Friday, November 30, 2012

ஒரு கிலோ அரிசி விலை ரூபாய் 100/-ஐத் தாண்டினால் நகரில் வாழ்வோர் என்ன செய்வர் ?

நன்றி :- ஆனந்த விகடன், 05-12-2012                 நன்றி :- ஆனந்த விகடன், 05-12-2012




பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் என 10 பேர் ஒன்று கூடினோம். ’தமிழக விவசாயிகள் தொழில் நுட்பக் கழகம்’ உருவானது. 2000-ல் இது நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம். எல்லோருமே விவசாயிகள் ஆனதால், அனுபவங்களை எடுத்துச் சொன்னோம். இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் முற்றிலுமாக விலக்கச் சொன்னோம்.பண்ணையில் கிடைப்பதை வைத்துத் தற்சார்புடன் விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் 15,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.

விவசாயிகளைக் கேட்டால், களை, பூச்சி இரண்டையும்தான் பெரிய பிரச்சினைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பூச்சிகளுக்கு முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவங்கள் உண்டு. பூச்சி மருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை.  

அப்புறம் பூச்சி மருந்து தெளித்து என்ன பயன்?

இதையும் தாண்டி எல்லா உயிரினங்களும் தலைமுறைகள்தோறும் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கின்றன. பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான். ஒரு வருடத்தில் பூச்சி 10 தலைமுறைகளையே கடந்திருக்கும் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகும். கடைசியில் பூச்சிக் கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்து விழுவார். பூச்சிகள் பறந்து போகும். இதுதான் இங்கு நடக்கிறது.

மண்ணில் சத்து குறையும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்தக் களைச் செடி முளத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரி செய்யப்படும். களையும் இல்லாமல் போகும்.

“ தமிழக விவசாயிகள் கழகம்” இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங்கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. “தாளாண்மை” என்ற சிற்றிதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, 4 ஏக்கர் நிலத்தில், நமக்காக, நமது நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைத்து, அதை விட அதிகமான வருவாய் ஈட்ட முடியும்.மன உளைச்சல் இல்லை, மருந்துச் செலவும் இல்லை. இளநீர் வெட்டிக் குடிக்கலாம்.இந்த மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் நமது வருமானம் லடச ரூபாயைத் தாண்டும்.

சர்வோதய இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, “இன்றுள்ள சூழலில் விவசாய விளைபொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கி கட்டுபடி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை.                                                                                                                                             

உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் இரவும் பகலும் உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறந்தது 4,000/- ரூபாய்க்கு வந்துவிடும். ஒரு கிலோ அரிசி ரூபாய் 100/-ஐத் தாண்டிவிடும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.
-------------------------------------------------------------------------------------------------------------
தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. அதுதான் இன்றைய உலகமயமாக்கலின் அடிப்படை. அதாவது ஒருபொருள் எங்கு விளைகிறதோ அங்கு பயன்படுத்தப்படக்கூடாது. தஞ்சையில் விளையும் நெல், அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலிய ஆப்பிள் சேலத்துக்கும் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், நாங்கள் இதை எதிர்க்கிறோம். விவசாய உற்பத்தி, விளை பொருட்களை உபயோகப்படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருத்தல் வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கருத்துக்கள் அனைத்தும் 
ஆனந்த விகடன் பத்திரிகையாளர், 
ாரி ம்பி  
தெருவிளக்கு பகுதிக்காக 
பாமயன்
என்ற விவசாயிடம்
திரட்டியற்றில் ஒரு பி..
---------------------------------------------------------------------------------------------------------------
மதுரை அருகில் உள்ள பாப்பநாயக்கன்பட்டியில், 20 விவசாயிகள் ஒருங்கிணைந்து, 40 ஏக்கரில்  பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதிலிருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன்படுத்தி, சட்டைகள் தைத்து விற்கின்றனர். தேங்காய் சிரட்டையில் பட்டன். ”துகில்” என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்கப்படும் காட்டன் சட்டைகளைவிட விலை குறைவுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------
வரகு, குதிரைவாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை விற்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
”எந்த ஒரு விவசாய விளை பொருளையும் மதிப்புக்கூட்டி விற்கவேண்டும்” என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதே கொள்கையைத்தான் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதற்கும் பயன்படுத்துகின்றனர். யார் அணுகினாலும் இதற்கான ஆலோசனை மற்ம் தொழில் நுட்பத்தையும் தருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதைச் சரி செய்ய எளிதான வழி, “ இரண்டு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து தரிசாகக் கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும்” என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள். விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடும் விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்” என்கிறார் பாமயன்.
----------------------------------------------------------------------------------------------------------------
 ஆங்காங்கே பரவலாக உள்ள வலைப்பதிவர்கள்  பாமயன் போன்றோரைத்

தேடிக்கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாமே ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.