Saturday, April 6, 2013

அணுகுண்டை விட ஆபத்தானது , காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் முயற்சி !

 சென்ற  ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஆயுதம் 

செய்வோம் என்ற நிகழ்ச்சியில் காற்றிலுள்ள ஈரப் பதத்திலிருந்து குடி நீர்

தயாரிக்கும் முறையினை ஒரு தனியார் நிறுவனம் செயல் முறை

விளக்கத்துடன் காட்டினார்கள். இது இயற்கை உணவு உலகம் போன்ற சமூக

ஆர்வலர்களின் மனதை சற்று பாதித்து விட்டது என்று சொல்லலாம்.

இவர்களின் கோரிக்கை நியாயமானது என்றால் பொன் முட்டையிடும்

வாத்தினை பேராசை காரணமாக அறுக்கும் செயலுக்கு ஒத்ததாகும்.

மானுட நலனுக்குப் புறம்பான இச்செயல்  குறித்து

இயற்கை ஆர்வலர்கள் தங்களின்  கருத்துகளைப் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளனர்.

அணுகுண்டை விட ஆபத்தான  ஆயுதம் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை

 உறிஞ்சும் முயற்சி :


நம் வருங்கால சந்ததியினருக்கு காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையாவது

விட்டு வைக்க வேண்டும்  என்பதே  இந்தப் பதிவின் நோக்கம்.

காற்றில் இருக்கும் ஈரப்பதம் என்றால் என்ன ?

தாவரங்களும் மனிதர்களுக்கும் தண்ணீர் ( ஊற்றினால்) குடித்தால் மட்டும்

போதும் உடலில் நீர்  சத்து வந்துவிடும் என்று நினைக்கிறோம் ஆனால்

அதையும் மீறி,  காற்றில் இருக்கும் ஈரப்பதம்  மூலம் தான் தாவரங்களும் பல

பெரிய மரங்களும் கூட  தண்ணீர் இல்லாமல் இருக்கின்றன. காற்றிலிருந்து

கிடைக்கும் ஈரப்பதத்தை  உறிஞ்சி எடுத்துக்கொண்டுதான்  அவைகள்

வாழ்கின்றன.

அறிவியல் வளர்ச்சி ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் சில

நேரங்களில் அவைகள் நமக்கு  மட்டுமல்ல நம் வருங்கால  வாரிசுகளுக்கும்

பெரும் பாதிப்பை உண்டுபண்ணுவதாகவே  அமைகின்றன.

அந்த வகையில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிஎடுத்து அதை

தண்ணீராக  மாற்றில்  கொடுக்க வந்திருக்கும் இயந்திரத்தால் நாமும் நம்

சமூகமும் அடையும் நன்மை தீமைகள்  பற்றிப்  பார்ப்போம்.

நன்மைகள்.

01.  பாலைவனத்தில் கூட இந்த இயந்திரத்தின் உதவியால் காற்றில் இருக்கும்

       ஈரப்பதத்தைத்  தண்ணீராக மாற்ற முடியும்.

02. சுத்தமான தண்ணீர் கிடைக்கும்.

03.  மின்சாரத்தின் உதவியுடன் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும்

      வைத்துத்  தண்ணீரைப்   பெற்றுக் கொள்ளலாம்.

தீமைகள் :

01. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் அருகில் இருக்கும் மரம்

      மற்றும் செடிகளின் வளர்ச்சி  முழுமையாகப் பாதிக்கப்படும். இதே நிலை

      தொடர்ந்தால் அவை காய்ந்து போகக்கூட வாய்ப்புகள்  அதிகம் உண்டு.

02. மனிதனின் சருமம் மற்றும் தோல் வறண்டு போக வாய்ப்புகள் அதிகம்.

03. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைவதால் மழை வளம் குறையும்.

04.  ஒரு ஊரில் 100 இயந்திரம் இருப்பதாக வைத்துக்கொண்டால் காற்றில்

       இருக்கும் ஈரப்பதம் மிக  மிகச் சிறிய அளவில் தான் குறையும் , ஆனால்

       நகரத்தை எடுத்துக்கொண்டால் ஆயிரம் அல்லது  இலட்சம் இயந்திரங்கள்

       பயன்படுத்தப்பட்டால்  நகரம் நரகமாக மாறி பாலவனமாகவே மாறிவிடும்..

ஆரம்ப காலக் கட்டத்திலேயே இது போன்ற இயந்திரங்களைத் தடை

செய்வதற்கு  அரசாங்கமும்  மக்களும் முயற்சி செய்ய வேண்டும்.

