தஞ்சாவூர்: கோவில் யானை, கோமதி , ஆசிரியரைத் தாக்கிக் கொன்றது
கும்கோணம் அருகே உள்ள ஆடுதுறைப் புதூரைச் சேர்ந்தவர் சேகர். திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அம்பலவாணி தேசிக நடுநிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இன்று சேகர் மகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமான யானை நிற்கும் இடம் வழியாகச் சென்றார். அப்போது திடீரெனக் கோவில் யானை கோமதி, அவரைத் துதிக்கையால் பிடித்து இழுத்தது. பின்னர் தூக்கி வீசியது.
இதில் சம்பவ இடத்திலேயே சேகர் பரிதாபமாக இறந்தார். ஆசிரியரை யானை தூக்கி வீசிக் கொன்ற சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. யானை தூக்கி வீசிக் கொன்ற சேகருக்குக் கீதா என்ற மனைவி உள்ளார். இவர் புதூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து உள்ளார்.
நன்றி :- மாலைமலர், 27-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.