ஆங்கிலமும் தெரியாது; தமிழும் புரியாது: - நலங்கிள்ளியின் ஆதங்கம் ! ( ஆனந்த .விகடனில். பேட்டி
தமிழ் வழிக் கல்விக்கும் , அனைவருக்கும் தரமான கல்விக்குமாக ஏராளமான நூல்கள் எளிய தமிழில் எழுதிவரும் நலங்கிள்ளி, மதுரைக்காரர். கணேஷ்ராமாக இருந்து, பாபர் மசூதி இடிப்பிற்குப் பிரசாரம் செய்தவர். பின்னாட்களில் நாத்திகத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்து, நலங்கிள்ளியானது, ஆச்சர்யமான விஷயம்தான்
இளம் தலைமுறையின் தமிழ் வழிக் கல்விக்குப் பங்களித்துள்ள நலங்கிள்ளி, ஸ்டீபன் ஹாக் கிங்கின் “ எ ஃப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் “ என்ற ஆங்கில நூலினை, ( A Brief History of Time ) " காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனத் தமிழாக்கியவர்.
இயற்பியல் முழுத்தொகுப்பாக அமெவில்ரிக்கா கால்டெக் பல்கலைக் கழகம் வெளியிட்ட THE MECHANCAL UNIVESE என்னும் பெரு நூலின் இரு தொகுத்களை “ இயந்திர அண்டம் “ என்று தமிழுக்குக் கொண்டு வந்தவர், சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் வசிக்கும் இவரைப்பற்றிய ஓர் அறிமுக வாக்கு மூலம் இது.
“வீட்டில் நான்தான் மூத்தவன். ,முற்போக்கு மாற்றங்களை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கி அதிகரியான என் அப்பா மாற்றல் வாங்கிக்கொண்டு திருநெல்வேலி போனார். போகும்போது “நீ எங்களுடன் வரவேண்டாம் என்று என்னை மதுரையில் விட்டுவிட்டு அவர்கள் மட்டும் கிளம்பிச் சென்றார்கள் . அப்போது மதுரை செல்லூரில் செல்லமுத்து என்னும் மார்க்சியவாதியின் அறிமுகம் கிடைத்தது.அங்கு வைகை ஆற்றங்கரை ஓரக் குடிசைகளில் நெசவாளத் தோழர்களோடு தங்கிப் பழகினேன். தேநீர்க்கடை அரசியல் விவாதமும், தோழர்களுடனான அரசியல் உரையாடல்களும், தமிழகத்தில் ஒரு மாற்றுக் கல்விப் பண்பாட்டைக் கொண்டு வந்தால் ஒழிய நமது எதிர்காலத் தலைமுறையை முன்னேற்ற இயலாது என்பதை உணர்த்தியது. அறிவியல் தொடர்பான நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டினேன். அதற்குத் தோழர் தியாகு உறுதுணையாக நின்றார்.” என்ற நலங்கிள்ளி தமிழகக் கல்விச் சூழல் பற்றி இங்கே பேசுகிறார்.
“மெக்காலே வகுத்த நமது கல்வி முறையின் நோக்கம் முழுக்க ஆங்கிலச் சிந்தனையை உருவாக்கி, வெள்ளையர்களுக்காக வேலை செய்யும் கூ;லியை உருவாக்குவதற்குத்தான் இன்று தமிழ் தெரியாத தலைமுறை ஒன்று உருவகி வருகின்றது. சரி, தமிழ்தான் தெரியவில்லை; ஆங்கிலமாவது முழுமையாகத் தெரிகிறதா ? ஆங்கிலமும் அரைகுறை என்பதே இன்றைய மனப்பாடக் கல்வியின் கசப்பான விடை.
பள்ளியில் ‘கூம்பு வெட்டுப் பரப்பளவு காண்க” என்று கேட்கிறார்கள். இதற்கான சூத்திரத்தை உருப்போட்டு எப்படியோ 13 மதிப்பெண் வாங்கிவிடுகின்ற மாணாக்கரை விட்டுவிடுவோம். . இதைக் கற்றுக் கொடுக்கிற ஆசிரியருக்கே கூம்பு வெட்ட்டுப் பரப்பளவை ஏன் கணக்கிடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெரியாது.
கெப்னர் என்ற வானியல் அறிவியலாளர், தான் கண்டுபிடித்த கோள்கள் இயக்க விதி ஒன்றை நிரூபிக்கக் கண்டு பிடித்ததுதான். கூம்பு வெட்டு விதி. இதப் புரிந்து படித்தால் மட்டுமே குழந்தைகளிடம் அறிவியல் குறித்த படைப்பியல் நோக்கு தழைத்தோங்க முடியும்.
