Wednesday, October 24, 2012

இந்தியர் ஒருவர் உள்பட 6 பேரை புதிய கார்டினலாக அறிவித்தார் போப் !



இந்தியா, நைஜீரியா, லெபனான், பிலிப்பைன்ஸ், கொலம்பியா, மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மதகுருக்கள் 6 பேரைப் புதிய கார்டினலாக, போப் 16-ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார்.

 கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதி சீரோ மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் பேசிலியோஸ் கிளீமிஸ் தொட்டும்கல், புதிய கார்டினல்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தனது வாராந்திர பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று திடீரென இதற்கான அறிவிப்பை வெளியிட்ட போப், இந்த நியமனங்கள் பகுதி வாரியான பங்களிப்புக்கு உதவும் என்றார்.

புதிய கார்டினல்களின் பெயர்கள் பின்வருமாறு:

மான்சிக்னார் ஜேம்ஸ் ஹார்வி (அமெரிக்கா),

ஜான் ஒலோரன்பெமி (நைஜீரியா),

ருபென் சலசார் கோமஸ் (கொலம்பியா),

லூயிஸ் ஆன்டனியோ டேகிள் (பிலிப்பைன்ஸ்),

பெக்காரா பட்ரோஸ் ராய் (லெபனான்)

பேசிலியோஸ் கிளீமிஸ் தொட்டும்கல் (இந்தியா).                                             

நன்றி :- மாலைமலர், 24-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.