நீலம் புயல் + மணிரத்தினம்+ ஏ.ஆர்.ரஹ்மான் = 03-12-2012-ல் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் இசையமைக்கும் காட்சி , எம்டிவியில் !
எம் டி.வி. நேரடி நிகழ்ச்சியில் ‘கடல்’ பாடலை வெளியிடுகிறார்
ஏ.ஆர்.ரஹ்மான்!
இயக்குனர் மணிரத்னம், ராவணன் படத்திற்கு பிறகு ‘கடல்’ என்ற படத்தை
இயக்கி வருகிறார். இதில், அலைகள் ஓய்வதில்லை மூலம் சினிமாவில்
அறிமுகமான கார்த்திக் மற்றும் ராதாவின் வாரிசுகளான கௌதம் மற்றும்
துளசி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை முழுவதும் கடல்
சார்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் படத்திற்கு இசைப்புயல்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான்
கூட்டணியில் தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களின் வாரிசுகள்
இணைந்து நடிப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஒரு பாடலை வரும் 3ம் தேதி உலகம் முழுவதும்
ஒரே நேரத்தில் வெளியிட மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இதற்கான
நிகழ்ச்சி எம்.டி.வியில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில்
ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை நேரடியாக இசையமைக்கவுள்ளார்.
முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் தொலைக்காட்சியில் நேரடியாக
இசையமைக்கவுள்ளதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன்
உள்ளனர்.தமிழகத்தில் சமீபத்தில் நீலம் புயல் தாக்கியது. இதனால் கடல்கள்
கொந்தளிப்பில் ஏற்பட்டது. இதனையும் பொருட்படுத்தாமல் மணிரத்னம்
மற்றும் நடிகர்கள் இப்படத்திற்கான காட்சிகளைக் கடலில் தைரியமாக
படமாக்கியுள்ளனர். இந்தக் காட்சி படத்தில் பெரிதும் பேசப்படும் என்று பட
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி :- தீக்கதிர், 07-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.