தேயிலைத் தோட்டங்களுக்குக் கூலி அடிமைகளைக் கொண்டுசென்ற கங்காணிகளைப் போல , கார்ப்பரேட் கூலிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாகப் பள்ளி கல்லூரிகள் மாறிவிட்டன.
.இந்த 50 ஆண்டுகளில் ஆங்கிலப் பள்ளிகளின் பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை இரண்டு முக்கியமான அறிக்கைகள் மூலம் பார்ப்போம்.
PROGRAM FOR INTERNATIONAL STUDENT ASSESMENT - ( பிசா ) என்றதோர் அமைப்பு பிரான்சில் இயங்குகின்றது. மூன்று ஆண்டுகஉக்கு ஒரு முறை உலக மாணாக்கர்களிடையே ஓர் ஆய்வை நிகழ்த்துகின்றது. இந்தியாவில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தையும், அருணாசலப் பிரதேசத்தஒயும் தன் ஆய்வுக் களமாக எடுத்துக் கொள்கிறது.
பிசா சென் ஆண்டு தன் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வில் பங்கேற்றுக் கொண்ட உலக நாடுகள் 74-இல் , இந்தியா 73-வதாக இருந்தது.( கடைசி ,மார்க்குக்கு முந்திய மார்க்கு என்ற கதை ) ஐரோப்பிய நாடுஜளையும் பிந்தங்கிநின்ற சீனா, உலகிலேயே முதல் இடத்தைப் பிடித்துவிட்டது. .
பிசா ஆய்வுக்குழுவினர், இரத்ததானம் குறித்த துண்டறிக்கையைக் கொடுத்து வாசிக்கச் சொல்லிவிட்டு , அதிலிருந்து கேள்விகளும் கேட்டனர். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மருத்துவர் ஏன் இன்னொருவருக்குப் பயன்படுத்துவது இல்லை “ என்ற மிக எளிமையான வினாவிற்குக்கூட 90 சதனிகித மாணாக்கர்களால் பதிலளிக்க இயலவில்லை.
அடுத்து வந்த “அசர்” என்ற குழுவினரின் அறிக்கை “பிசா” அறிக்கையைவிட அதிர்ச்சி அளித்தது.ஏ.சி. கட்டடங்கள் எழுப்புவதாலோ, பல வண்ணச் சீருடைகள் அணிவதாலோ, ஆங்கில அறிவாலோ, தமிழ் அறிவுப் பெருக்கத்தாலோ, கல்வி அறிவு வந்து விடாது என்பதை இந்த அறிக்கைகள் உணர்த்துகின்றன. அதே நேரம் கல்வி அறிவில் ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத் தாழ்வு உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் குறைவாக இருப்பதாக “பிசா” கூறுகிறது இதனை “அசர்” அறிக்கையும் உறுதி செய்கிறது. அப்படியானால் இந்த விஷயத்திலாவது இந்தியா முன்னணியில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ? என்று கேட்ட கேள்விக்கு, நலங்கிள்ளியே அதற்கான காரணத்தையும் கூறினார்.
”வெறுமனே உருப்போட்டுப் படிக்கும் கல்வி முறையில் தமிழ் என்றாலும் ஆங்கிலம் என்றாலும் ஒன்றுதான். அதனால்தான் ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக இருக்கிறது. சுய சிந்தனைக்கு விரோதனமான கல்வி முறை இருப்பதால்தான் இன்று ஆங்கிலக் கல்வி மோகமே தலைவிரித்தாடுகிறது. இது பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு வ்ழிவகுத்திருப்பதோடு, சுய சிந்தனையே இல்லாத, எந்த மொழி அறிவும் இல்லாத ஒரு தற்குறித் தலைமுறையை உருவாக்கி விட்டது. தமிழில் நல்ல ஆளுமை பெறுவதே ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழித் திறமை வாய்ந்த ஒரு தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும்” என்றார், நலங்கிள்ளி.
ஆங்கிலம் குறித்து மக்களிடம் நிறைந்திருக்கும் தவறான நம்பிக்கைளை வெளிப்படுத்தும் விதத்தில், “ஆங்கில மாயை: என்ற நூலை எழுதியுள்ளார். இதனை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தைத் தமிழ் வழியில் மிகவும் எளிதான முறையில் கற்றுக் கொள்ளும் வண்ணம் புத்தகம் ஒன்றையும் எழுதி வருகின்றார். இது கிழக்கு பதிப்பக வெளியீடாக விடைவில் வெளிவரவிருக்கிறது.
நன்றிக்குரியோர் :-
ஆனந்த விகடன், 01-05-2013 இதழுக்காக, நலங்கிள்ளியை,
பேட்டி கண்டவர், டி. அருள் எழிவன்
0 comments:
Post a Comment
Kindly post a comment.