Wednesday, January 16, 2013

இராணுவ வீரர் ஹேம்ராஜ் குடும்பத்துக்கு ரூ46 லட்சம் நிதி உதவி !


 டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கோரமாகக் கொல்லப்பட்டுத் தலை துண்டித்து எடுத்துச் செல்லப்பட்ட ஹேம்ராஜின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் ரூ46 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் குடும்பத்தினரைப் பாதுகாப்பு இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, மத்திய அரசு சார்பில் ஹேம்ராஜ் குடும்பத்தாருக்கு ரூ. 46 லட்சம் வழங்கப்படும் என்றார்.

மேலும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் ஆலோசித்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பெட்ரோல் பங்க் ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து ஹேம்ராஜ் குடும்பத்தினரைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்                                                                                                                                     
நன்றி :- ஒன் இந்தியா, 16-01-2013                                                                                                                               






0 comments:

Post a Comment

Kindly post a comment.