Saturday, November 3, 2012

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாளை தொடக்கம் !

சென்னை உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் , 04, 2012-ல் நடைபெறுகிறது.

அண்ணாநகர், சாந்தி காலனியில் உள்ள டாக்டர் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய அரங்கில் நடைபெற உள்ள தொடக்க விழாவில், நீதிபதி வி.ராமசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

விழாவில், சென்னை உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கின்னஸ் க.வீரபத்திரன், பொதுச் செயலாளர் மு.அரங்கசுவாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையர் சா.ஸ்ரீபதி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை, முன்னாள் உள்துறைச் செயலர் கே.மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்க உள்ள விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் செம்மொழி மற்றும் முத்தமிழ் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.                                                                                     

நன்றி :- தினமணி, 03-11-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.