Monday, November 5, 2012

”எதிர்காலம் என்பது என்ன நேரிடுகிறது என்பதல்ல. எதைப் பெறுகிறீர்கள் என்பதுதான்”’ -”விப்ரோ” -அசிம் பிரேம்ஜி


‘நீங்கள் தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் குறிக்கோளை அடையப் பாடுபடுங்கள். மிகச் சாதரணமானவர்களாலும் அசாதாரணமானவற்றைச் செய்ய முடியும்

‘எது உங்களை ஊக்குவிக்கிறதோ எது உங்களுக்குச் சவாலாய்த் தெரிகின்றதோ, அதனை உங்கள் குறிக்கோளாய்க் கொள்ளுங்கள்.

கடுமையாகவும், அறிவுக் கூர்மையோடும் உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பு பெரிய அளவில் உஙளுக்கு மன நிறைவை அளிப்பதாக இருக்க வேண்டும்.

இளந்தொழில் முனைவோர்கள் தங்கள் மீதெ நம்பிக்கையுடையவர்களாயிருப்பது முக்கியம். அந்த நம்பிக்கை ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது. கடுமையாய் உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும் ஒழுக்கவியலைப் ( ETHICS ) போற்றுவதும் அவசியம். அது சரியான பாதை வழியில் நடத்தும். சீரிய பண்புகளை நிலைப்படுத்திக் கொள்ள உதவும்.

புரிந்து கொள்வதற்கும், செய்வதற்கும் கடினமாக உள்ளதை ‘இது சிக்கலானது’ என்கிறோம். சிக்கல் ( COMPLEXITY ) என்பது பல உட்பகுதிகளக் கொண்ட ஒரு அமைப்பு. சிக்கலான ஒன்றுக்குள் எத்தனையோ வாய்ப்புக்கள் உள்ளடங்கியிருக்கும்.

உற்பத்தியின் தரத்தை, வெளிப்பாட்டின் தரத்தை எப்போதும் பராமரியுங்கள்.

கற்றுக் கொள்வதால் ஏற்படும் புலமை சீக்கிரமே வழக்கற்றுப் போய்விடும். எனவே, தொடர்ந்து படிப்பது, கருத்தரங்குகளில் கலந்து கொள்வது, தகவலறிவைப் புதுப்பித்துக் கொள்வது முக்கியம்.

வாய்ப்புக்களைச் சுறுசுறுப்பாய்க் கண்டறியுங்கள். அவற்றைக் கண்டிபிடித்ததும் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். எதிர்காலம் என்பது என்ன நேரிடுகிறது என்பதல்ல. எதைப் பெறுகிறீர்கள் என்பதுதான்.’                    

சாதனையாளர் அசிம் பிரேம்ஜி
( விப்ரோ நிறுவனம் வென்ற கதை )

நரேந்திரன் எழுத கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிப்புரிமை என்ற வார்த்தை இல்லாமல் யாம் கண்ட முதல் புத்தகம் இதுதான்.

கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை-600 017.

( வாய்ப்புக்கள் நிறைந்த புதிய பாதையில்- அசிம் பிரேம்ஜியின் தலைமைப் பன்புகள்- இளைய தலைமுறைக்கு ஓர் நற்செய்தி- தந்தையும் மகனும்- கட்டிக் காக்கும் ஆற்றல்- வியக்கத் தக்க மனிதர் )

52 பக்கங்கள், ரூபாய் 20/- ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டிய நூல்.








0 comments:

Post a Comment

Kindly post a comment.