Saturday, October 27, 2012

அமெரிக்காவில் பாட்டியைக் கொன்று கடத்தப்பட்ட இந்தியக் குழந்தையும் படுகொலை: குடும்ப நண்பர் கைது



ஆந்திராவைச் சேர்ந்தவர் வெங்கட கொண்டரிசிவா. இவர் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலம் மாண்ட் கோமெர்ரி நகரில் தனது மனைவி   லதா பனுருவுடன் வசிக்கிறார். இவர்களது 10 மாதக் குழந்தை சான்வி வென்னா. தனது பேத்தி சான்வியை பராமரிக்க வெங்கட கொண்டாவின் தாயார் சத்யவதி வென்னா (61) கடந்த ஜுலை மாதம் அமெரிக்கா சென்றார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யவதி வென்னா தனது பேத்தியுடன் குடியிருப்பில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல்  சான்வியைக் கடத்த முயன்றது. அதைத் தடுத்த சத்தியவதியைக் கொலை செய்து விட்டு குழந்தை சான்வியைக் கடத்திச் சென்று விட்டனர். போலீசார்  வழக்குப் பதிவு செய்து குழந்தையைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை சான்வி வென்னாவும் படுகொலை செய்யப்பட்டாள். அவளது உடல் சாண்டியா கோவில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தின் அடித் தளத்தில் உள்ள பாத்ரூமில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெங்கட கொண்ட சிவாவின் குடும்ப நண்பர் ரகுநானியன் யானே தமூரி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

குழந்தை சான்வியைக் கடத்திய நபர் யானேதமூரி ரூ.27 லட்சம் பிணையத்தொகை கேட்டு  மிரட்டியுள்ளார். குழந்தையின் முகத்தில் கைக்குட்டையால் அழுத்தி மூச்சுத் திணறவைத்துக் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.                                                                

நன்றி :- மாலை மலர், 27-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.