Saturday, February 9, 2013

1. அறிமுகம் : அ.இராமசாமியின் படைப்புக்கள் !







http://ramasamywritings.blogspot.in/p/blog-page_23.html

சமகாலத் தமிழ்ப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் பற்றித் தீவிரமான கட்டுரைகளை எழுதுவது. இவரது கட்டுரைகள், தொண்ணூறுகளுக்குப் பின் வந்த இடைநிலைப் பத்திரிகைகள் பெரும்பாலானவற்றில்  வெளிவந்துள்ளன. பின்னர் நூல்களாகத் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குப் படிக்கக் கிடைக்கின்றன.
தீர்க்கவாசகன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

உசிலம்பட்டியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் தச்சபட்டி என்னும் மலையடிவாரக் கிராமம் இவர் பிறந்த ஊர்.

படிப்பு: எழுமலை அரசு உயர்நிலைப்பள்ளி, திண்டுக்கல் டட்லி உயர்நிலைப்பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

பணியிடங்கள்:மதுரை, அமெரிக்கன் கல்லூரி,(1987-1989) , சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி, புதுவைப்பல்கலைக்கழகம் (1989-97), தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்(1997- ) வருகைதரு பேராசிரியராகத் தற்பொழுது போலந்து நாட்டு வார்சா பல்கலையிலும் பணியாற்றுகிறார்.

நூல்கள் : தனியாசிரியர்:

  2009  -- இலக்கியமும் வரலாறும் –நாயக்கர்காலம் ( முனைவர் பட்ட ஆய்வின் திருத்திய வடிவம்) உயிர்மை, சென்னை
• 2009 – வேறு வேறு உலகங்கள் (சமகால நிகழ்வுகள் குறித்து உயிரோசை இணைய இதழில் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுதி), உயிர்மை, சென்னை
• 2009 – திசைகளும் வெளிகளும் (சமகால நிகழ்வுகள் குறித்து தினமலர் – செய்திமலரில் எழுதிய 75 கட்டுரைகளின் தொகுதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
• 2008 – மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித்திலிக்கியம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள்), ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை
• 2007 – முன்மேடை, (அரங்கியல் மற்றும் நாடகங்கள் குறித்த கட்டுரைகள்) அம்ருதா பதிப்பகம், சென்னை
• 2007 – தமிழ் சினிமா – அகவெளியும் புறவெளியும் (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
• 2007 – நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், (பிம்ப உருவாக்கம் குறித்த ஆய்வு நூல்) பாரதி புத்தகாலயம், சென்னை
• 2005 – பிம்பங்கள் அடையாளங்கள் (வெகுமக்கள் பண்பாடு குறித்த கட்டுரைகள்), உயிர்மை, சென்னை
• 2004 – ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள், (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
• 2002 – அலையும் விழித்திரை, (வெகுமக்கள் பண்பாடு, ஊடகங்கள் குறித்த கட்டுரைகள்), காவ்யா, பெங்களூர்
• 2002 – வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை
• 2001 – சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி
• 1998 – ஒத்திகை, (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல்,    
• 1995 – நாடகங்கள் விவாதங்கள், (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி

நூல்கள் :தொகுப்பாசிரியர்:

• 2009 – தேற்றமும் தெளிவும் – பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
• 2007 – நள்ளிரவு வெக்கை, அம்பேத்கரியல் மையம் வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
• 2002 – திறனாய்வுத் தேடல்கள் – கட்டுரைகள்.(இணை ஆசிரியர்கள் – ந. முருகேசபாண்டியன், பா. ஆனந்தகுமார்) பாரதி புத்தக நிலையம், மதுரை
• 1998 – பின்னை நவீனத்துவம் – கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் (இணை ஆசிரியர் – தி.சு. நடராசன்) விடியல், கோவை
• 1992 – கனவைத் தொலைத்தவர்கள் – ஐந்து இளைஞர்களின் கவி

0 comments:

Post a Comment

Kindly post a comment.