Friday, January 25, 2013

இன்று முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது !

மீலாது நபி, குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமையிலிருந்து (ஜனவரி 25) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27) வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மீலாது நபி, குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமையிலிருந்து (ஜனவரி 25) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27) வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீலாது நபி, குடியரசு தினம் மற்றும் வள்ளலார் தினம் ஆகிய மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த தினங்களில் மது விற்பனை செய்யக்கூடாது.

உத்தரவை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                               
நன்றி :- தினமணி, 25-01-2013                                             



0 comments:

Post a Comment

Kindly post a comment.