Sunday, October 21, 2012

இணையதள மோசடி: அலறும் வித்யாபாலன்!





சமூக வலைத் தளங்களில், உறுப்பினராகச் சேர்ந்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம், இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.

நடிகர், நடிகைகளும், சமூக வலைத் தளங்களில் இணைந்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

 பாலிவுட் நடிகை வித்யா பாலன், சமீபத்தில் ஒரு விழாவுக்குச் சென்றபோது சிலர், "அந்த வலைத் தளத்தில்,  நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், அருமையாக இருந்தன. எங்களின்  கேள்விகளுக்கு உடனடியாக பதில்  அளித்தது, அதை விட அருமை என்றனர்.

இதைக்கேட்டதும், வித்யாவுக்குத் தலை சுற்றி விட்டது. "எந்த சமூக வலைத் தளத்திலும், நான் இணையவில்லையே. எனக்கு, அதற்கெல்லாம் நேரமே இல்லை.

யாரோ, போலியாக என் பெயரைப் பயன்படுத்தி, இணையத்தில் மோசடி  செய்கின்றனர். இதை நம்பாதீர்கள் என்று, புலம்ப ஆரம்பித்து விட்டார்.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளார்


நன்றி :- தினமலர், 21-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.