மத்திய மந்திரி சபையில் புதிதாகச் சேர்க்கப்பட வேண்டியவர்கள், நீக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இலாகா கொடுக்கப்பட வேண்டியவர்கள் பற்றி கடந்த சில வாரங்களாகப் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தி வந்தார்.
நேற்று இது தொடர்பாகப் பிரதமர் மன்மோகன்சிங்கைக் காங்கிரஸ் தலைவர் சோனியா சந்தித்துச் சுமார் 2 மணி நேரம் பேசினார். இன்று சனிக்கிழமை மீண்டும் மன்மோகன்சிங்கும், சோனியாவும் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தனர். அப்போது மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்தத் தகவல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய மந்திரிசபை நாளை மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளைக் காலை 11.30 மணிக்கு மந்திரி சபை மாற்றத்துக்கான அறிவிப்பு வெளியாகும்.
இதையடுத்து, புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள். இதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி :- மாலை மலர், 27-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.