இது போன்ற இயந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான படமும் ,

காற்றில் ஈரப்பதம்  குறைவதால் மனிதருக்கு ஏற்படும் பிரச்சினைகள்

என்னென்ன என்பதை அடுத்த படமும் தெளிவாக  எ4டுத்துக் காட்டுகின்றது.


 


மேற்கண்ட விடயமாக இயற்கை உணவு உலகம் உடனடியாகத் தனது ஆதங்கக் குரலைப் புதிய தலை முறை தொலைக் காட்சியில் பதிவு செய்தது.

அதன் விவரத்தையும் அதற்கு புதிய தலை முறைத்  தொலைக் காட்சி அளித்துள்ள பதிலும் கீழே தரப்பட்டுள்ளது. 

இந்தப் பதிவு குறித்து நம் வாசகர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யலாம்.

புதியதலைமுறை நிர்வாகத்தினருக்கு வணக்கம் ,

இன்று ( 31-03-2013) பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பான ”ஆயுதம் செய்வோம்” நிகழ்ச்சியில் “ ஒரு தனியார் நிறுவனம்,, காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்து குடிநீராக்கும் மிஷின் பற்றி விரிவாக கூறி இருந்தது. இது விஷயமாக இயற்கைக்கு மாற்றமாக ஏற்படும் சில  பாதகங்களை,

  சில அடிப்படையான விசயங்களுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. காற்றிலுள்ள ஈரப்பதத்தினால் தான் தாவரங்களும் மரங்களும் தண்ணீர் 

இல்லாமல் கூடப் பல  நாட்கள் உயிர் வாழ்கின்றன. இப்படி நாம் காற்றிலுள்ள 

ஈரப்பத்தை எடுப்பது இயற்கைக்கும் மரங்களுக்கும் செய்யும் துரோகம் 

அல்லவா ? மரம் செடிகொடிகளே இல்லாவிட்டால் மனிதனின்

நிலை என்ன ?

2. வெயில் காலத்தில் கூட காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினால் தான் நம் உடல் கருவாடு

ஆகாமலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் இருக்கிறது. இப்படி காற்றிலுள்ள  ஈரப்பதத்தை ஊறிஞ்சுவதால் என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை.

3. கருவேல மரம் என்ற ஒரு மரம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக ஊறிஞ்சுவதால் வெளிநாடுகளில் இம்மரத்தை முழுமையாகத் தடை செய்தே விட்டனர்.  என்பது இப்போது நமக்குத்தெரியும்  காற்றிலுள்ள ஈரப்பத்தின் முக்கியத்துவம்.

4. அத்துடன் ஈரப்பதத்தை தண்ணீராக்கி கொடுக்கும் மிஷின் பற்றி கூறியவர் பல பெரிய நிறுவனங்கள் அதிகமான லிட்டர் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றனர் ஆதலால் நாங்கள் பல மிஷின்களை ஒன்றிணைத்து அவர்கள் தேவைக்கான தண்ணீர் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று
கூறினார். நகரத்தில் இது போன்ற மிஷின்கள் வந்தால் கண்டிப்பாக நகரம் பாலைவனம் ஆகிவிடும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

5. ஒருவர் தும்மல் செய்யும் போது 40 ஆயிரம் நுன்னிய நச்சுக்கிருமிகள் வெளிவருவதாகச் சொல்கின்றனர். இந்த நச்சுக்கிருமிகள் காற்றில் இருப்பதால் , அந்த காற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதால் நேரடியாக நச்சுக்கிருமிகளை நம் உடலில் செல்லும் வாய்ப்பும் ஏற்படும் அல்லவா ?
கிருமிகளைச்சுத்தப்படுத்திக்  கொடுப்பதாக இருந்தாலும் நுண்கிருமிகளை எந்த அளவிற்குக் கொல்லும்  என்பதை ஆய்வுக்குட்படுத்தித்தான் பார்க்க முடியும்.

அரசாங்கமும் உங்களைப்போன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட மீடியாக்களும் இதனால்  மக்களுக்கு ஏற்படும் பாதகங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் நம் நோக்கம். 

இது போன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் போதும் இன்னும் கவனமாகச் செயல்பட்டால்  மேலும் சிறப்பாக இருக்கும்.


இதற்கு புதிய தலைமுறை தொலைக் காட்சி அளித்துள்ள பதில் இதோ:


 உங்கள் கருத்துக்கு நன்றி.. இனி வரும் நாட்களில் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கிறோம்.

தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி,


----------------------------------------------------------------------------------------------------------------
இதில் கொடுமை என்னவென்றால் இதை ஓளிபரப்பிய அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மறுஒளிபரப்பும் செய்யப்பட்டது புதிய தலைமுறையில்...-------------------------------------------------------------------------------------------------------------


0 comments:

Post a Comment

Kindly post a comment.