகிறார்.நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்... இப்ப சொல்லுங்க நன்பர்களே...(இதை SHARE செய்து மத்தவங்களுக்கும் சொல்லுங்கப்பா.)

நன்றி :-prasannam narayanaswamy      



0 comments:

Post a Comment

Kindly post a comment.