Thursday, October 18, 2012

26-10-2012 -ல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் மழை பெய்யுமா ?




நமது வானிலையாளர்கள் 48 மணி நேரத்தில் பருவ மழை பெய்யத் துவங்கும் என்று அறிவித்தார்கள். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால்  நன்றாகப் பெய்யத் துவங்கியதுபோல் ஆரம்பித்த மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. வானிலையாளர் அறிக்கைமேல் முழுமையாக நம்பிக்கை கொள்வோம். எது எப்படி இருந்தாலும் இயற்கையை மனிதன் ஒருபோதும் வெற்றி கொள்ள இயலாது. அறிவின் மாட்சியால் இயற்கையைத் தன் வளர்ச்சிக்குச் சற்றுப் யனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இயலும். அவ்வளவுதான்.!
.
ஆனால்,. தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து ஓர் தகவல் கிடைக்கின்றது. வருகின்ற 26 தேதி தமிழகமே திணறும் வகையில் மழை பெய்யும் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார். அண்மையில் அவர் சொன்ன சில விஷயங்கள் என் வாழ்க்கையில் பலித்துவிட்டன.
எதிர்பாராத விதமாக முக்கியமானவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில், டெல்லியில், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கும். என்றார். அவ்வாறே நடந்தது.

திடீரென்று திருச்செந்தூர் புறப்பட்டுச் செல்வாய் என்றார் அதுவும் நடந்தது. திட்டமிடாப் பயணமாக நெல்லை நவ திருப்பதிப் பயணம் அமையும் என்றார் அதுவும் நிகழ்ந்தது.

தாய் வழி மூதாதையர் ஊருக்குச் செல்லவேண்டும் என்ற உனது  நீண்டநாள் ஆசையும் நிறைவேறும் என்றார். அதுபடியே, திருப்புடைமருதூர் செல்லும் வாய்ப்பும்  ஒருநாள் மாலையில் கிடைத்தது. சென்ற அன்று அங்கே நல்ல மழையும் பெய்தது.

பிறந்த ஊருக்குச் செல்லவே கூடாது என்றிருந்த எண்ணத்தினை மாற்றிக்கொண்டு சென்று அப்பாவைப் பார்த்து வருவாய் என்றார் அதுவும் அப்படியே நடந்தது. அதுவும் அண்மையில் அறிமுகமான ஒருவலைப்பூ அன்பரின் சொகுசுக் காரில்; இலவசப் பயணமாக நிறைவேறியது.

எனவே, இப்பொழுது அவர் சொல்வதயும் நம்பச் சொல்லி மனம் வற்புறுத்துகின்றது. இருப்பினும் பகிரங்கமாக வலைப்பூவில் அறிவிக்கத் தயக்கமாகவும்  இருக்கின்றது..எனினும், எவ்வளவோ விருப்பங்களை வலைப்பூவில் சேகரித்துத் தரும் செய்திகளுக்கிடையே எழுதியதுபோல், இந்தத் தகவலையும் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மழை பெய்தால் அதைவிட வேறு மகிழ்ச்சி இருக்கவா முடியும் எல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . பொறுத்து இருந்து பார்ப்போம் இன்னும் 6 நாட்களுக்கு... இந்தத்தகவல் பதிவு செய்யும் நாள் : 18-10-2012,
நேரம் இரவு 10.23 PM

இன்றையச் சூழலில், பெய்யப்போகும் மழையை வேண்டாம் என்று சொல்ல  எவரும் உளரோ தமிழகத்தில் ?

1 comments:

  1. தமிழகத்தில் பெய்யப் போகும் மழையைப் பற்றிச் சொல்லும் பதிவில் வெளிநாட்டுப்படம் எதற்கு ஐயா? நல்ல பதிவு. அதிலும் கடைசி வாக்கியம் நிதர்சனம்!

    ReplyDelete

Kindly post a comment.