செவ்வாய்க் கிரக மணலில் ஒளிரும் பொருள் !
அமெரிக்காவின் “நாசா” மையம் செவ்வாய்க் கிரகத்துக்குக் கியூரியாசிட்டி என்ற ஆய்வுக் கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலை நிறுத்தப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தைப் போட்டோக்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது.
அங்கு பாறையை வெட்டி எடுத்துப் பல கோணங்களில் போட்டோ எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் தற்போது முதன் முறையாகச் செவ்வாய்க் கிரகத்தின் மணலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகிறது. அது குறித்த போட்டோவில் வெள்ளை நிறத்தில் ஒளிரும் மின்னக் கூடிய பொருள் இருப்பது தெரிந்தது.
இது நாசா விஞ்ஞானிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு எடுத்து அனுப்பப்பட்ட போட்டோவில் இது போன்று ஒளிரும் பொருள் தெரிந்தது. அப்போது இது கியூரியாசிட்டி விண்கலக் கருவியின் உடைந்த பாகமாக இருக்கலாம் எனக் கருதினர்.
தற்போது மணல் போட்டோவிலும் ஒளிரும் பொருள் தெரிவதால் அது செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ஒரு வித்தியாசமான கனிமப் பொருள் எனக் கணித்துள்ளனர். எனவே, அது குறித்து ஆய்வு நடத்த செவ்வாய்க் கிரகத்தின் மற்றொரு பகுதியில் மணலை வெட்டி எடுத்து ஆய்வு செய்யுமாறு கியூரியாசிட்டி விண்கலத்துக்கு விஞ்ஞானிகள் கட்டளை பிறப்பித்துள்ளனர்.
நன்றி :- மாலை மலர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.