கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே...'' என்று தொடங்கும் இராமலிங்க
வள்ளலாரின் பாட்டைப் படிக்கும்போது மனம் ஆனந்த பரவசமடைகிறது. அசோகச்
சக்கரவர்த்தி சாலையோரங்களில் நிழல்தரும் மரங்களை நட்டார் என்பதைத் துவக்கப்
பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்தது பசுமரத்து ஆணிபோல் இன்றும்
நினைவில் நிலைத்துள்ளது.
எனக்கும் மரம் வளர்க்க ஆசைதான்; வீட்டு முன்னால் 5 புங்க மரக்கன்றுகளை நட்டு தினந்தோறும் தண்ணீர்விட்டு வளர்த்து பராமரித்து வந்தேன். மரங்களும் நன்றாக வளர்ந்து தெருவழியாகச் செல்வோருக்கு மிக அருமையான நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வளர்ந்த மரங்களின் கிளைகள் மின் கம்பிகளில் மோதியதால் மின்வாரிய ஊழியர்கள் கிளைகளை வெட்டுவதாகக் கூறி மரங்களையே மொட்டை அடித்துவிட்டனர். பிறகு மரங்களை ஒரேயடியாக வெட்ட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனக்கு மட்டும் அல்ல வீடுகளின் முன் மரம் வளர்க்க விரும்பும் லட்சோப லட்ச ஆர்வலர்களுக்கும் இதே பிரச்னைதான்.
ஆனால் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவுமே இல்லை.
சமீபத்தில் சென்னையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டின் முன்புறச் சாலையில் இரு மருங்கிலும் பல ஜாதி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அண்ணாந்து பார்த்தேன் மின் கம்பிகள் இல்லை. சாலை ஓரத்தில் நிலத்தடியில் கேபிள் பதிக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள கேபின்களிலிருந்து வீடுகளுக்கு நிலத்தடியில் கேபிள்கள் மூலம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் மரங்கள் பிழைத்தன.
இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பயனுள்ள, நல்ல மரங்களை நட்டு, வளர்த்து, பராமரிக்க முடியும். அதன் மூலம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மரங்களைப் புதிதாக நட்டு வளர்க்க முடியும். இத்திட்டத்தைச் செயலாக்க "அதிகப்படியான நிதி' தேவைப்படும். ஆனால் மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் பலன்களைக் கணக்கிட்டால் இந்தக் கூடுதல் செலவு தாங்கக்கூடியதே
.
மழை நீர் சேகரிப்பு திட்டம், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகிய இயற்கை சார்ந்த திட்டங்களுடன், மரம் வளர்க்க உதவும் தரைக்கடி கேபிள் மின் இணைப்பு திட்டத்தையும் தமிழக முதல்வர் மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு இயற்கை வளத்தைக் கூட்ட முன்வர வேண்டும்.
எனக்கும் மரம் வளர்க்க ஆசைதான்; வீட்டு முன்னால் 5 புங்க மரக்கன்றுகளை நட்டு தினந்தோறும் தண்ணீர்விட்டு வளர்த்து பராமரித்து வந்தேன். மரங்களும் நன்றாக வளர்ந்து தெருவழியாகச் செல்வோருக்கு மிக அருமையான நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வளர்ந்த மரங்களின் கிளைகள் மின் கம்பிகளில் மோதியதால் மின்வாரிய ஊழியர்கள் கிளைகளை வெட்டுவதாகக் கூறி மரங்களையே மொட்டை அடித்துவிட்டனர். பிறகு மரங்களை ஒரேயடியாக வெட்ட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனக்கு மட்டும் அல்ல வீடுகளின் முன் மரம் வளர்க்க விரும்பும் லட்சோப லட்ச ஆர்வலர்களுக்கும் இதே பிரச்னைதான்.
ஆனால் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவுமே இல்லை.
சமீபத்தில் சென்னையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டின் முன்புறச் சாலையில் இரு மருங்கிலும் பல ஜாதி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அண்ணாந்து பார்த்தேன் மின் கம்பிகள் இல்லை. சாலை ஓரத்தில் நிலத்தடியில் கேபிள் பதிக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள கேபின்களிலிருந்து வீடுகளுக்கு நிலத்தடியில் கேபிள்கள் மூலம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் மரங்கள் பிழைத்தன.
இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பயனுள்ள, நல்ல மரங்களை நட்டு, வளர்த்து, பராமரிக்க முடியும். அதன் மூலம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மரங்களைப் புதிதாக நட்டு வளர்க்க முடியும். இத்திட்டத்தைச் செயலாக்க "அதிகப்படியான நிதி' தேவைப்படும். ஆனால் மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் பலன்களைக் கணக்கிட்டால் இந்தக் கூடுதல் செலவு தாங்கக்கூடியதே
.
மழை நீர் சேகரிப்பு திட்டம், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகிய இயற்கை சார்ந்த திட்டங்களுடன், மரம் வளர்க்க உதவும் தரைக்கடி கேபிள் மின் இணைப்பு திட்டத்தையும் தமிழக முதல்வர் மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு இயற்கை வளத்தைக் கூட்ட முன்வர வேண்டும்.
நன்றி :- கருத்துக்களம், தினமணி, 06-05-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.