Friday, February 22, 2013

2005 முதல் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் !

இந்தியாவில் 2005-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை 24 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்பு விவரங்கள்:

2005: அக்டோபர் - தில்லியில் உள்ள மார்க்கெட் பகுதியில் 3 குண்டுகள் வெடித்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.

2006: மார்ச் - உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை - மும்பையில் ரயில்களில் குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 200 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

செப்டம்பர் - மலேகானில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.

2007: பிப்ரவரி - இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 66 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மே - ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் - ஹைதராபாதில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் - ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்தனர்.

2008: ஜனவரி - ராம்பூரில் சிஆர்பிஎஃப் முகாமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

மே - ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூலை - பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜூலை - ஆமதாபாதில் இரண்டு மணி நேரத்தில் தொடர்ச்சியாக 20 குண்டுகள் வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் - தில்லியில் 6 குண்டுகள் வெடித்ததில் 26 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் - தில்லியில் மார்க்கெட் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் - குஜராத் மாநிலத்தில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

செப்டம்பர் - மகாராஷ்டிரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் - இம்பாலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் - அசாமில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 77 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நவம்பர் - மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

2010: பிப்ரவரி - புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர் - வாராணசியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. 25 பேர் காயமடைந்தனர்.

2011: ஜூலை - மும்பையில் 3 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செப்டம்பர் - தில்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.

2012: ஆகஸ்ட் - புணேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார்.                                                                                                                                  
நன்றி :- தினமணி, 22-02-2013                                                                                                                              



0 comments:

Post a Comment

Kindly post a comment.