Wednesday, November 14, 2012

ஷங்கரின் ”நண்பனுக்கு” எதிரான கருவைக் கொண்டு குமுதத்தில் வந்துள்ள “நண்பன் “ கதை !


ஒருபக்கக் கதை!- 21-11-2012 -எழுதியவர் :- எம்.பரந்தாமன்

    ”நண்பன்”    கதைக்கு நெட்டில் சுட்ட படம் !

சிணுங்கிய செல்போனை எடுத்தான் ரமேஷ்.

”ஹாய் ரமேஷ் ! நான் சிவா பேசுறேண்டா.”

“எந்த சிவா ?”

”நாலாங்கிளாஸ் படிக்கறப்ப எங்கப்பா மாட்டு வண்டியில பள்ளிக் கூடம் போவோமே !”

”ஆங்.. அவனா நீ .. நல்லாயிருக்கியா ? “

“எங்க நல்லாயிருக்கேன். கடன் வாங்கிக் கெட்டுப் போயி வீட்டை வித்துட்டு ஏரி புறம்போக்குல குடிசை கட்டிப் பொழிக்கிற அப்பா. எனக்கு அதுல இருக்கவே புடிக்கலடா. இஞ்சினியரிங் முடிச்சாலும் டேலண்ட் பத்தலைனு விரட்டியடிக்கிற கம்பெனிங்க. நீ.விப்ரோவில லட்ச ரூபா சம்பளத்துல ஜம்னு இருக்கிறதா கேள்விப் பட்டேன்.”

”ஹலோ நிறுத்துங்க. நீங்க எந்த சிவா ?”

”கொல்லம்பட்டி சிவாடா !”

”ஸாரி ஸார் ....ராங் நம்பர்.”                               

நன்றி:- குமுதம் 21-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.